#✝️இயேசுவே ஜீவன்
*புனித சூசையப்பரை*
*நோக்கி ஜெபம், மன்றாட்டு*
*மற்றும் புகழ்மாலை*
🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
மகா பாக்கியம்பெற்ற அர்ச். சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம். தேவதாயாரான ஜென்ம பாவமில் லாமல் உற்பவித்த அர்ச். கன்னிமரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை சேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்
*🌷(விரும்பியதைக் கேட்கவும்.)🌷*
சேசுக்கிறீஸ்துநாதர் தமது இரத்தத் தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.
ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே! சேசுக்கிறீஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும். ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே! நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே! நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்திலிருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக. திவ்ய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித் துக் கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந் தீரோ அவ்விதமே சர்வேசுரனுடைய திருச்சபையை பசாசின் வலையிலும், எவ்வித ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் பரிசுத்தமாய்ச் சீவித்து பக்தியாய் மரித்துப் பரகதியின் முடிவில் லாப் பாக்கியம் பெற்று வாழும்படி கிருபை செய்ய உம்மை மன்றாடுகிறோம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*🙏🏻புனித சூசையப்பரிடம் மன்றாட்டு🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும்.
*-🙏🏻 ஆமென்.🙏🏻*
🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
புனித.சூசையப்பருக்கு
புகழ்மாலை
🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
🌷சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே கிருபையாயிரும்
🌷சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தாவீது ராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தேவதாயாரின் பத்தாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தேவ குமாரனை வளர்த்த தகப்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கிறீஸ்துநாதரை உற்சாகப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம தைரியசாலியான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தரித்திரத்தின் அன்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கன்னியர்களின் காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷குடும்பங்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷மரிக்கிறவர்களுக்குப் பாதுகாவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பசாசுக்களை நடுநடுங்கச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
🌻உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
🌻கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார். அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.
*மன்றாடுவோமாக*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சர்வேசுரா சுவாமி! உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக்கெட் டாத பராமரிக்கையினால் தெரிந்து கொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிற வராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற ஆண்டவரே.
*🙏🏻ஆமென்.🙏🏻*
திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
#✝️இயேசுவே ஜீவன்
*அர்ச். அந்தோனியாரைக்*
*குறித்து* *பதின்மூன்று*
*மன்றாட்டு*
🌷🌹🌷🌹🌷🌹🌷
அற்புதங்கள்
வேண்டுமானால் அர்ச்.
.. அந்தோனியாரிடம் போ.
🌷🌹🌷🌹🌷🌹🌷
*1. நீர் சாவை அகற்றுகிறீர்.*
வார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.
*2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர்.*
அர்ச். அந்தோனியாரே! சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.
*3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர்.*
அர்ச். அந்தோனியாரே! எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.
*4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர்.*
அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி.
*5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன.*
அர்ச். அந்தோனியாரே! பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி.
*6. நோயாளிகளைச் செளக்கியப்படுத்துகிறீர்.*
அர்ச். அந்தோனியாரே! நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி.
*7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது.*
அர்ச். அந்தோனியாரே! பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.
*8. நீர் சிறைச்சாலையில் அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர்.*
அர்ச். அந்தோனியாரே! சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும். பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி.
*9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர்.*
அர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி.
*10. நீர் காணாமற்போன சொத்தைத் திரும்பக் கண்டடையச் செய்கிறீர்.*
அர்ச். அந்தோனியாரே! காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி.
*11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன.*
அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்களைத் தற்காத்து இரட்சியும். பர. அருள்.திரி.
*12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன.*
அர்ச். அந்தோனியாரே! தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி.
*13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக.*
அர்ச். அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.
*பிரார்த்திக்கக்கடவோம்*
இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே! நிர்மல பரிசுத்தத்தின் உப்பரிகையே! தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும்.
சர்வேசுரா சுவாமி! தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது.
*ஆமென்.*
🌺🌻🌺🌻🌺🌻🌺
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
#✝️இயேசுவே ஜீவன் அந்தோனியாரிடம்.. செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டுகள்.!*
*_முதல் மன்றாட்டு:_*
பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, புனிதம் மிளிரும் லீலி மலரே , விலைமதிக்கப்படாத மாணிக்கமே , திருச்சபையில் ஒளிரும் விண்மீனே வாழ்க !பெரும் பேறு பெற்ற புனித அந்தோனியாரே , இறையன்பினால் சுடர் விட்டெரிகிற மெய்யான பக்திச் சுவாலகரே என் முழு இருதயத்தோடு உம்மை வணங்கி வாழ்த்துகிறேன் .
