ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் அந்தோனியாரிடம்.. செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டுகள்.!* *_முதல் மன்றாட்டு:_* பதுவைப்பதியரான புனித அந்தோனியாரே, புனிதம் மிளிரும் லீலி மலரே , விலைமதிக்கப்படாத மாணிக்கமே , திருச்சபையில் ஒளிரும் விண்மீனே வாழ்க !பெரும் பேறு பெற்ற புனித அந்தோனியாரே , இறையன்பினால் சுடர் விட்டெரிகிற மெய்யான பக்திச் சுவாலகரே என் முழு இருதயத்தோடு உம்மை வணங்கி வாழ்த்துகிறேன் . இறைவன் உமக்கு ஏராளமாய் அருளிய அனைத்து உதவி சகாயங்களுக்காக உம்மை துதிக்கிறேன். என் அன்புக்குரிய புனித அந்தோனியாரே , உமக்கு என் தோத்திரங்களை ஒப்புக் கொடுக்கிறதற்காக இதோ உமது திருஉருவத்தின் முன்பாக தாழ்ச்சியுடன் முழந்தாளிட்டு நிற்கிறேன். இறைவனுக்கு மிகவும் பிரியமான அன்பரே ,நீர் செய்திருக்கிற வாக்குறுதியை நினைத்தருளும். அடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது உருவத்தை வந்து சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தந்தையின் வல்லமையைக் காண்பித்தருள்வீரென்று நீர் எங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறீரே , நீர் இது வரையிலும் உமது வாக்குறுதியை இவ்வளவு பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீரே , தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லோரும் தாங்கள் கேட்ட உதவியை அடைந்தனரே!ஆகையால் நானும் என் நெஞ்சத்தை உமக்குத் திறந்து காட்டவும் , என் தேவைகளை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன் எடுத்துக் கூறவும் இந்த ஆலயத்தில் வந்திருக்கிறேன். உமது உருவத்தை உற்று பார்க்கும்போது எனக்கு கண்ணீர் ததும்புகிறது. ஆயினும் என் நெஞ்சம் மேல் நோக்கி எழும்புகின்றது. மாட்சிமை தாங்கிய அம்மேலான தலத்தினின்று நீர் என் பேரில் இரங்கியருளும். உமது கரத்தில் ஏந்திய திருக்குழந்தை இயேசுவின் மீது நீர் கொண்ட அன்பினைக் குறித்து நான் உம்மை கெஞ்சிக் கேட்பதேதனில் , என் தேவைகளையெல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லி அவரிடத்தில் எனக்காக மனுப்பேச வேண்டுமென்பதாம். என் அன்புக்குரிய புனித அந்தோனியாரே, எனக்கு உதவி செய்வது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது. என் வேண்டுதல் கேட்கப்படுவதற்காக இறைவனிடத்தில் நீர் பேசுவதொன்றே போதுமானது. உம் கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக்குழந்தை இயேசு உம் விண்ணப்பங்களைத் தள்ளிப்போட போவதில்லை. விண்ணகத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும் , உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதை கேட்கவும், ஆயிரமடங்கு அவர் ஆசையுள்ளவராயிருக்க மாட்டாரோ? ஓ இயேசுவே ! உம் புனித அந்தோனியார் பெயரால் நான் உம்மை மன்றாடுகிறேன். ஓ அந்தோனியாரே! உம் நேச இயேசுவின் பெயரால் நான் உம்மை கெஞ்சி கேட்கிறேன். ஓ இயேசுவே ! புனித அந்தோனியாரே, உங்கள் கரங்களில் என் அனைத்து கவலைகளையும், அனைத்து ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். இவ்வுலகில் உங்கள் தூய உருவங்களை மரியாதையோடும், பக்தியோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு விண்ணகத்தில் என்றும் உங்களை முகமுகமாய்க் காண்கின்ற மேலான வரத்தைத் தந்தருளுங்கள். *- ஆமென்.