#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #ரெங்கா! #renga-vamba! #டி. எம். சௌந்தரராஜன் பிறந்த நாள் இன்றைய குஜராத்தின் பகுதிகளை கொண்டிருந்த பகுதி அது, சௌமாரம் என சூரியனை வழிபட்ட இந்துமக்கள் அப்பொழுது மிக சிறப்பாக வாழ்ந்தார்கள், அதுதான் சௌராஷ்ட்ரம் எனவும் சாது ராஷ்ட்ரமெனவும் அழைக்கபட்டது
அம்மக்கள் சௌராட்டிரமக்கள் எனவும் அழைக்கபட்டார்கள்
பொதுயுகம் 1000ம் ஆண்டுக்கு பின் அவர்கள் சோதனை காலம் தொடங்கியது, அந்த சவுராஷ்ட்ரா இனம் ஆப்கானிய படையெடுப்புக்கு பின் நிலமிழந்து வாழ்விழந்து தென்ன்கம் வந்தது.
(இந்திய சுதந்திரத்தின் பொழுது தனி சவுராஷ்ட்ரா மாகாணம் உருவாக்கபட்டு பின் அது பிரிக்கபட்டு மராட்டியம் குஜராத்துடன் இணைக்கபட்டதும் வரலாறு)
அவர்கள் பூரண இந்துக்கள், மதம் மாறி சொந்த நிலத்தில் வாழ்வதை விட இந்துவாக இன்னொரு நாட்டில் வாழ்வது என முடிவெடுத்து இந்துக்களாக வாழவே நாடு நாடாக ஓடிய இனம் அது
நெசவு தொழில் அவர்களுக்கு வரம், அதுவும் சூரத்தை கொண்ட பகுதி என்பதால் எல்லா வகை நெசவுகளும் அதிகம்
இந்த இனம் இந்து அரசுகள் அதிகமிருந்த நாயக்க பகுதிகளுக்கு வந்தது, இந்துக்களாக வாழ வந்தது, தக்காணமும் அவர்களை ஏற்றுகொண்டது
அதில் ஒரு பிரிவு பட்டு நெசவினை செய்தது, மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார், அன்னை மீனாட்சிக்கும் மன்னனுக்கும் பட்டு நெசவு செய்யும் தொழிலாகளாய் அவர்கள் மதுரையில் குடியேறினர்
அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர்
அதில் ஒருவர்தான் டி.எம், சவுநத்ரராஜன் எனும் துளுகுவ மீனாட்சி ஐயங்கார் சவுந்திர ராஜன்
1922ல் பிறந்த அவர், 1930களில் மதுரை சவுராஷ்ட்ரா பள்ளியில் படிக்கும் பொழுதே இசையில் கரைந்தார், மேதைகள் சின்னகொண்ட சாரங்கபாணி பாகவதர், ஆயர்குடி ராஜாமணி அய்யர் ஆகியோரிடம் இசைபயின்று இன்னும் பல் ஜாம்பவான்களிடம் தன்னை கூர்தீட்டி கொண்டு 1945களிலே மேடையில் பாட தொடங்கினார்
அப்படித்தான் அவரின் பாடல் வாழ்வு தொடங்கிற்று
1950ல் எம்ஜிஆரின் படமான "மந்திரி குமாரி" படத்தின் "உபகாரம் செய்பவர்க்கே" என பாட வந்தவர் அவர், அப்படியே மெல்ல மெல்ல பாடல் உலகில் ஏற ஆரம்பித்தார்
சுப்பையா நாயுடு அறிமுகம் செய்த சவுந்திர ராஜன், 1950க்கு பின் தவிர்க்கவே முடியாத பாடகரானார், சுமார் 25 வருடங்கள் உச்சத்தில் இருந்தார்
தன் வெண்கல குரலால் தமிழகத்தை கட்டி போட்ட பாடகர், தியாகராஜ பாகவதர் எனும் மாபெரும் பாடக பிம்பம் டி.எம். சவுந்தர ராஜன் பாடல்கள் வந்தபின் மங்கி போயிற்று
ராமசந்திரன், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்களுக்கு பாடிய ஒரே பாடகர் அவர்
பாடல் என்பது கவிஞனின் ஓவியம், இசை அமைப்பாளன் அதை அசைய செய்வான், பாடகனே பாடலுக்கு உயிர்கொடுப்பான்
அப்படி தன் உயிர்துடிப்பான பாடல்களால் இரு உச்ச நடிகர்களுக்கு பக்கபலமாக பாடியாவர் அவர்
தமிழ் பாடல் உலகின் அற்புதமான பாடல்கள், கண்ணதாசன் வாலியின் வரிகள் எல்லாம் அவரின் குரலால் சாகா வரம் பெற்றன.