இறைவன் உமக்கு ஏராளமாய் அருளிய அனைத்து உதவி சகாயங்களுக்காக உம்மை துதிக்கிறேன். என் அன்புக்குரிய புனித அந்தோனியாரே , உமக்கு என் தோத்திரங்களை ஒப்புக் கொடுக்கிறதற்காக இதோ உமது திருஉருவத்தின் முன்பாக தாழ்ச்சியுடன் முழந்தாளிட்டு நிற்கிறேன். இறைவனுக்கு மிகவும் பிரியமான அன்பரே ,நீர் செய்திருக்கிற வாக்குறுதியை நினைத்தருளும். அடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது உருவத்தை வந்து சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தந்தையின் வல்லமையைக் காண்பித்தருள்வீரென்று நீர் எங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறீரே , நீர் இது வரையிலும் உமது வாக்குறுதியை இவ்வளவு பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீரே , தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லோரும் தாங்கள் கேட்ட உதவியை அடைந்தனரே!ஆகையால் நானும் என் நெஞ்சத்தை உமக்குத் திறந்து காட்டவும் , என் தேவைகளை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன் எடுத்துக் கூறவும் இந்த ஆலயத்தில் வந்திருக்கிறேன். உமது உருவத்தை உற்று பார்க்கும்போது எனக்கு கண்ணீர் ததும்புகிறது. ஆயினும் என் நெஞ்சம் மேல் நோக்கி எழும்புகின்றது. மாட்சிமை தாங்கிய அம்மேலான தலத்தினின்று நீர் என் பேரில் இரங்கியருளும். உமது கரத்தில் ஏந்திய திருக்குழந்தை இயேசுவின் மீது நீர் கொண்ட அன்பினைக் குறித்து நான் உம்மை கெஞ்சிக் கேட்பதேதனில் , என் தேவைகளையெல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லி அவரிடத்தில் எனக்காக மனுப்பேச வேண்டுமென்பதாம்.
என் அன்புக்குரிய புனித அந்தோனியாரே, எனக்கு உதவி செய்வது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது. என் வேண்டுதல் கேட்கப்படுவதற்காக இறைவனிடத்தில் நீர் பேசுவதொன்றே போதுமானது. உம் கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக்குழந்தை இயேசு உம் விண்ணப்பங்களைத் தள்ளிப்போட போவதில்லை. விண்ணகத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும் , உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதை கேட்கவும், ஆயிரமடங்கு அவர் ஆசையுள்ளவராயிருக்க மாட்டாரோ?
ஓ இயேசுவே ! உம் புனித அந்தோனியார் பெயரால் நான் உம்மை மன்றாடுகிறேன். ஓ அந்தோனியாரே! உம் நேச இயேசுவின் பெயரால் நான் உம்மை கெஞ்சி கேட்கிறேன்.
ஓ இயேசுவே ! புனித அந்தோனியாரே, உங்கள் கரங்களில் என் அனைத்து கவலைகளையும், அனைத்து ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். இவ்வுலகில் உங்கள் தூய உருவங்களை மரியாதையோடும், பக்தியோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு விண்ணகத்தில் என்றும் உங்களை முகமுகமாய்க் காண்கின்ற மேலான வரத்தைத் தந்தருளுங்கள்.
*- ஆமென்.*
*_இரண்டாம் மன்றாட்டு:_*
துன்புறுவோரின் உறுதுணையான நண்பராய் , துயருறுவோருக்கு ஆறுதல் உதவிகளை ஏராளமாய் பொழிகிறவராகிய , பேரு பெற்ற புனித அந்தோனியாரே! இத்தேவாலயத்தில் உம்மைத் தேடி வணங்க வருகிற பாவியின் மீது இரங்கியருளும். பொலோனியா நகர பெண்ணொருத்திக்கு ஒரு தடவை நீர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்தியருளும். தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை போய் தமது உருவத்தைச்
சந்தித்து வருவாயானால் என் மன்றாட்டு கையேற்றுக் கொள்ளப்பட்டதென்று நீ அறிந்து கொள்வாயென்று திருவுளம் பற்றினீரே ! இந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டி உமது உருவத்தை இக்கோயிலில் சந்திக்க வந்து, உமக்கு முன்பாக மண்டியிட்டு என் தேவைகளை சொல்லிக் காட்டுகிறேன்.
