#🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #🧐நாட்டு நடப்பு
ஏப்ரல் 30, தாதா சாகேப் அவர்களின் 156வது பிறந்தநாள்.
தாதா சாகேப் பால்கே ( #DadasahebPhalke ) என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இவர் நாசிக்கில் பிறந்தார். 1885ல் மும்பை சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் பயின்றார். 1910 முதல் 1940 வரை பல படங்களை உருவாக்கினார். சில படங்களை இவரே இயக்கினார். இந்தியாவுக்கு சினிமா என்றால் என்னவென்று முதலில் அறிமுகம் செய்தவர் இவர். தொடக்கத்தில் வெளியான படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் இல்லை.
ஒலியே இல்லாமல் மவுனப் படங்களாகவே இருந்தன. தனது தீவிர முயற்சியால் ஒரு படத்தை எழுதி இயக்கினார். அதன் பெயர் 'ஹரிச்சந்திரா'. குடும்பத்தில் இருந்த 18 பேரையும் நடிக்க வைத்தார். எனவே, முதல் இந்திய சினிமாவே ஒரு மெகா குடும்பப் படமாகும். அவரது நினைவாக 'தாதா சாகேப் பால்கே விருது' என்ற உயரிய விருது நிறுவப்பட்டது.


