#sirantha unnmay. பெருமைப்படுங்கள்..!!
ஏனெனில், போட்டியில் பங்கேற்பவனுக்கே வெற்றியும் தோல்வியும் சாத்தியம்!
வெறும் பார்வையாளனாக நின்று வேடிக்கைப் பார்ப்பதினும்,போட்டியிட்டுத் தோற்பது பன்மடங்கு உயர்வென்று நினையுங்கள்!
ஓட்டப்பந்தயத்தில் கூட, முதலில் வந்தவனை விட்டு மூன்றாமிடத்தில் வந்தவனுக்குத் தான் முதலில் பரிசு வழங்கப்படுகிறது
வீழ்வது தோல்வியென்று யார் சொன்னது தோழா?
வீழ்ந்த நீ எழுந்தோடாவிடில் அதுவன்றோ பெருந்தோல்வி?
பத்துபேர் பாய்ந்தோடினாலும் பதக்கம் ஒருவனுக்குத் தானே என்று ஒத்துக் கொண்டு ஒன்பது பேர் ஓடாமலா இருக்கக்கூடும் ?
புலியின் பதுங்கல், பாய்ச்சலுக்கன்றி, பயத்தினால் அல்ல!
உங்கள் தோல்வியும் கூட வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!
வெற்றியைக் கொண்டாடும் வேளையிலும் உங்கள் தோல்விகளை நினைவில் கொள்ளுங்கள்! எதிர்பாராத பொழுதுகளில் அவற்றை என்றேனும் சந்திக்க நேரிடலாம்.
வெற்றியா? தோல்வியா? என்பதல்ல வாதம். ஆடுகளத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை மட்டும் அடிக்கடி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்!
உயரே தொங்கும் மாங்காய்க்காக கல்லுயர்த்தும் சிறுவனைக் கவனித்துப் பாருங்கள்! கையெறியும் கற்கள் தோல்வியைத் தழுவுகின்றனவே என்று கைவிட்டுப் போவதில்லை எந்நாளும்!
கடைசியில் ஒரு காயாவது
அவன் கைகளில் விழும்; அதுவரை களைப்படைவதில்லை, அவன் கரமும் மனமும்.
உங்கள் தோல்விகளையே கற்களாக்கி, கவனம் சிதறாமல், வெற்றிக் கனியைக் குறி பார்த்து எறிய கற்றுக் கொள்ள்ளுங்கள் அவனிடம்!
எத்தனை முறை கல்லெறியப்படுகிறது
என்பதல்ல கணக்கு! கனி கைவசப்படுகிறதா என்பதில்
இருக்க வேண்டும் உங்கள் கவனம்!
வெற்றியைக் கொண்டாட எவராலும் இயலும், தோல்வியை ஏற்றுத் துவளாதிருக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும்!
அந்தச் சிலரில் ஒருவராக நீங்கள் இருப்பின், வெற்றிக் கோப்பை விரைவிலேயே உங்கள் கையில் கிட்டும்; வெற்றிமுழக்கம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்...!
வாழ்க வளமுடன்.