பெரும் பேறுபெற்ற தூயவரே! இரக்கம் நிறைந்த பாத்திரமே!தூய்மை முதலிய அனைத்து புண்ணியங்களும் விளங்கும் மாணிக்கமே! அடியேன் உம்மை வணங்குகிறேன். உம் உருவத்தின் முன் முழந்தாளிட்டு என் தேவைகளை உமக்கு சொல்லி காட்டி, உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன். உமது பீடத்திற்கு அருகாமையிலின்றி வேறெங்கே நான் உமது அருகில் நெருங்குவேன். தூயவராகிய நீர் என் கண்முன்பே நிற்பதைக் காண்பேனாகில், உம்மை கனப்படுத்த நான் எவ்வளவோ தீவிரத்துடன் ஓடி வருவேன். உம் திருப்பாதங்களை பணிந்து முத்தமிட எவ்வளவோ ஆசிப்பேன், உம்முடன் பேசவும் என் ஆவல் எவ்வளவோ பெரிதாயிருக்கும். இக்கிருபை எனக்குக் கிடையாததினாலல்லோ , உம்மைக் காணும் பேரு எனக்குக் கிடைத்தால் நான் உமக்கு எவ்வித மகிமைகளைச் செலுத்துவேனோ, அந்த மகிமைகளையே உமது உருவத்திற்குச் செலுத்த ஆசிக்கிறேன் .
ஆகையால் புனித அந்தோனியாரே! நான் உம்மை வணங்குகிறதுமல்லாமல் நான் உமக்கு செலுத்த வேண்டிய மரியாதையோடு உம்மை பணிந்து உம்மை நோக்குகிறேன். ஆன்மாக்களுக்கு உண்மையான ஆறுதல் தரும் உன்னதரான புனித அந்தோனியாரே! என் துன்மார்க்கங்களை முன்னிட்டு உமது ஆதரவை அடைய நான் தகுதியற்றவனென்பது முற்றிலும் உண்மை. எனினும் நீதிமான்களை மாத்திரமல்ல, மெய்யான பக்தியோடு திடமான நம்பிக்கையோடும் உம்மை நாடிவரும் பாவிகளையும், ஆறுதல் படுத்த சித்தமாயிருக்கிறீர். ஆகையால் என் நெருக்கடியான தேவைகளில் நான் அண்டி வந்து, என் முழு நெஞ்சத்தோடு உமது தயாளப் பெருக்கத்தை நோக்கி அபயமிடுகிறேன். என் வேண்டுதல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது. உமது இரக்கமுள்ள நெஞ்சமோ என் பெருமூச்சுகளைக் கேட்கக்கடவது.
ஓ என் அன்புக்குரிய தந்தையே! என் இன்னல்களை நீர் அறிவீர். நான் கேட்பதை கடவுளிடமிருந்து நீர் கொடுப்பீர். உலகமெங்கும் அதிசயிக்கப்படும் உமது இரக்கப்பெருக்கத்தை நான் கொண்டாட விடை கொடுப்பீர். என் மன்றாட்டை உமது கரங்களில் ஒப்புவித்து உமது பாதுகாவலில் வைக்கிறேன். என் விருப்பங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடும். அவர் அவைகளைத் தமது திருச்சித்தத்தின்படி கேட்பாராக.
*- ஆமென்.*
*_மூன்றாம் மன்றாட்டு:_*
பெரும் பேறுபெற்ற புனித அந்தோனியாரே!துன்புறுவோரின் ஆறுதலானவரே!எவ்வித பிணிகளையும் நிவர்த்தி செய்யும் சோர்வுறா மருத்துவரே, உலகமெங்கிலும் உம் புதுமைகளைப் பிரபலியமாய்ப் பேசி வருகிறார்கள். உள்ளபடியே உம் வல்லமையின் பெருமையே பெருமையாகும். நீர் உயிரோடிருக்கையில் அநேகமாயிரம் ஆன்மாக்களைத் திருத்தக் கடவுள் உம்மைத் தெரிந்து கொண்டார். விண்ணில் அவரோடு என்றும் அரசாளும் இத்தினத்திலே அனைத்து வல்லமையுள்ள கரத்தில் ஏராளமான புதுமைகளை செய்யுங் கருவியாக விளங்குகிறீர். நீர் அவரை மன்றாடுகையில் அவர் மனிதர்களை நன்மைகளினால் நிரப்ப சித்தமாகிறார்.
