சற்று நீளமான பதிவு
இதன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வரை நீடிக்கும்
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் அறிமுகம் பகுதியில்
[#ஆதிசங்கரர் 🙏
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரித்து அதர்மத்தை அழித்து , தர்மத்தை நிலைநாட்டுவேன்! என்றார் ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதையில். அவ்வாறே உலகில் சாத்வீகம் அழிந்து அகோர குணங்கள் மக்களிடையே தலைதூக்கிய காலத்தில் #இந்து_சமயம் தலைநிமிர்ந்து நிற்க அவதரித்தப் புண்ணிய புருஷரே ஆதிசங்கரர்.
ஆதிசங்கரர் ஏழாம் நூற்றாண்டில்
#பன்னீர்_இலை_விபூதி
சஷ்டி சிறப்பு பதிவு :
பன்னீர் இலையில் விபூதியை வைத்து எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக் கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
#கேரளத்திலுள்ள__காலடி என்ற ஊரில் #ஆர்யாம்பாள்__சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர் ஆவார். இவர் பிறவி ஞானியாவார். இவரது குரு #கோவிந்தப்பகவத்பாதர் .
ஆதிசங்கரர் இளவயதிலேயே கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம். வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று "சங்கர பகவத்பாதர்" என்று அழைக்கப்பட்டார்.
இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படுகிற பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரையை ஆதிசங்கரர் அளித்துள்ளார்.இவரது தத்துவம் #அத்வைதம் என்ப்படும். அதாவது "ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே" என்ற தத்துவமே *அத்வைதம். எனப்படும்.
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு உதவி படம் பாடல் உதவி அனைவருக்கும் நன்றி நன்றி
இந்த உயரிய அத்வதை தத்துவத்தை. உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர் ஆதிசங்கரரே. மேலும். "விஷ்ணு சஹஸ்ரநாமம்" போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை எழுதியுள்ளார். சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார் ஆதிசங்கரர்.
ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், வடக்கில் ஜோஷி மடம் என நான்கு அத்வைத பீடங்களை நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.
காஞ்சி மடம் 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது. இதனை சிருங்கேரி சங்கர மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர்.
*ஆதிசங்கரர் எழுதிய "மடாம்நாய சேது" என்ற புத்தகத்தில், தான் உருவாக்கிய நான்கே மடங்களின் பட்டியலில் காஞ்சி மடம் என்று எந்த குறிப்பும் இல்லை! என்பதால், காஞ்சிமடம், சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் கிளை என்று வரலாற்று தரவுகள் தெரியப்படுத்துகின்றன.
நான்கு சங்கர மடங்களும் (#சிருங்கேரி_மடம், #சாரதா_மடம், #துவாரகை_மடம், #ஜோஷி_மடம்) தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரத்தில் #சர்வக்ஞான_பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார் ஆதிசங்கரர். தமது 32ஆம் வயதில் #கேதார்நாத்தில் சமாதி அடைந்த ஆதிசங்கரர் இந்து மதத்தின் "மாபெரும் சிற்பி" எனப் போற்றப்டுகிறார்.
அக்காலத்தில் தங்களது தவறான வழிபாட்டு முறைகளால் தெய்வங்களையே உக்கிர வடிவமாக மக்கள் மாற்றி வைத்திருந்ததை, மீண்டும் சாந்தசொரூபமாக்கி, சாத்வீக முறையில் வழிபட மக்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆன்மிகச் சிற்பியே ஆதிசங்கரர். இதனால் தெய்வங்களும் மகிழ்ந்து, நாட்டில் நல்ல மழையைப் பெய்வித்து, மக்களை வளமோடு வாழ ஆசீர்வதித்தன.
#ஓம்நமசிவாய 🙏
__ஆதிசங்கரர்
தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் வாழ்ந்தது வெறும் 32 வருடங்கள் மட்டுமே. எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு,
தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு,
ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான்,
சங்கரன்
“அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்,அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய்,
தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது.
தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்,
அவனை தான் மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது என்று இத்தனை காலம், தன் பிள்ளையை அழைக்காமல், வைராக்கியமாக இருந்த ஆர்யாம்பாளுக்கு இப்போது மகனைக் காணவேண்டும் என்று தோன்றுகிறது.
இதுவே இறுதி முறையாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
தன் பிள்ளை தனக்களித்த வாக்கில் இருந்து தவற மாட்டான் என்று அவள் அறிவாள்.
முதுமை காரணமாய் தான் இழந்து கொண்டிருந்தும் சக்தியை ஒன்றுகூட்டி, "சங்கரா", "சங்கரா" "சங்கரா" என்று ஹீனமாய் முனக மட்டுமே அவளால் முடிகிறது. நேரம் கடக்கிறது.
"அம்மா" என்று ஆசையாய் தன் பிள்ளை அழைக்கும் குரலை அவள் செவிகள் இப்போது கேட்கின்றன.
"சங்கரா, வந்துவிட்டாயா ?
அருகில் வா.
என் தலையை உன் மடிமீது ஏந்திக்கொள்" என்கிறாள்,
கண்பார்வை மங்கிப்போன ஆர்யாம்பாள்.
அருகில் வந்த சங்கரனை ஆசையுடன் தொட்டுத் தழுவுகிறாள். சங்கரன்,
இப்போது, தன் தாய் சொல்லியதைப்போல,
அவளது தலையை அன்புடன் எடுத்து தனது மடியின் மீது வைத்துக்கொள்கிறான்.
