ShareChat
click to see wallet page
search
திருச்சிற்றம்பலம் தாரிடுகொன்றையொர் வெண்மதிகங்கை தாழ்சடை மேலவைசூடி ஊரிடுபிச்சைகொள் செல்வ முண்டியென்று பலகூறி வாரிடுமென்முலை மாதொருபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க் காரிடு மாமலர்தூவிக் கறைமிடற்றானடி காண்போம் பொருள்: கொன்றை மாலையையும், வெண்மதியையும், கங்கையையும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குச் செல்வம், உணவு என்று பலவாறு கூறிக்கொண்டு கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத் தூவிக் கறைமிடற்றானாகிய அப்பெருமான் திருவடிகளைக் காண்போம் முதலாம் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய திருவாழ்கொள்ளிபுத்தூர் பதிகம் சிவ சொந்தங்களுக்கு வணக்கம் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!” நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய்! பராபரமே! அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே! ஓம் நமசிவாய ❤️💛💚 🙏திருச்சிற்றம்பலம்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:36