ஆகையால் துன்புறுவோருக்கு ஆறுதலானவரே, முழு நம்பிக்கையுடன் உம்மை மன்றாடுகிறேன். கடவுளிடத்தில் உமக்குள்ள மிகுந்த செல்வாக்கினைக் கொண்டு திடங்கொள்கிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு மனுபேசுகிறவராக அவரால் நியமிக்கப்பட்டிருக்கிறீர். நீர் என் வேண்டுதலுக்கு இரங்கி நான் உம்மிடத்தில் சொல்லிக் கொள்ளும் என் நெருக்கடியான இடறுகளில், என்னை ஆறுதல்படுத்தும்படி உம்மைக் கெஞ்சி கேட்கிறேன். திவ்விய பபாலனான இயேசுவின் முன் நீர் உமது கற்புள்ள இருதயத்தில் அனுபவித்த சொல்ல முடியாத பாக்கியத்தையும் , அத்திரு பாலன் உம் மீதுள்ள நேச நம்பிக்கையின் அடையாளங்களையும் காட்டுகையில், நீர் அனுபவித்த பேரானந்தங்களையும் பார்த்து உமது கரங்களில் ஏந்தின அந்நல்ல இயேசுவுக்கு, என் நியாயமான ஆசைகளை எடுத்துக் காட்டும்படி உம்மை மண்டாடுகிறேன். மீட்பர் இவ்வுலகில் உம்மை அனைத்து நன்மைகளாலும் நிரப்பினீரே!அவைகளைப் பார்த்து நீர் என்னை உம்முடைய பேரு பலன்களுக்குப் பங்காளியாக்கவும், நான் விரும்பும் உதவியை எனக்கு உறுதியாய் அடைந்து தந்தருள உம்மை பிராத்திக்கிறேன்.
ஓ ! மேலான புனித அந்தோனியாரே! உதாரணமுள்ள உம்மை பார்த்து நான் வேண்டிக்கொண்டது வீண்போகவில்லையென்று நான் உணரச் செய்தருள்வீராக. உமது பேரில் எனக்குள்ள பக்தி பற்றுதல் இதனால் அதிகரிப்பதுடன், உமது புனித நாமத்தை சகலருக்கும் முன்பாக நான் புகழ்ந்து கொண்டாடுவேன்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒலிவேத்து தோட்டத்தில் அவஸ்தையாயிருக்கையில், அவர் துவக்கி முடித்த மூன்று மன்றாட்டுகளுக்கு உண்டாயிருந்த நம்பிக்கையோடும், அமைந்த மனதோடும் நான் இதோ உமது திரு உருவத்திற்கு முன்பாக ஒப்புக் கொடுத்த மூன்று மன்றாட்டுகளையும் முடிக்க ஆசையாயிருக்கிறேன்.அவரது வாயினாலும், அவரது நெஞ்சத்தாலும் நித்திய பிதாவை நோக்கி அடியேன் அபாயமிட்டு சொல்லுகிறதாவது, என் தந்தையே!அனைத்தும் உம்மால் கூடியது, துன்பத்திற்குரிய இப்பாத்திரத்தை என்னிடத்தினின்று அகலச்செய்து நான் கேட்கும் காரியத்தை தயவோடு எனக்கு அளித்தருளும். தொடக்கத்திலும் இப்பொழுதும் என் மனதல்ல உமது திருவுளமே நிறைவேறக்கடவது.
