ShareChat
click to see wallet page
search
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் என்பவருடைய மகன் சதாம் உசேனுக்கு 19 வயது ஆகிறது. இவர் அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ஆசாத் மகளான 19 வயதாகும் யாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 7ம் தேதி திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில் அறை எடுத்து தங்கி உள்ளனர். ஜூன் 8ம் தேதியான நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனே சதாம் உசேன் தனது நண்பர் ஷேக் அப்துல்லா (19) என்பவரது உதவியுடன் யாஸ்மினை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காதலனை நம்பி வந்த யாஸ்மினுக்கு, அவரது காதலன் சதாம் உசேன், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் சேர்ந்து 'டெபன்டாடல்' என்ற போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக யாஷ்மின் இறந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் - திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி. காதலன் நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி. காதலன் நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் - ShareChat