#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#அன்னையர்_தினம்
கொஞ்ச தூரம் நடந்து போக
வழியில் சிறிய
கல் என் கட்டைவிரல் நகத்தை
பெயர்த்தது
கண்களில் நீர் கோர்க்க
"அம்மா" என்று அலறினேன்
ஒருநாள் இரவில் திடீரென
குளிர் காய்ச்சல்
"அம்மா" "அம்மா" என்று
முனகினேன் போர்வைக்குள்
சுடச்சுட தோசையை தட்டில்
தொட்டதும் என்
"அம்மா" என் நினைவுக்கு வந்தாள்
இப்படி எங்கும் நிறைந்து
எனக்குள் பதிந்து போன
"அம்மா" வின்
பிள்ளையான எனக்கு இன்று
இரண்டு பிள்ளைகள்
அவர்களின் தகப்பன் நான்
#அன்னையர்_தின_வாழ்த்துகள்
அன்னையர்களுக்கு