*- ஆமென்.*
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்*
ஏப்ரல்-21
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
சம்மனசுக்களின் திவ்விய அப்பமென்னப் பட்ட இயேசுவே! தேவரீர் மனுமக்களுக்கு, திவ்விய போசனமாக உம்மைத் தந்தருளினதைப்பற்றி நன்றியறிந்த மனதோடே, தேவரீரைத் துதித்து ஆராதிக்கிறேன். தேவரீர் கற்பித்த ஒருசந்தி சுத்தபோசனைக் கட்டளைகளுக்கு விரோதமாய், மனிதர் கட்டிக்கொள்ளுகிற போசனப்பிரியம், லாகிரி முதலிய பாவங்களுக்குப் பரிகாரமாக, உம்முடைய பரிசுத்த முனிவர் தபோதனர்களின் மட்டசனத்தையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
பரிசுத்த ஆவியின் திருக்கொடைகளுக்காக நன்றி செபம்:
மகா பரிசுத்த பரிசுத்த ஆவியே, நான் அன்றாட கடமைகளை செவ்வனே நிறைவேற்றவும், எனது இலட்சியத்தை அடையவும், நீரே எனக்கு வழிகாட்டுகிறீர். எனக்கு எதிராக பிறர் செய்யும் துரோகங்களை மன்னித்து மறக்கும் மனவலிமையைத் தருபவர் நீரே. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், நீர் என் அருகிலிருந்து எனக்கு வழிகாட்டுகின்றீர். இதுபோல எனது அன்றாட வாழ்வில், நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றேன். நான் உம்மை விட்டு ஒருபோதும் பிரியாதிருக்கும்படி, உமது அக்னியின் ஆவியால் என்னை அணைத்துக் கொள்ளும். நான் என்றும் உம்முடன் இருந்து, உமது முடிவில்லா மகிமையில் பங்குபெறவே விரும்புகிறேன். எனக்கு ஊட்டமளிக்கும் பரிசுத்த ஆவியே, எனை என்றும் பிரியாத துணையாளரே, எளியேனின் எளிய உள்ளத்து ஆவலை ஆசீர்வதித்தருளும். ஆமென்.
நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது.
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை நாதர்*
பகுதி-15
*தேவநற்கருணையில் புனித சவேரியாரிடத்தில் நடந்த புதுமை!*
கிழக்கிந்திய நாடுகளின் அப்போஸ்தலரான புனித சவேரியார் தேவ நற்கருணையின் பேரில் மிகுந்த பக்தியாய் இருந்தார் . அந்த பக்தி காரணமாக அவரிடத்தில் சில புதுமைகள் நிகழ்ந்தன. ஒருநாள் அவர் பூசை செய்யும் போது தேவநற்கருணை உட்கொண்டவுடன் பூமியை விட்டு உயர நிற்கிறதை கோயிலில் இருந்தவர்கள் அனைவரும் கண்டார்கள்.
அவர் மக்களுக்குத் தேவநற்கருணை கொடுக்கிறபோது மற்ற குருக்களைப் போல் தேவநற்கருணைகுச்சங்கையாக முழங்காலிலே நின்று மக்களுக்கு தேவநற்கருணை கொடுப்பார். ஒருநாள் கோவை நகரில் இவ்வாறு ஏராளமான மக்களுக்கு தேவநற்கருணை கொடுக்கிறபோது முழங்காலில் இருந்தபடியே புதுமையாக பூமியை விட்டு மூன்று சாண் உயரத்தில் எழும்பி மக்கள் அனைவருக்கும் தேவநற்கருணை கொடுத்தார் .
கிறிஸ்தவர்களே! சிலர் தேவநற்கருணை வாங்கினவுடனே சற்று நேரமாகிலும் முழங்காலில் இராமல் இரண்டொரு நிமிடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் புனித சவேரியார் தேவநற்கருணைக்குக் காட்டிய சங்கையைக் கேட்டு மிகவும் வெட்கப்படுவார்களாக.
மிகுந்த பலவீனம் உள்ளவனை உயர்ந்த மலைமேல் ஏறச்சொன்னால் அவன் என்னால் முடியாதென்பான்; சிலநாட்கள் நல்ல உணவை உண்ட பிறகு அதன் வழியாக தனக்கு வந்த பலத்தினால் அவன் உயர்ந்த மலைமேல் எளிதாய் ஏறுவான் . சில கிறிஸ்தவர்கள் அநேக நாள் நன்மை வாங்காமல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் போல் வாங்குகிறர்கள் . அவர்களுடைய ஆத்துமம் பலவீனமுள்ளதாக இருக்கும். ஆனால் இப்படிபட்டவர்கள் ஒரு வருடத்துள்ளாக பலமுறை நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கினால் . அதன் வழியாக அவர்களுடைய ஆத்துமம் பலமடையும் . ஆனால் தக்க ஆயத்தத்தோடு தேவநற்கருணை உட்கொள்ள வேண்டும் .
