ShareChat
click to see wallet page
search
சென்னையில் பஞ்சபூத ஸ்தலங்கள் -1 மண் சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மன் அருள் புரிந்து வருகின்றனர் சென்னையில்,வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே. அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம். இக்கோவிலில் உள்ள சப்த நாகத்தின் முன்புறம் விநாயகரும், பின்புறம் முருகனும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில் 1680 களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அலங்காரநாத பிள்ளை என்பவரால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தரான அலங்காரநாத பிள்ளை பிரதோஷம் தோறும் தவறாமல் காஞ்சிபுரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் தாமதமாக கோவிலுக்கு புறப்பட்ட அவர், வழியிலேயே களைப்படைந்து இந்து இடத்தில் ஓய்வெடுத்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்து அவருக்கு அம்பாளுடன் காட்சி தந்த சிவ பெருமான், இனி தன்னை காண சிரமப்பட்டு காஞ்சிக்கு வர வேண்டாம். தான் சுயம்புவாக இங்கு தோன்றி காட்சி தருவதாக கூறியதாகவும், அந்த இடத்தில் சிவ பெருமானின் ஆணையின் பேரில் அலங்காரநாதர் கோவில் எழுப்பியதாகவும் தல புராணம் சொல்கிறது. காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதர் கோயிலில் மூலவர் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த தலம் நவகிரக பரிகார தலமாகவும், சொந்த வீடு வாங்க விரும்புவோரின் கனவை நிறைவேற்றும் தலமாகவும் விளங்குகிறது. திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் இந்த தலம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது. அம்பாள் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. சிவனில் சக்தி அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார். தீய கனவு தொல்லையில் இருந்து விடுபடவும், நல்ல கனவுகள் பலிக்கவும் கருவறைக்கு முன்புள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூர அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். காலை 6 முதல் 12 வரையிலும்,மாலை 4 முதல் 9 வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும். 1, 21, 51, 57, 18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிது தொலைவில் அமைந்திருக்கிறது. மண் ராசிகளான ரிஷபம், கன்னி, மகர, இராசிகள் மற்றும் ரிஷப இலக்னம், கன்னி இலக்னம், மகர இலக்னத்தில், பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட, அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும். திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் மிகவும் பிரபலம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #தெரிந்து கொள்வோம்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat