#செய்திகள் #தற்போது செய்தி
சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜா: “மக்களின் நம்பிக்கையை செயலால் நிரூபிப்பேன் உறுதியான வேண்டுகோள்
சாத்தூர், ஏப்.20 -
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இசக்கி ராஜா, தொகுதி முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள தன்னெழுச்சியான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
மக்கள் அளித்து வரும் ஆதரவு தன்னை மேலும் பொறுப்புடன் செயல்பட தூண்டுவதாகவும், வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்காக முழுமையாக உழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
சாத்தூர் தொகுதி மக்களின் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல முக்கிய திட்டங்களை முன்வைத்தார். குறிப்பாக, மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தனித்துவமான ஆகாடமி ஒன்றை அமைத்து, இலவச கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார். கல்வி மட்டுமின்றி இளைஞர்களின் வாழ்க்கை நலனும் தன்னுடைய முக்கிய குறிக்கோளாகும் என கூறிய அவர், இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களுக்கு உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்து உடல் நலன் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவேன் என வலியுறுத்தினார்.
மேலும், சமூக ஒற்றுமையை முன்னிறுத்திய இசக்கி ராஜா, “முக்குலத்தோர் சமூகத்தினருக்கு மட்டுமன்றி, அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான பாதுகாப்பும் உரிமையும் வழங்குவது எனது கடமை” எனத் தெரிவித்தார். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் தனக்கு மிகச் சிறந்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர் அவர்களது பாதுகாப்பை நலனை நான் பாதுகாப்பேன் இன்று உறுதியளித்தார்.
தொடர்ந்து, தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை அலட்சியம் செய்யாமல், அவற்றை நிறைவேற்றும் வரை போராடுவேன் எனவும், தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தாள் மக்களின் குரலாக செயல்படுவேன் எனவும் இசக்கி ராஜா கூறினார்.
இந்நிலையில், சாத்தூர் தொகுதியில் அவரது பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவு தேர்தல் களத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