அசீரணமுள்ளவன் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் பலன் வராது. இந்தக் குறை அவனுடைய வியாதிவழியாக வருகிறதேயல்லாமல் சாப்பிட்டதினால் அல்ல. அவ்வண்ணமே தக்க ஆயத்தமின்றி நன்மை வாங்குகிறவர்களுடைய ஆத்துமத்துக்கு தேவநற்கருணையினால் நன்மை விளையப் போவதில்லை .
#✝️இயேசுவே ஜீவன் இன்றைய புனிதர் †*
*(ஏப்ரல் 20)*
*✠ மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ் ✠*
*(St. Agnes of Montepulciano)*
டொமினிக்கன் மட தலைவி:
(Dominican Priores)
பிறப்பு: ஜனவரி 28, 1268
மான்ட்டெபல்சியனோ
(Montepulciano)
இறப்பு: ஏப்ரல் 20, 1317
மான்ட்டெபல்சியனோ
(Montepulciano)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
புனிதர் பட்டம்: கி.பி. 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)
முக்கிய திருத்தலம்:
புனிதர் ஆக்னெஸ் தேவாலயம், மான்ட்டெபல்சியனோ, சியென்னா, இத்தாலி
(Church of St. Agnes, Montepulicano, Siena, Italy)
நினைவுத் திருநாள்: ஏப்ரல் 20
புனிதர் ஆக்னெஸ், டொமினிக்கன் துறவற சபையைச் சார்ந்த அருட்சகோதரியும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.
ஆக்னெஸ், இத்தாலி நாட்டின் “மான்டெபல்சியானோ” (Montepulciano) அருகில் உள்ள "க்ராசியானோ"வைச் (Gracciano) சார்ந்த உயர் குடும்பத்தில் 1268ம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே இவர் சிறந்த கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருக்கு ஒன்பது வயது நடந்தபோதே நகரிலுள்ள 'Sisters of the Sack' என்று அறியப்படும் “பெண்களுக்கான ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்தில் (Franciscan monastery of women) இணைய தமது பெற்றோரின் அனுமதி பெற்றார். ஒன்பது வயதில் துறவற மடத்தில் இணைய அக்காலத்தில் அனுமதி இல்லையாகையால், இவருக்கு திருத்தந்தையின் விசேட அனுமதி கிடைத்தது. இம்மடத்தின் கன்னியர், மிகவும் கரடுமுரடான சீருடைகளை அணிந்தனர். எளிய, தனிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
அதன் பிறகு 1281ம் ஆண்டு, இவர் "ப்ரொசெனோ" (Proceno) நகரில் புதிதாக தொடங்கப்பட்ட துறவற மடத்திற்குச் சென்றார். 1288ம் ஆண்டு, தனது இருபதாம் வயதில் இவர் அந்த துறவற மடத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செப வாழ்வில் சிறந்து விளங்கினார். இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்தார்; அவரது வார்த்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.
"என் மேல் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் என்னைப் போன்று அதிசயங்களைச் செய்வர்" என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆக்னெசின் வாழ்க்கையில் சிறப்பான விதத்தில் உண்மையாகின. இவர் தனது வாழ்நாட்களிலேயே பல்வேறு அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார்.
ஆக்னெஸ், இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்கள் பலரின் மன நோய்களையும், உடல் நோய்களையும் குணப்படுத்தினார். இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பெருகச் செய்தது போலவே, இவரும் அப்பங்களைப் பலமுறைப் பெருகச் செய்திருக்கிறார்.
1306ம் ஆண்டு, மான்டெபல்சியானோ (Montepulciano) நகரிலுள்ள துறவற மடத்தின் தலைமைப் பொறுப்பேற்க ஆக்னெஸுக்கு அழைப்பு வந்தது. திரும்பி வந்த ஆக்னெஸ், முன்னெப்போதும் விட, தீவிர செப வாழ்வில் ஈடுபட்டார். இக்கால கட்டத்தில், எண்ணற்ற திருக்காட்சிகள் காணும் பாக்கியம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர், “சாண்டா மரியா நொவெல்லா” (Santa Maria Novella) எனும் பெயரில், தேவ அன்னைக்கு ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்பினார்.
இவருக்கு, டொமினிக்கன் சபை நிறுவனரான புனிதர் டோமினிக்கின் (St. Dominic Guzman) திருக்காட்சி கிட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஈர்க்கப்பட்ட இவர், டொமினிக்கன் சபையினர் பின்பற்றும் “அகுஸ்தீனிய சட்டதிட்டங்களை” (Rule of St. Augustine) பின்பற்றுமாறு தமது மடத்தின் அருட்சகோதரியரையும் ஊக்கப்படுத்தினார். உள்ளூரிலுள்ள குடும்பங்களிடைய நடக்கும் சண்டை சச்சரவுகளை அமைதிப் படுத்தும் பணிக்கும் இவர் அடிக்கடி அழைக்கப்பட்டார்.
