இதுதான் அந்த நீலநிற ஒளிவட்டம்..
ஜெகன் நண்பர்களுடன் பல சிவ தலங்களுக்கும் சென்று புகைப்படம் எடுத்துவந்தபோது, தென்மலையில் உள்ள இந்த சிவன் கோயிலுக்கும் சென்றார். அப்போதைக்கு இந்தக் கோயில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஏனெனில் ராம்நாட் ஜமீனுக்கு சொந்தமானக் காட்டில் உள்ளது. யாருமே செல்லாத இந்த இடத்திற்கு அவர் மட்டும் உள்ளேச் சென்று புகைப்படம் எடுத்தார். புகைப்படத்தை பிரிண்ட் போட்டு பார்க்கும்போதுதான் அதில் இந்த நீல நிற ஒளிவட்டம் இருப்பதை கவனித்தார்.
இந்த நீல நிற ஒளிவட்டம் எதைக் குறிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தினமலர் ஆன்மிகப் பிரிவிற்கு படத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் இவரிடம் இந்தப் படத்தை பற்றி எதுவும் சொல்லாமல் ஆன்மிக மலரின் முன்பக்க அட்டைப் படத்தில் பிரிசுரித்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டனர்.
ராம்நாட் ஜமீனுக்கு சொந்தமான கோயில் என்பதால் அனுமதி இல்லாமல் அங்கே எப்படிச் சென்றீர்கள் என்று கேட்டால், பிரச்சனையாகிவிடும் எனக் கருதி, அவரே துணிந்து ராம்நாட் ஜமீனைத் தொடர்புக்கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
அவர்கள் தொடர்ந்து இவரிடம் சண்டைபோட்டுக்கொண்டே இருந்தனர். இறுதியாக ஜெகன் ஒன்றைக் கூறினார்.
"என்னால்தான் அந்த சிவன் எல்லோருக்கும் தெரியப்படவேண்டுமென்றால் அதை யாராலும் தடுக்கமுடியாது" என்றார்.
அதன்பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை.
உங்கள் விலாசம் சொல்லுங்கள், நேரில் பார்க்கவேண்டும் என்று நேரில் அவர் வீட்டிற்குச் சென்றனர் ராம்நாட் ஜமீன் குடும்பத்தினர்.
"எந்தக் கேமராவில் அந்தப் போட்டோவை எடுத்தீர்கள்? அந்தக் கேமராவைக் காட்டுங்கள்" என்றனர்.
அவரும் அந்தக் கேமராவைக் காட்டினார்.
அந்த ஜமீன் குடும்பத்தினர் அந்தக் கேமராவைத் தொட்டுக் கும்பிட்டனர்.
பிறகு அந்தக் கோயிலைப் புணரமைத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு வழிவிட்டனர்.
இது பதினெண் சித்தர்களுள் ஒன்றான வரதர் சமாதி - தென்மலையில் உள்ள பாண்டியநாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலம்.. #good morning #🙏 ஓம் நமசிவாய #ஓம் #ஓம் நமசிவ ருத்ராய


