ShareChat
click to see wallet page
search
பேரதிர்ஷ்டமும், பேராபத்தை விளைவிக்கக் கூடிய கண்டமும் வாழ்வில் ஒரு முறை தான் வரும்... ஒரு முறை நிகழ்ந்த அதிர்ஷ்டம்.. திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதும். ஒரு முறை ஏற்பட்ட கண்டம்.. திரும்பவும் நிகழும் என்று வாழ்நாள் முழுவதும் பயந்து கொண்டே இருப்பது.. என்பது.. வீணான ஒன்று... பொதுவாக... பேரதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதும். பேராபத்து எனும் கண்டத்தை கொடுக்கக் கூடியதும்... எட்டாம் பாவகத்திற்கு உரிய கிரகமே.... இவர் ஒரு ஜாதகத்தில் ... சுபத்துவமாக இருந்து தசை நடத்தும் போது பேரதிர்ஷ்டத்தையும். பாவத்துவமாக இருந்து தசை நடத்தும் போது ஆபத்தை விளைவிக்கக்கூடிய கண்டத்தையும். ஏற்படுத்தும் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும். இதனுடன் லக்னாதிபதி தொடர்பு பெற்றிருந்தால் மட்டுமே.. அது ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தையோ.. ஆபத்தை விளைவிக்க கூடிய கண்டத்தையோ ஏற்படுத்தும் . அதே போல... தசை முழுவதும் அது தொடருமா?. என்றால்.. நிச்சயமாக கிடையாது. குறிப்பிட்ட புத்தியில் மட்டுமே அது நிகழும். மேலும் குறிப்பாக.... ஒருவருக்கு அட்டமாதிபதி. பாவத்துவமாக இருந்து கூடவே லக்னாதிபதியின் தொடர்பையும் பெற்று .. தசையும் நடந்து... கண்டம் நிகழக்கூடிய புத்தியை கடந்து கொண்டு இருந்தாலும்.. அந்த காலகட்டத்தில் கோச்சாரத்தில் .... அட்டமாதிபதி சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில்.... கண்டங்கள் ஏற்படாமல் தடுத்து.. சூரியனை கண்ட பனி போல விலகி செல்லும். எனவே ஜாதகத்தில் ஒரு சம்பவம் நிகழும் என்று உறுதிபட இருந்தாலும்.. லக்னாதிபதி வலுவினால் அதை எதிர்கொள்ள முடியும். பஞ்சமாதிபதி மற்றும். பாக்யாதிபதி வலுவினால்.. தற்காத்துக் கொள்ள முடியும். திசை திருப்ப முடியும். கோச்சார நிகழ்வினால் திசை திருப்ப முடியும். இறைவன் மீது உளள தீராத பக்தியினாலும்... இறைவனின் அருளினாலும் அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ளவும். ஆபத்துகள் வராமலும் தடுத்துக்கொள்ள முடியும். கட்டண முறையில் ஜாதக பலனை அறிய ஜோதிடர் Jaya Kannan Only WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
✡️ஜோதிட பரிகாரங்கள் - Dufal Dufal - ShareChat