jepin
ShareChat
click to see wallet page
@4484599124
4484599124
jepin
@4484599124
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✝️இயேசுவே ஜீவன் *நற்கருணை மாலை* 🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 இது இயேசுவின் உடல் இது இயேசுவின் இரத்தம் இது இயேசுவின் உடலென்பதால் என் உடலில் வியாதி இல்லை இது இயேசுவின் இரத்தமென்பதால் என்னில் சோர்வில்லை இவை இயேசுவின் கண்கள் என்பதால் என் பார்வையில் பழுதில்லை இவை இயேசுவின் உதடும் நாவும் என்பதால் என் பேச்சில் பொய்யில்லை இவை இயேசுவின் கரங்கள் என்பதால் நான் கொடுப்பதில் மகிழ்வடைகிறேன் இவை இயேசுவின் கால்கள் என்பதால் நான் நன்மை செய்ய நடக்கிறேன் இது இயேசுவின் சிந்தனை என்பதால் என் திட்டங்களில் தெளிவுள்ளது இது இயேசுவின் உள்மனமென்பதால் எனது முடிவுகள் சரியானவை இது இயேசுவின் அடிமனமென்பதால் என் குறைகளெல்லாம் குணமடைகின்றன இது இயேசுவின் இயலென்பதால் நான் ஆவியானவரால் இயக்கப்படுகிறேன் -- ஆமென்.
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை நாதர்* பகுதி-20 *"தேவநற்கருணை வாங்கின ஒரு யூதப் பிள்ளை சூளையில் வேகாத புதுமை!"* கி.பி. ஐந்நூற்று ஐம்பத்திரண்டாம் வருடத்தில் கோன்ஸ்டாண்டினோப்பிள் பட்டணத்தில் ஒரு அதிசயமான புதுமை தேவநற்கருணை வழியாக நடந்தது . அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்குத் தேவநற்கருணை கொடுத்த பிறகு மீதியிருந்த அப்பத் துண்டுகளை மாசற்ற சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமிருந்தது . அப்படி பிள்ளைகளுக்குத் தேவநற்கருணைத் துண்டுகளைக் கொடுக்கும் போது , கண்ணாடி வேலைக்காரனாகிய ஒரு யூதனுடையபிள்ளை கிறிஸ்தவப் பிள்ளைகளோடு கலந்து தேவநற்கருணை வாங்கினான் . அவனுடைய தகப்பன் அந்தச் சேதியை அறிந்து கோபம் கொண்டு நெருப்பு நிறைந்த கண்ணாடிச் சூளையிலே தன் பிள்ளையைப் போட்டு சூளை வாயை மூடிவிட்டான் . அந்த பிள்ளையினுடைய தாய் தன் பிள்ளை எங்கே இருக்கிறதென்றும் எப்படிப் போனதென்றும் தெரியாமல் அழுது புரண்டால் இரண்டுநாளாக தேடிக்கொண்டுடிருந்தாள் . மூன்றாம்நாள் அவள் சூளையினருகில் இருக்கும்போது சூளைக்குள்ளே குழந்தையின் சத்தத்தைக் கேட்டாள் . கேட்டவுடனே சூளையின் வாசலைத் திறந்து பார்க்கும் போது அதில் தன்னுடைய பிள்ளை நெருப்பின் நடுவில் யாதொரு பொல்லாப்புமின்றி இருப்பதைக் கண்டாள் . அந்தப் பிள்ளை வெளியில் வந்தவுடன் தாய் அந்த நெருப்பில் எப்படியிருந்தாயென்று கேட்டதற்குப் பிள்ளை " சூளையின் வாயில் மூடப்பட்டவுடன் மகா நேர்த்தியான உடையணிந்து பிரகாசமுள்ள ஒரு பெண் சூளையிலே காட்சி தந்து நெருப்பை அணைக்கவும் எனக்கு சாப்பாடு கொண்டுவரவும் அடிக்கடி வந்து பிழைக்கச் செய்தாள் " என்று சொன்னான் . அவன் சொன்னதைக் கிறிஸ்தவர்களும்கேட்டு அவனுக்குக் காணப்பட்டவள் தேவமாதாவென்று கண்டு சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும்நன்றி செலுத்தினார் . தாயும் பிள்ளையும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள் . தகப்பனோ மனந்திரும்பாமலிருந்ததால் அரசனால் சாவுக்குத் தீர்வையிடப்பட்டான் . கிறிஸ்தவர்களே ! அக்காலத்தில் புத்தி விவரம் அறியாத பிள்ளைகளுக்கு மீதியான தேவநற்கருணைத் துண்டுகளைக் கொடுத்து வந்தார்களென்று கேட்டீர்களே . அந்த சிறு வயதில் ஞானஸ்நானத்தில் அடைந்த அருளுயிரையும் , பரிசுத்தத்தனத்தையும் பிள்ளைகள் காப்பாற்றி வருவதால் தேவநற்கருணையை அவர்களுக்கு கொடுத்தது ஞாயந்தானே . இதனால் நீங்கள் அறியவேண்டியதாவது . நீங்கள் தேவநற்கருணை வாங்குவதற்கு ஞானஸ்நானம் பெற்ற குழந்தையைப் போல் சுத்த இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும் . பாவத்தினால் அருளுயிரை இழந்துபோயிருந்தால் தேவநற்கருணை வாங்குமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து , மறுபடி அருளுயிரை அடையவேண்டும் .