1316ம் ஆண்டு, ஆக்னஸின் உடல்நலம் மிகவும் குறைந்துவிட்டது. அண்டை நகரமான சியான்சியானோ டர்மில் உள்ள வெப்ப நீரூற்றுகளில் குணப்படுத்தி வைப்பதாக இவரது மருத்துவர் பரிந்துரைத்தார். இவரது சமூகத்தின் அருட்சகோதரியர், மருத்துவரின் பரிந்துரையை ஏற்குமாறு வலியுறுத்தினர். மற்ற பலவகை நோயாளிகள் தங்கள் நோய்கள் குணப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஆக்னஸ் நீரூற்றுகளிலிருந்து எந்த ஆதாயத்தையும் பெறவில்லை. அவருடைய உடல்நிலை அத்தகைய அளவிற்கு தோல்வியுற்றது. அவர், தமது மடாலயத்திற்கு ஒரு நகரும் கட்டிலில் (stretcher) மீண்டும் செல்ல வேண்டியிருந்தது. இந்த மடத்திலேயே தாம் இறக்கும்வரை வாழ்ந்தார். 1317ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 20ம் நாளன்று, தமது நாற்பத்தொன்பது வயதில், இவர் மரித்தபோது, இவரது கைகளில் இருந்தும் கால்களில் இருந்தும் இனிமையான நறுமணம் வீசும் திரவம் ஒன்று கசிந்தது.
1726ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் (Pope Benedict XIII) இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். மான்டெபல்சியானோ நகர புனிதர் ஆக்னெசின் அழியாத உடல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்*
ஏப்ரல்-20
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
அடியோர்களுக்காக, உம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறதிலே பிரியப்படுகிற நித்திய குருவே! நன்றியறிந்த மனதுடனே, தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருடைய திருமறைக் குருக்களுக்கும், துறவியர், முனிவர், தபோதனர்களுக்கும், கன்னியர்களுக்கும் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, உமது மாறாத பொறுமையையும், சத்திய வேதபோதகர் அனைவரிலும், அப்போஸ்தலிக்குச் சற்குருக்களிலும் விளங்கிய, உண்மையான பக்தியுள்ள தைரியப் பற்றுதலையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட செபம்:
நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால், ஒவ்வொருவரும் திருமுழுக்கு பெறுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்" (திபா 2 : 38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. அதன்படி பரிசுத்த ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில்,
1. மூவொரு இறைவனில் உறுதியான விசுவாசம் கொள்வோம்.
2. பாவங்களுக்காக மனம் வருந்துவோம்.
3. பரிசுத்த ஆவியார் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தங்கியிருந்து நம்மை வழிநடத்த உருக்கமாக மன்றாடுவோம்.
(இந்த செபத்தை உறுதியான விசுவாசத்துடன் தினந்தோறும் 20 நிமிட நேரம் செபிக்கவும்)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, என் அன்பில் கலந்த கருணாகரனே! நீர் வாக்களித்தபடி, உமது பரிசுத்த ஆவியை என்மீது அனுப்பியருளும். உம் பரிசுத்த ஆவியின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எனக்கு ஏராளமாக வழங்கி என்னை புதுப்பித்தருளும். மூவொரு இறைவா, உமக்கு நன்றி! மூவொரு இறைவா, உமக்குப் புகழ் ! விண்ணுலகத் தந்தாய், உம் பரிசுத்த ஆவியை என் மேல் பொழிந்தருளும். நன்றி, தந்தாய்! நல்ல தந்தையே, என்றும் உமக்கே புகழ்.
ஆமென்.
நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது.