அந்தத் தாயின் மனம் இப்போது துணுக்குறுகிறது. சங்கரன்,
கைகளிலும், மார்பிலும் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அவளை உறுத்துகின்றன,
அவளது மனதையும். ஆர்யாம்பாளின் மனம் உடைந்து போகிறது.
என் பிள்ளை என்னிடம், "துறவறம் போகிறேன்" என்று பொய் சொல்லிவிட்டானோ ? பெற்ற தாயையும்,
இவ்வுலக ஆசைகளையும் துறந்த ஒரு துறவிக்கு ஆபரணங்கள் எதற்கு ?
துறவற தர்மத்தில் இருந்து தவறிவிட்டானே,
என் பிள்ளை" என்று அவனிடம் சொல்லாமல், உள்ளே அழுகிறாள்.
இப்போது, மீண்டும் "அம்மா" என்று அழைக்கும் குரல். பதில் சொல்ல மனமில்லை, ஆர்யாம்பாளுக்கு.
சங்கரன் கேட்கிறான், "அம்மா, உனக்கு வாக்களித்திருந்த படியே, நீ அழைத்ததும் நான்தான் வந்துவிட்டேனே.
ஏன், என் அழைப்புக்கு பதில் குரல் கொடுக்கவில்லை ?
நான் வரத் தாமதம் செய்துவிட்டேனா ?
அதனால் உனக்கு கோபமா ?"
ஆர்யாம்பாளுக்கு அதிர்ச்சி.
தன் பிள்ளை இப்போதுதான் வருகிறான்.
அப்படியானால்,
நான் யார் மடியில் தலைவைத்து படுத்திருக்கிறேன் ?"
நடப்பதை மகனிடம் சொல்கிறாள்.
ஆதி சங்கரருக்கு உண்மை புரிந்தது.
தெருக்கோடியில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனை உள்ளம் கனிந்து வணங்குகிறார்.
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
ஆதி சங்கரர் ஆன்ம போதம் பகுதிக்கு படம் பாடல் உதவி அனைத்து அடியார்க்கு அடியேன் நன்றி நன்றி
"அம்மா,
நான் துறவரம் சென்றபோது நமது தெருவின் கோடியிலுள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் கண்ணனிடம், நான் வரும்வரை என் தாயைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டுப் போனேன்.
நான் வருவதற்கு தாமதித்த சில நொடிகளைக் கூடப் பொறுக்காத கண்ணன், தானே வந்திருக்கிறான்,
உன் தலை சாய மடியும் தந்திருக்கிறான்".
ஆர்யாம்பாள் இப்போது கண்ணனை, அந்த தயாளனை எண்ணிக் கண் கலங்குகிறாள். "கிருஷ்ணா,
நான் அழைத்தவுடன் வரவேண்டும் என்பதற்காக,
உன் ஆபரணங்களைக் கூடக் களையாமல் வந்தாயா ?" குளத்தில்,
தன் காலைக் கவ்விய முதலையின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் போராடி,
தன்னால் முடியாதபோது,
இறுதியில் 'ஆதிமூலமே' என்று அலறிய கஜேந்திரன் என்ற யானையின் பிளிறலைக் கேட்ட மாத்திரத்தில்,
வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த எம்பெருமான்,
அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது,
அவனது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள,
அவனது அவசரம் அறிந்த கருடன்,
அவனைவிட வேகமாக பறந்து வந்து அவன் முன் நிற்க,
சக்ராயுதமானது, தானாகவே பறந்து வந்து அவனது வலது திருக்கரத்தில் பொருந்திக் கொள்ள,
பகவான் விரைந்துசென்று யானையைக் காத்தருளினான்.
தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு,
கருடனின் உதவியோ,
சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை !
அபயம் அளிப்பது ஒன்றே குறி !
கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை,
கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ,
அது போலவே,
எம்பெருமான் ஓடோடி வந்து,
தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.
ஆதிசங்கரரின் தாயார் சமாதியும், அதில் சங்கரர் ஏற்றிவைத்த விளக்கும், தாயாருக்கு காவல் இருந்த கிருஷ்ணரின் ஆலயமும் காலடியில் இன்றும் உள்ளது.
உலகத்தையே துறந்தாலும் பெற்ற தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை மகான்கள் செய்யத் தவறியதில்லை.
"பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே"
ஏ மூட மனமே, கோவிந்தனை துதிசெய். நீ போகும் காலம் வருகையில், நீ கற்ற எந்த கல்வியும் உன்னுடன் வராது, உன்னைக் காக்காது.
கோவிந்தனை துதிசெய்.
அவன் தாள் பற்று.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
* ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது ! ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது ! ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது ! ஓம் சர்வேஷாம் மங்களம் பவது ! 🙏
#ஆதிசங்கரர்
#ஆதிசங்கரர்_வரலாறு
#ஆதிசங்கரர்_மகிமைகள்
#ஆதிசங்கரர்_சிறப்புகள்
#ஆதிசங்கரர்_பெருமைகள்
#ஜகத்குரு_ஆதி_சங்கரர்
#ஆதி_சங்கரர்_ஜகத்குரு
#ஆதி_சங்கர_பகவத்_பாதாள்
#ஆதிசங்கரர்_ஜெயந்தி_சிறப்பு
இதன் தொடர்ச்சியாக நாளை பார்க்கலாம் 🚩🪷🕉🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #ஞானிகள் பேசுகிறோம்