✝️இயேசுவே ஜீவன் - ه  ه - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-26 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. இயேசுவின் திவ்விய இருதயமே! உமது அன்பின் திருவருட்சாதனமாகிய, ஆராதனைக்குரிய சற்பிரசாதத்தில் விசேஷமாய், தேவரீருக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, என்னை முழுதும் தேவரீருக்கு வசீகரமாக்கி, இன்று என் சிந்தனை, சொல், செயல்களையும், என் இன்ப துன்பங்களையும் எல்லாம், தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். இனி எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை மாத்திரம் நான் சிநேகிக்கவும், இவ்விதமாய் தேவரீருக்கு ஆறுதல் வருவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி. ஆமென். பிதாவிடமிருந்தும், சுதனிடமிருந்தும் புறப்படுகிறவரான பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். பிதாவுக்கும், சுதனுக்கும் சரிசமமானவராயிருக்கிற பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். பிதாவின் வாக்குறுதியாக இருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். மோட்ச பிரகாசத்தின் கதிரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். சகல நன்மைகளுக்கும் காரணராயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். பரலோக நீரின் சுனையே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். எரித்துப் பட்சிக்கிற நெருப்பாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். பற்றியெரியும் சிநேகமாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும். நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
✝️இயேசுவே ஜீவன் - Orok Orok - ShareChat
*ஞான உணர்த்துதல்.!* - அர்ச். ஜோஸப் பெஸ்கி (வீரமாமுனிவர் என அழைக்கப்படும் குருவானவர்) *_மரண பயங்கரம்.!_* பிறந்தவன் எவனும் இறக்க வேண்டும் என்று பாவத்துக்குத் தண்டனையாகச் சர்வேசுரன் கட்டளையிட்டிருக்கிறார். அந்தக் கட்டளைக்கு, அவருடைய திருக்குமாரன், தேவமாதா முதல் சகல மனிதரும் உட்பட்டு நடந்து கொண்டு வந்ததைக் கண்டு வருகிறோம். மனுஷன் ஒருவன் பிறக்கிறபோது, சந்தோஷமும், இறக்கிற போது துக்கமுமாயிருந்து, அவனவன் பிறந்த நாளை எழுதி வைத்துக் கொண்டு, அந்த நாளைக் கொண்டாடுவார்கள். இறக்கும் நாளைக் குறித்து ஒரு சிந்தனையும் இல்லை. நமது கண் எதிரில் சாகிறவர்களையும், முன்னே இறந்து போனவர்களையும் கண்டறிந்து, நமக்கும் இப்படி வருமே என்பதைச் சற்றும் நினைக்கிறதில்லை. இன்னான் செத்தான் என்கிற வார்த்தையைக் கேட்டவுடனே, அவனுக்காகக் கொஞ்சம் அங்கலாய்த்துப் பெருமூச்சு விட்டு, அப்புறம் மறந்துபோய் ஒன்றும் நினையாமல் இருக்கிறார்கள். அது எத்தன்மையதெனில், ஆற்றங்கரையிலுள்ள மரங்களிலே, ஓடி ஆடிப் பாய்கிற குரங்குகளிலே யாதொன்று தப்பித் தவறி ஆற்றிலே விழுந்து செத்தால், மற்றக் குரங்குகள் பல சேஷ்டைகளால் தங்கள் துக்கத்தைக் காண்பிக்கும். செத்த குரங்கை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் அது காணாப் பிணமாய்ப் போனால், அந்தக் குரங்குகள் மறுபடி முன் போலே ஓடி ஆடித் திரியும். வெடி சத்தம் கேட்டவுடனே கொக்கு குருவிகள் எல்லாம் பயப்பட்டுப் பறந்து ஓடிப் போகும். சற்று நேரம் பொறுத்து மறுபடியும் அந்த இடத்திலேயே வந்து கூடும். புத்தியில்லாத மிருகங்கள் இப்படிச் செய்கிறது அதிசயமல்ல. அறிவு, நினைவு, புத்தியுள்ள மனுஷன் மிருகங்களிலும் கடை கெட்ட மிருகமாய்ப் போகிறானே. அதற்கு அதிசயப்பட வேண்டும் அல்லோ ? ஆனால் எரேமியாஸ் என்பவர் மனுஷர் மரணத்தை நினைக்கும்படிக்குக் குயவன் செய்தொழில் இடத்திலே போய்ப் பாருங்கள் என்றார். அதிலே மண்கலம் வனைகிறதையும், உடைந்து போகிறதையும் பார்த்தால், சரீரமும் இப்படிப் போகிறதென்று