* *_இரண்டாம் மன்றாட்டு:_* துன்புறுவோரின் உறுதுணையான நண்பராய் , துயருறுவோருக்கு ஆறுதல் உதவிகளை ஏராளமாய் பொழிகிறவராகிய , பேரு பெற்ற புனித அந்தோனியாரே! இத்தேவாலயத்தில் உம்மைத் தேடி வணங்க வருகிற பாவியின் மீது இரங்கியருளும். பொலோனியா நகர பெண்ணொருத்திக்கு ஒரு தடவை நீர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்தியருளும். தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை போய் தமது உருவத்தைச் சந்தித்து வருவாயானால் என் மன்றாட்டு கையேற்றுக் கொள்ளப்பட்டதென்று நீ அறிந்து கொள்வாயென்று திருவுளம் பற்றினீரே ! இந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டி உமது உருவத்தை இக்கோயிலில் சந்திக்க வந்து, உமக்கு முன்பாக மண்டியிட்டு என் தேவைகளை சொல்லிக் காட்டுகிறேன். பெரும் பேறுபெற்ற தூயவரே! இரக்கம் நிறைந்த பாத்திரமே!தூய்மை முதலிய அனைத்து புண்ணியங்களும் விளங்கும் மாணிக்கமே! அடியேன் உம்மை வணங்குகிறேன். உம் உருவத்தின் முன் முழந்தாளிட்டு என் தேவைகளை உமக்கு சொல்லி காட்டி, உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன். உமது பீடத்திற்கு அருகாமையிலின்றி வேறெங்கே நான் உமது அருகில் நெருங்குவேன். தூயவராகிய நீர் என் கண்முன்பே நிற்பதைக் காண்பேனாகில், உம்மை கனப்படுத்த நான் எவ்வளவோ தீவிரத்துடன் ஓடி வருவேன். உம் திருப்பாதங்களை பணிந்து முத்தமிட எவ்வளவோ ஆசிப்பேன், உம்முடன் பேசவும் என் ஆவல் எவ்வளவோ பெரிதாயிருக்கும். இக்கிருபை எனக்குக் கிடையாததினாலல்லோ , உம்மைக் காணும் பேரு எனக்குக் கிடைத்தால் நான் உமக்கு எவ்வித மகிமைகளைச் செலுத்துவேனோ, அந்த மகிமைகளையே உமது உருவத்திற்குச் செலுத்த ஆசிக்கிறேன் . ஆகையால் புனித அந்தோனியாரே! நான் உம்மை வணங்குகிறதுமல்லாமல் நான் உமக்கு செலுத்த வேண்டிய மரியாதையோடு உம்மை பணிந்து உம்மை நோக்குகிறேன். ஆன்மாக்களுக்கு உண்மையான ஆறுதல் தரும் உன்னதரான புனித அந்தோனியாரே! என் துன்மார்க்கங்களை முன்னிட்டு உமது ஆதரவை அடைய நான் தகுதியற்றவனென்பது முற்றிலும் உண்மை. எனினும் நீதிமான்களை மாத்திரமல்ல, மெய்யான பக்தியோடு திடமான நம்பிக்கையோடும் உம்மை நாடிவரும் பாவிகளையும், ஆறுதல் படுத்த சித்தமாயிருக்கிறீர். ஆகையால் என் நெருக்கடியான தேவைகளில் நான் அண்டி வந்து, என் முழு நெஞ்சத்தோடு உமது தயாளப் பெருக்கத்தை நோக்கி அபயமிடுகிறேன். என் வேண்டுதல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது. உமது இரக்கமுள்ள நெஞ்சமோ என் பெருமூச்சுகளைக் கேட்கக்கடவது. ஓ என் அன்புக்குரிய தந்தையே! என் இன்னல்களை நீர் அறிவீர். நான் கேட்பதை கடவுளிடமிருந்து நீர் கொடுப்பீர். உலகமெங்கும் அதிசயிக்கப்படும் உமது இரக்கப்பெருக்கத்தை நான் கொண்டாட விடை கொடுப்பீர். என் மன்றாட்டை உமது கரங்களில் ஒப்புவித்து உமது பாதுகாவலில் வைக்கிறேன். என் விருப்பங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடும். அவர் அவைகளைத் தமது திருச்சித்தத்தின்படி கேட்பாராக. *- ஆமென்.