தங்கம் என்றாலும் அழகான பொற்கொல்லன் கையில் கிடைத்தால்தான் அழகுறும், அப்படி கண்ணதாசனின் வரி, வாலியின் வரிகளுக்கு அழகும் உருக்கமும் ஊட்டினார் சவுந்திர ராஜன்
11 மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடினார், அதில் வீரம், காதல், பாசம், சோகம், உருக்கம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல் என எல்லாமும் இருந்தன
2500 பக்தி பாடல்களையும் பாடினார்
பாடகர் என்பதையும் தாண்டி மிகபெரும் முருக பக்தர், அதனால்தான் யாரும் பாடமுடியாத அருணகிரி நாதரின் முத்தைதிரு எனும் அற்புத பாடலை அவரால் மகா சிறப்பாக பாட முடிந்தது
ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்
சீர்காழி கோவிந்த ராஜன், சவுந்திர ராஜனுக்கு பின்னால் எந்த பாடகர்கள் குரலிலும் ஆண்மை ஓங்கி ஒலிக்கவில்லை
இன்றுள்ள பாடகர்களில் எது ஆண்குரல் எது பெண்குரல் என கண்டுபிடிக்கவே மகா சிரமமாய் போயிற்று
தமிழ் திரையுலகில் அழியா பாடல்களை கொடுத்த, அவனின்றி பாடல் பாட ஆளில்லை என்ற அளவு கோலோச்சிய அந்த டி.எம் சவுந்திரராஜனுக்கு இன்று 100ம் பிறந்தநாள்
அன்றல்ல இன்றல்ல என்றும் அழியா பாடல்கள் அவருடையது, தமிழக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு உணர்வுக்கும் அவர் பாடினார்
"மலர்களை போல் தங்கை உறங்குகின்றாள்" என பாடிய பாடலில் அந்த பாசம் அழகாய் தெரியும்
"ஆட்டிவைத்தார் யாரோருவர்" என பாடினால் வலி தெரியும்
"அம்ம்மாம்.. தம்பி என்று நம்பி" என பாடினால் சகோதர துரோகம் தெரியும்
"ஊஞ்சலுக்கு பூச்சூட்டி" "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா" என்றால் பெண்ணின் அழகு அழகாய் தெரியும்
"பொன்னை விரும்பும் பூமியிலே" "உன் கண்ணில் நீர் வடிந்தா" என பாடினால் அன்பான பெண்ணின் மடியில் விழ்ந்து அடையும் ஆறுதல் புரியும்
"ஆறு மனமே ஆறு" "சட்டி சுட்டதடா" "அண்ணன் என்னடா" போன்ற பாடல்களெல்லாம் அப்படியே அமைதியினை கொடுக்கும்
"கண்டு கொண்டேன் அன்னையை.." என அவர் பாடும்பொழுது மனதில் பாசமும் உருக்கமும் தெரியும்
அவர் மது அருந்தியவர் அல்ல ஆனால் "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" என்பதை அவரை விட கொண்டாட்டமாக யாரும் பாடிவிட முடியாது
இப்படி வாழ்வின் எல்லா உணர்ச்சிகளையும் தன் பாடலில் கொண்டுவந்தவர் அவர்
இம்மாதிரி சினிமா பாடல்களை தாண்டி இல்லை அதனோடே அவர் பாடிய தேசபக்தி பாடல்களும், பக்தி பாடல்களும் அழியா இடம் பிடித்தவை
"இந்திய நாடு என் வீடு" என அவர் பாடினால் தேச உணர்வு எழும்
"சிந்து நதியின் இசை நிலவினிலே" என பாரதியின் பாடலை பாடினால் தேசமே நம் கண்முன் நிற்பது போல் தோற்றம் வரூம்
நாட்டுபற்றுக்கான பாடலை அவர்போல் பாடியவரில்லை
அவரின் மிக பெரிய முத்திரை பக்தி பாடல்கள்
அவர் "உள்ளம் உருகுதையா" என பாடினால் நாமும் உருகுகின்றோம்
அவர் "கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும்" எனும் பொழுது கண்ணீர் பெருகும்
"உள்ளம் உருகுதய்யா" என பாடினால் திருவாசகத்தின் வரிபோல மனம் கசியும்
"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா" என அவர் பாடினால் மனம் கண்ணனை தேடும்
"கண்ணா கண்ணா" என அவர் பாடினால் மனம் கண்ணனில் கரையும் கண்களில் நீர் கோர்க்கும்
"கற்பகமே உன்னையன்றி" என பாடினால் அம்மனே வருவாள்
"மாணிக்க வீணையே" என அவர் பாடிய வகையில் காளிதாசனின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்
நவராத்திரி காலம் மட்டுமல்ல, எல்லா இந்துபண்டிகை காலங்களிலும் அவர் பாடல் தவிர்க்கமுடியாதது எனும் வகையில் காலத்தின் கருணை அவர்
இப்படி அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் இந்துமதத்துக்கான பெரும் சேவைகள்
அருணகிரி நாதர் படத்தில் அருணகிரியாராகவே வந்து நடித்து வாழ்ந்த அவரை எந்த இந்து மறக்க முடியும்?
