ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஒட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் பேச்சு தூத்துக்குடி ஏப்.18 அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சுந்தர்ராஜை ஆதரித்து வல்லநாடு, புதுக்கோட்டை, தாளமுத்துநகரில் டிடிவி.தினகரன் தேர்தல் பரப்புரையாற்றினார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும். ஒட்டப்பிடாரம் ஊராட்சியை நகர பஞ்சாயத்தாக உயர்த்த நடவடிக்கை, மணியாச்சி வாஞ்சிநாதன் நினைவு சின்னம் பராமரிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் பள்ளி அருகிலுள்ள மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டப்பிடாரம் பெரியகுளம், புதியம்புத்தூர் மலர் குளம்,, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், வல்லநாடு பகுதி களிலுள்ள குளங்கள், கண்மாய்கள் தூர்வாரி நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கப்படும்., அனைத்து ஓடைகள் மற்றும் நீர்வழிகள் சீரமைத்து மழை நீர் சேமிப்பு மற்றும் தடுப்பணை திட்டங்கள் செயல்படுத்தப்படும். புதியம்புத்தூரில் ஆடை தொழில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் தடையற்ற மின்சாரம் வழங்கும் வதையில் மின்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு சூரிய மின்சக்தி திட்டங்கள் ஊக்குவிக்கப்படும், பொட்டலூரணி பகுதியில் சுற்றுசூழல் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் மீன் கழிவு ஆலைகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் கூறி வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். நிகழ்வில் அமமுக நெல்லை மண்டல பொறுப்பாளர் வி.பி.குமரேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜானியேல் சாலமோன் மணிராஜ், அமைப்பு செயலாளர்கள் பி.ஆர்.மனோகரன், சண்முககுமாரி, அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் திரைப்பட நடிகருமான எஸ்.ஏ.ராஜ்கபூர், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பி மோகன், ஆர்.ஜவஹர், பி.சண்முகவேல், ஐ.லெட்சுமண பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாக்சன்துரை மணி, மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் கோசல்ராம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்கள் தங்கத்துரை, விக்னேஷ் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அல்லிகுளம் முத்துராமலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எம்.சிவமாடசாமி, குமாரகிரி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எம்.மாரிமுத்து பட்டன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் மதியழகன், பா.ஜ.க மாவட்ட தலைவர் கே.சரவண கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஒபி சி ஆர்.அம்பாள் ராஜா,பொதுச் செயலாளர்கள் ஏவீரமணி, கருங்குளம் வழக்கறிஞர் பிரபு, ஒன்றிய தலைவர்கள் டி.கேசவ செல்வன் (தூத்துக்குடி தெற்கு) மாரிமுத்து (தூத்துக்குடி மேற்கு) பொருளாளர் மாறன் சடகோபன், பாமக மாவட்ட செயலாளர் எல்.எம்.லெட்சுமணன், தலைவர் ஏ.அந்தோணி செல்வம், தமிழக மக்கள் முன்னேற் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - 9 9 - ShareChat