ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-17 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. பரம தேவ பிதாவிடத்தில் அடியோர்களுக்காக, மிகவும் மனுப்பேசுகிற மத்தியஸ்தராகிய திவ்விய இயேசுவே! மிகுந்த நன்றியறிந்த மனதுடனே தேவரீரை ஆராதிக்கிறேன். திருச்சபையில் யாதோர் அதிகாரம் பெற்றவர்கள், உம்முடைய தேவாலயங்களில் தேவரீருக்குச் செய்யப்பட்ட, சங்கையீனமான அநாசாரங்களைத் திருத்தாமலும், கண்டியாமலும் விட்ட அசதி, அசட்டைத் தனத்துக்குப் பரிகாரமாக, அடியேன் பரிசுத்த மறைஆயர்களும், சிரேஷ்ட குருக்களும், தேவரீருடைய ஊழியத்திற் கொண்ட அணுநுணுக்கமான கவனத்தையும், சுறுசுறுப்புள்ள விசாரப் பத்தியையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் செபம்: என் ஆன்மாவைத் திருமுழுக்கினால் தூய்மையடையச் செய்த பரிசுத்த ஆவியே! என் இதயத்தை என்றும் உமக்கு ஏற்புடைய இல்லமாக்கியருளும். உறுதிபூசுதலின் வழியாக, என் இதயத்தைத் திடப்படுத்திய பரிசுத்த ஆவியே! உலகம், உடல், அலகை ஆகிய என் ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உலக சிற்றின்பங்கள், என் ஆன்மாவை சிறைப்பிடிக்காமல் என்னைப் பாதுகாத்தருளும். செபம், தவம் இவற்றில் நான் அன்றாடம் நிலைத்திருந்து, என் ஆன்ம எதிரிகளை வெற்றிகொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். என் ஆன்மா இழந்து போன அருளை, பாவ மன்னிப்பு என்னும் திருவருட்சாதனத்தின் வழியாகத் திருப்பிக் கொணரும் பரிசுத்த ஆவியே! என் பலவீனமான ஆன்மாவிற்கு வலுவூட்டி, பாவச் சேற்றில் என் ஆன்மா புதைந்து விடாதபடி, என் ஆன்மாவைப் பாதுகாத்தருளும். சோதனை வேளையில், என் ஆன்மாவின் பகைவரை வென்றிட, எனக்கு ஆன்ம பலன் தாரும். பரிசுத்த கன்னி மரியாவின் பரிசுத்த உடலிலிருந்து, இயேசுவின் திருவுடலை உருவாக்கிய பரிசுத்த ஆவியே! அத்தாயின் அன்பையும், தாழ்ச்சியையும் நான் பெற்று, நற்கருணையில் இயேசுவை வரவேற்க, எனக்குத் துணையாக வரும். அதற்கேற்ப என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும். விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஆகிய புண்ணியங்களில் நான் சிறந்து விளங்கி, என் வாழ்நாள் முழுவதும் உமக்கே சேவை செய்வதற்கு, என் ஆன்மாவைத் தகுதியுடையதாக்கி அருளும். ஆமென். நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
✝️இயேசுவே ஜீவன் - Orok Orok - ShareChat