"முத்தைதிரு" பாடலை அருணகிரியார் எப்படி பாடியிருப்பார் என நமக்கு தெரியாது, ஆனால் இப்படி மட்டும்தான் பாடியிருக்க முடியும் என நடிப்பாலும் குரலாலும் காட்டியவர் சௌந்திரராஜன்
அக்கால மன்னர்களின் ஆலயம் போல, அக்கால கவிஞகளின் பாடல் போல , அக்கால சித்தர்களின் ஏடுகள் மந்திரங்கள் போல, இவரின் பாடல்களும் மிகபெரிய வரம் அதில் சந்தேகமில்லை
அப்படி கொண்டாடபட வேண்டிய டி.எம்.எஸ் 1980க்கு பின் காலமாற்றத்தால் பின் சென்றார் அல்லது வாய்ப்பு வரவில்லை
எம்.எஸ்.வி, இளையராஜா வரவு என்றான பொழுது எம்ஜிஆர் பாலசுப்பிரமணியத்திடமும் சிவாஜி மலேசியா வாசுதேவனிடமும் சரணடைந்தனர்
சௌந்திரராஜன் தான் வணங்கிய முருகனிடம் மட்டும் சரண்டைந்தார்
அவர் குரலால் பாடல்களில் புகழ்பெற்ற ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் அவருக்கு என்ன கைமாறு செய்தார்கள் என்பது நினைவில் இல்லை, வரலாற்றிலும் இல்லை
அக்காலத்தில் பாடகர்களுக்கான தேசிய விருது இல்லை என்பதால் அன்று பெரிய கவுரவமுமில்லை
ஏகபட்ட பட்டங்களை தனியார் அமைப்பும் மக்களும் கொடுத்தாலும் அரசாங்க விருது ஏதுமில்லை
மதுரையில் திமுகவினை பலபடுத்த நினைத்த கருணாநிதி, லீலாவதி கொலை போன்றவற்றால் சௌராஷ்ட்ரா சமூகம் திமுகமேல் அதிருப்தியில் இருந்த நேரம்தான் அவருக்கு சௌந்தர்ராஜன் நினைவே வந்தது
அதுவரை நாகூர் ஹனிபா மட்டும்தான் என நம்பிய கருணாநிதிக்கு சவுராஷ்ட்ர வாக்கு வங்கிக்காக சவுந்திரரஜன் நினைவுக்கு வந்தார்
அதன் பின் விருதுகள் அவரை தேடி வந்தன
மத்திய அரசு அவருக்கு பத்மசிறீ பட்டம் 2010ல் வழங்கியது
உண்மையில் டி.எம்.எஸ் வாழ்ந்த காலத்தில், தமிழகத்தில் அவருக்கு விழா எடுத்த ஒரே நபர் மு.க அழகிரி, ஆனாலும் அவர் ஒருவர்தான் இங்கு தனிபட்ட முறையில் சவுந்திரராஜனுக்கு சிறப்பு செய்தார்
ஒரு வகையில் பெரும் இந்துபக்தரான சவுந்திரராஜன் முருகபெருமானின் தனி அருளை பெற்றவர், அவ்வையார் போல சவுந்திரராஜனையும் முருகன் தமிழ்பாடவே தனி அருள் கொடுத்திருந்தான்
ஆம் அவர் 40 ஆண்டுகாலம் பாடினார், தமிழ் அவரின் நாவில் கொஞ்சி விளையாடியது, அந்த உச்சரிப்பும் அழகும் அவ்வளவு அழகு
முருகனும் தமிழும் பிரிக்கமுடியா விஷயம், தமிழ் செம்மொழி என அறிவிக்கபட்ட 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிற்காக "செம்மொழியான தமிழ்மொழியே" எனும் பாடலே அவரின் கடைசி பாடலுமாகும்
தெய்வாம்சம் பொருந்திய கவிஞர்களுக்கும் சில வரிகள் பலித்துவிடும்
கே.ஆர் ராமசாமி எனும் நடிப்பிசை புலவர் எனும் ஜாம்பவானுக்கு அது நட்ந்தது "பாடமாட்டேன் இனி நான் பாடமாட்டேன்" என பாடியவர் அப்படியே வீழ்ந்தார்
"ஏனோ தெய்வம் சதி செய்தது" என்ற வரியோடு தன் பாடல் வாழ்வை முடித்தார் கண்ணதாசன்
அப்படி "என் கதை முடியும் நேரமிது" என பாடிய டி.எம்.எஸ் அதன் பின் எழவில்லை, காலம் வாய்ப்பளிக்கவில்லை
ஆனால் கிடைத்த காலம் ஒவ்வொரு நொடியும் தேசம், பக்திபாடல் என கொடுத்த அவரை மறக்க முடியாது
முருகபெருமானை பாடவும், தமிழின் அழகை சொல்லவவும் அந்த அருணகிரிநாதரே திரும்ப வந்த பிறப்பு அவர், அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று நினைவுநாள். தமிழ் திரை இசை பாடல்கள் உள்ள வரை அவருக்கு மரணமில்லை
அந்த குரலும், காலமெல்லாம் திருநீறும் குங்குமமும் தாங்கி நின்ற முகமும், முருகா முருகா என போற்றிய பக்தியும் தமிழ் இசை உலகின் பெருமித அடையாளங்களில் ஒன்று. Source & Courtesy: முகநூல் பதிவு தரவுகளில் இருந்து பாரத தேசம் பழம் பெரும் தேசம் நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் மகாகவி பாரதியார்