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை நாதர்*
பகுதி-14
*பகை உள்ளத்தோடு நன்மை வாங்கின வியாதிக்காரனுக்கு நேர்ந்த நிர்ப்பாக்கிய மரணம்!*
இஸ்பானிய தேசத்திலுள்ள கொர்டோவா பட்டணத்தில் இரண்டு பேர்களுக்கிடையே மிகுந்த பகை உண்டாயிருந்தது . அவர்கள் பகையை விட்டுச் சமாதானமாய்ப் போவதற்குக் குருக்கள் மற்றும் பெரியோர்களும் எத்தனை புத்தி சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை . இந்த இரண்டு பேர்களுள் அதிக பகையோடு உள்ளவன் கடின வியாதியில் விழுந்து அவஸ்தையாயிருந்தான் . அச்சமயத்திலே ஒரு சேசு சபை குருவை அழைப்பித்து அவரிடத்தில் தான் பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டுமென்றான் . அந்த குருவானவர் அவனைப் பார்த்து உன்னிடத்திலுள்ள பகையை விட்டு விரோதியோடு நீ சமாதானமாய்ப் போன பிறகு பாவசங்கீர்த்தனம் செய்யலாம் . அதற்குச் சம்மதியாதிருந்தால் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் சாவது தவிர உன் சரீரத்தை மந்திரித்த கல்லறையில் வைக்கவும் கூடாது என்றார் .
வியாதிக்காரன் " என் எதிராளி இங்கே இருந்தால் சமாதானமாய்ப் போவதற்கு தயாராயிருக்கிறேன்" . என்றான் .குருவானவர் மடத்துக்குப் போன அன்றிரவே இரு வாலிபர்கள் அந்தக் குருவிடம் போய் அவரைப் பார்த்து " நீர் தேவநற்கருணைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சர்வேசுரனுக்கு ஒரு ஊழியம் செய்ய எங்களோடு கூட வாரும் " என்று மன்றாடினார்கள் . அப்படியே உடனே வந்த குருவானவரை முன் சொல்லப்பட்டவனுடைய உடல் இருந்த கல்லறைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள் . அங்கே சேர்ந்தவுடன் அவர்கள் " நேற்று இறந்தவன் தன் விரோதியைப் பார்த்து எனக்கும் உனக்கும் பகையில்லை நீ செய்த குற்றமெல்லாம் பொறுத்தேனென்று வாயினால் மாத்திரம் சொன்னானேயல்லாமல் மனதால் பொறுக்கவில்லை .
அந்த பகையோடு பொய்யான பாவசங்கீர்த்தனம் செய்து சாவான பாவத்தோடு நன்மை வாங்கினான் . ஆனால் தேவநற்கருணை உள்ளே போகாமல் இந்த மட்டும் அவன் நாக்கின் மேல் இருக்கிறது . அதைத் தேவரீர் இப்போது எடுத்துக்கொண்டு போக வேண்டும் " என்று சொன்னார்கள்.
உடனே அவர்கள் கட்டளைப்படியே கல்லறை தானே திறந்தது . இறந்தவனுக்கு உயிர் வந்து எழுந்திருந்து நாவை நீட்டினான் . அதன்மேல் இருந்த தேவநற்கருணையைக் குருவானவர் பயத்துடன் கை நடுங்க எடுத்துப் பாத்திரத்துக்குள்ளே வைத்தார் . பிறகு அந்த இரண்டு பேரும் பூமியைக் காலால் உதைத்தவுடன் பூமி பிளந்து இறந்து போனவனுடைய உடல் அதில் விழுந்து மறைந்து போயிற்று . அந்த இரண்டுபேரும் எரியும் மெழுகுத் திரியைக் கையில் பிடித்துக் கொண்டு மகா தாழ்ச்சியோடு குருவானவரோடு கூடக் கோவில் மட்டும் போன பிறகு திடீரெனக் காணாமல் மறைந்து போனதைக் குருவானவர் கண்டு அவர்கள் வானதூதர்கள் என்று அறிந்து கொண்டார்.
கிறிஸ்தவர்களே ! சாவானபாவத்தோடு தேவநற்கருணை வாங்குவது மாபெரும் பாதகமாகும் . உங்களிடத்தில் பகை உண்டானால் மட்டுமல்ல, மனதாலும் சமாதானமாய்ப் போனபிறகு மாத்திரம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்க வேண்டும் . விரோதி பொல்லாதவன் நான் அவனோடு சமாதானமாய்ப் போவதற்கு அவன் தகுதியுடையவன் அல்ல என்று சொல்லிச் சில பேர்கள் சமாதானமாய்ப் போகமாட்டார்கள் . சமாதானமாய்ப் போக மனமில்லாமல் பாவசங்கீர்த்தனம் செய்பவன் பாவ மன்னிப்பு அடைவதில்லை.