* *_மூன்றாம் மன்றாட்டு:_* பெரும் பேறுபெற்ற புனித அந்தோனியாரே!துன்புறுவோரின் ஆறுதலானவரே!எவ்வித பிணிகளையும் நிவர்த்தி செய்யும் சோர்வுறா மருத்துவரே, உலகமெங்கிலும் உம் புதுமைகளைப் பிரபலியமாய்ப் பேசி வருகிறார்கள். உள்ளபடியே உம் வல்லமையின் பெருமையே பெருமையாகும். நீர் உயிரோடிருக்கையில் அநேகமாயிரம் ஆன்மாக்களைத் திருத்தக் கடவுள் உம்மைத் தெரிந்து கொண்டார். விண்ணில் அவரோடு என்றும் அரசாளும் இத்தினத்திலே அனைத்து வல்லமையுள்ள கரத்தில் ஏராளமான புதுமைகளை செய்யுங் கருவியாக விளங்குகிறீர். நீர் அவரை மன்றாடுகையில் அவர் மனிதர்களை நன்மைகளினால் நிரப்ப சித்தமாகிறார். ஆகையால் துன்புறுவோருக்கு ஆறுதலானவரே, முழு நம்பிக்கையுடன் உம்மை மன்றாடுகிறேன். கடவுளிடத்தில் உமக்குள்ள மிகுந்த செல்வாக்கினைக் கொண்டு திடங்கொள்கிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு மனுபேசுகிறவராக அவரால் நியமிக்கப்பட்டிருக்கிறீர். நீர் என் வேண்டுதலுக்கு இரங்கி நான் உம்மிடத்தில் சொல்லிக் கொள்ளும் என் நெருக்கடியான இடறுகளில், என்னை ஆறுதல்படுத்தும்படி உம்மைக் கெஞ்சி கேட்கிறேன். திவ்விய பபாலனான இயேசுவின் முன் நீர் உமது கற்புள்ள இருதயத்தில் அனுபவித்த சொல்ல முடியாத பாக்கியத்தையும் , அத்திரு பாலன் உம் மீதுள்ள நேச நம்பிக்கையின் அடையாளங்களையும் காட்டுகையில், நீர் அனுபவித்த பேரானந்தங்களையும் பார்த்து உமது கரங்களில் ஏந்தின அந்நல்ல இயேசுவுக்கு, என் நியாயமான ஆசைகளை எடுத்துக் காட்டும்படி உம்மை மண்டாடுகிறேன். மீட்பர் இவ்வுலகில் உம்மை அனைத்து நன்மைகளாலும் நிரப்பினீரே!அவைகளைப் பார்த்து நீர் என்னை உம்முடைய பேரு பலன்களுக்குப் பங்காளியாக்கவும், நான் விரும்பும் உதவியை எனக்கு உறுதியாய் அடைந்து தந்தருள உம்மை பிராத்திக்கிறேன். ஓ ! மேலான புனித அந்தோனியாரே! உதாரணமுள்ள உம்மை பார்த்து நான் வேண்டிக்கொண்டது வீண்போகவில்லையென்று நான் உணரச் செய்தருள்வீராக. உமது பேரில் எனக்குள்ள பக்தி பற்றுதல் இதனால் அதிகரிப்பதுடன், உமது புனித நாமத்தை சகலருக்கும் முன்பாக நான் புகழ்ந்து கொண்டாடுவேன். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒலிவேத்து தோட்டத்தில் அவஸ்தையாயிருக்கையில், அவர் துவக்கி முடித்த மூன்று மன்றாட்டுகளுக்கு உண்டாயிருந்த நம்பிக்கையோடும், அமைந்த மனதோடும் நான் இதோ உமது திரு உருவத்திற்கு முன்பாக ஒப்புக் கொடுத்த மூன்று மன்றாட்டுகளையும் முடிக்க ஆசையாயிருக்கிறேன்.அவரது வாயினாலும், அவரது நெஞ்சத்தாலும் நித்திய பிதாவை நோக்கி அடியேன் அபாயமிட்டு சொல்லுகிறதாவது, என் தந்தையே!அனைத்தும் உம்மால் கூடியது, துன்பத்திற்குரிய இப்பாத்திரத்தை என்னிடத்தினின்று அகலச்செய்து நான் கேட்கும் காரியத்தை தயவோடு எனக்கு அளித்தருளும். தொடக்கத்திலும் இப்பொழுதும் என் மனதல்ல உமது திருவுளமே நிறைவேறக்கடவது. *- ஆமென்.*
✝️இயேசுவே ஜீவன் - ShareChat