ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவர முநயே நம: 🌺அமலனாதிபிரான் - வேதஸார விவரணம். ஸ்வாமி திருப்பாணாழ்வார் சாதித்தருளிய ‘அமலனாதிபிரான்’ என்னும் ப்ரபந்தத்தை பற்றிய ஸ்வாரஸ்யமான விஷயத்தை இன்று பகிரலாம் என்பது எண்ணம். புத்தூர் ஸ்வாமி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துக்குப் பண்ணின உபகாரம் அளவிட முடியாதது. ஏதாவது ப்ரமாணத் துணை வேண்டுமென்றால் பேருபகாரமாய் நமக்குக் கைகொடுக்கும் க்ரந்தங்களில் அவர் வெளிட்ட க்ரந்தங்கள் ப்ரதானமாய் நமக்குத் துணை நிற்கும். அவர் வெளிட்ட ‘அமலனாதிபிரான் வ்யாக்கியானங்கள்’ என்னும் க்ரந்தத்தில் அவர் எழுதிய முன்னுரையில் காணக்கிடைக்கும் விஷயத்தை இங்கு பகிர்கிறேன். **************** அமலனாதிபிரானில் “முதல் மூன்று பாசுரங்களின் முதலெழுத்துக்களும் வேதஸாரமான ஓங்காரத்திலடங்கியுள்ள ‘அ’ ‘உ’ ‘ம’ என்னும் எழுத்துக்களாயிருப்பதிலிருந்து, இப்பிரபந்தம் வேதஸார விவரணமாயிருக்கிறதென்பது வெளிப்படை, இப்படி ப்ரமாணஸாரமான ஓங்காரத்தை முதல் மூன்று பாசுரங்களாலே உணர்த்தி, ப்ரமேயஸாரம் எம்பெருமானுடைய திருக்கமலபாதப் பாதுகையே என்பதை ஐந்து, ஆறு, ஏழாவது பாசுரங்களின் முதலெழுத்துக்களான ‘பா’ ‘து’ ‘கை’ என்னும் எழுத்துக்களால் உணர்த்துகிறார் என்று பெரியோர் பணிப்பர். நடுவிலுள்ள நான்காவது பாசுரத்தின் முதலெழுத்தான சகாரம் ப்ரமாண ஸாரத்தையும், ப்ரமேய ஸாரத்தையும் ஸமுச்சயிக்கிறது போலும்..” என்று முன்னுரையிட்டிருக்கிறார். *************** அனுபவம் பெற விரும்புவோர் அமலனாதிபிரான் ப்ரபந்தத்தை எடுத்து வாசித்துத் தெளியலாம். பாசுரம் 1: ‘அமலனாதிபிரான் - அ’ பாசுரம் 2: ‘உவந்தவுள்ளத்தனாய் - உ’ பாசுரம் 3: ‘மந்திபாய் வடவேங்கடம் - ம’ பாசுரம் 4: 'சதுரமாமதிள் - ச' பாசுரம் 5: 'பாரமாய - பா’ பாசுரம் 6: 'துண்டவெண் - து’ பாசுரம் 7: ‘கையினார் ‘கை’ அடியேன் ஆக்கிய ‘ஆழ்வார்கள் கழல்காப்பு மாலை’ என்னும் க்ரந்தத்தில் ஸ்வாமி திருப்பாணாழ்வாருக்கான பாசுரத்தில் ‘சீர்வேதம் அமலனாதி பிரான்மொழிந்து, கசிந்துருகும் பெருமாள் கழல்காப்பே’ என்றுதான் ஈற்றடியிட்டு பாசுரமிட்டிருக்கிறேன். இப்படி ஈற்றடியிட்டது திட்டமிட்டு அமைத்ததல்ல, தானாக நிகழ்ந்தவை. ஆசார்ய க்ருபை.🙏 அடியேன்🙏 பெ. மதியழகன் தேவப்பெருமாள் ராமானுஜ தாசன் SKAPS Email : info.skaps@gmail.com (30.03.2024) மீள்... #பெருமாள்
பெருமாள் - ShareChat