நினைவு உண்டாகும். சாலமோன் என்கிறவரோ இழவு வீட்டுக்குப் போங்கள் என்றார். அவனவன் தேடின பொருள் எல்லாம் செத்தபின்பு அவனவனுக்கு உதவாமல் போகிறதைக் காணலாம். யாராவது ஒருவனைக் கொல்லத் தீர்வையிட்டுக் கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போகிற போது, அவன் சீவனுடனே போனாலும் சாகப் போகிறானென்று சொல்லுகிறதல்லாமல், சீவிக்கப் போகிறானென்று சொல்லுவாரில்லை. அடிமரத்திலே கோடரி வெட்டு விழுகிற போது மரம் விழுந்து போகுமென்று சொல்லுகிறதல்லாமல், வளருமென்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். அப்படியே உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனுஷனும் சாக வேண்டுமென்று சர்வேசுரன் தீர்வையிட்ட போதே, மனுஷன் நடக்க நடக்க, ஆயுள் குறைந்து அவனைப் புதைக்கும் குழி விரைந்து வரும். நேற்று நினைத்த நினைவு இன்றைக்கு இல்லை. நேற்றுப் பேசின பேச்சும் நேற்று தின்ற சாப்பாடும், செலவழித்த செலவும் இன்றைக்கு உண்டோ ? எல்லாம் கடந்து போச்சுது. இனிமேல் அவனவன் நினைக்கிறதும் செய்கிறதும் அழிந்து போகிறதன்றி ஒன்றும் நிலைநிற்கப் போகிறதில்லை. ஒருவனை உனக்கு எத்தனை வயதென்று கேட்டதற்கு, ஒரு வயதும் இல்லையென்றான். புண்ணியத்திலே செலவழித்த காலமே வயதாயிருக்குமே தவிர, மற்றது வீணாயிருக்கும். உன்னைக் கொல்லுகிறவர்களும், புதைக்கிறவர்களும் உன்னைத் தொடர்ந்து கொண்டு திரிகிறதைக் காணவில்லையோ? உன் உடலுக்குள்ளேயிருக்கிற வாதம், பித்தம், திமிர், என்கிற வியாதிகளே உன்னைக் கொல்லுகிற கொலைகாரராம். உன் மனதிலே இருக்கிற பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்கிற மூன்று தீக்குணங்களே உன்னை நரகக் குழியிலே புதைக்கக் கொண்டு போகிற தூதர்களாம். உன் உடலே உனக்குப் பகை. சீவிக்கிற பொருள் எல்லாம், உன்னைக் கொல்லுகிற ஆயுதம். உன்னுடைய ஊணுறக்கமே உனக்குச் சாவு. நீ நடக்கிற நடையும் உன்னுடைய சதையும் கொழுப்புமே உனக்குச் சத்துரு. பஞ்ச பூதங்களே உனக்கு விரோதிகள். அசாத்திய வியாதி முந்நூறு உண்டென்றும், திடீரென சாகிற வகைகள் தொண்ணுாற்றேழு என்றும் சில சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கின்றது. வருத்தம், நகைப்பு, சந்தோஷத் தினாலும், மூச்சடைப்பு, முள் விக்கிக் கொள்ளுகிறதினாலேயும் சாவு வருகின்றது. ஒருவன் வீதியிலே, ஒருவன் வாசலிலே, ஒருவன் குதிரைமேலே, ஒருவன் பல்லக்கின் மேலே, இப்படி எண்ணிக்கை இல்லாத விதமாய்ச் திடீரென செத்துப் போகிறார்கள். கொலை செய்யப்படப் போகிறவன் சந்தோஷமாய்ச் சீவிக்கிறதெப்படி? விளையாட்டுக்களைக் கண்டால் சந்தோஷிப்பானோ? பொன், வெள்ளி, ஆபரணங்கள் தன் காலடியிலே விழுந்திருந்தாலும் எடுக்க மனம் வருமோ? சாகப் போகிற நினைவு பெரிதாயிருக்குமல்லாமல் வேறே என்ன நினைவு வரும்? அப்படி நீ சாகவிருக்கையிலே உனக்குச் சந்தோஷம் என்ன? நகைப்பு என்ன? கைவீச்சு என்ன ? ஒய்யார நடை என்ன? மண்ணோடு மண்ணாய்ப் போகிற உனக்கு வீடு வாசல், தோட்டந் துரவு, காணி பூமி. உடமை உற்பத்தி என்ன? உற்றார், பெற்றோர், சேர்ந்தார், சிநேகிதர் ஏது? சாவையும், அதினாலே வருகிற பொல்லாப்பையும் நினையாதபடி யினாலே மோசம் போகிறாய். நமது இனையத்தள முகவரி... www.catholictamil.com #✝️இயேசுவே ஜீவன் பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:45
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - அனபுடன இனிய 06008800 காலை அனபுடன இனிய 06008800 காலை - ShareChat
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - யோவான் 6:56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்  யோவான் 6:56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:28
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:22
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:40