ShareChat
click to see wallet page
search
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல் குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார் எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய் உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார் எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார் முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல் . விளக்கம் ========= யாருக்கும் துன்பம் செய்யாமல் குருவுக்கும் குருவாக அறிவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். தம்மை எதிர்த்தவரைத் தமது திறமையால் அடக்கி எல்லாருக்கும் நல்லவராய்த் தமது நியாயப் போக்கைத் தடை செய்வதற்குப் பிறரால் முடியாதவராய், எல்லாச் சாதியினருக்கும் நல்லவராகவே அவர் வாழ்ந்ததால் எல்லாச் சாதியினரும் அவரிடம் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். முன்பு பிறந்த பெரியவர்களின் உயர்வு இவரது உயர்வுக்கு ஒப்பாகாது. . . அகிலம் ======== பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார் தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும் ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார் ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன் ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார் . விளக்கம் ========= அவர் எல்லாரிலும் இளையவராய்ப் பிறந்தும், புத்தியும் உயர்வும் உள்ளவராய் வளர்ந்து வந்தார். தாய், தகப்பன், மாமன் எல்லாரும் இவன் அமைதியும், உயர்வும் பொருந்தியவன் என்றும், இவன் சிறந்த நியாயவான் என்றும் கூறும்படியும் வளர்ந்து வந்தார். அவர் ஊருக்குத் தலைவனாகவும், தாம் பிறந்த குடும்பத்துக்குத் தலைவனாகவும், எல்லாருக்கும் தலைவனாகவும் உயர்வடைந்த அவரை அவரின் தாயும், தந்தையும் வளர்த்து வந்தனர். . . அகிலம் ======== ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித் தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார் சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன் மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன் மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன் எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான் எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார் . விளக்கம் ========= இவனிடம் நீதியும் நியாயமும் இருப்பதால் இவன் நாடாள்வான் என்று கூறி, இவன் தாயும் சுற்றத்தாரும் வளர்த்தனர். பேசும் திறனும், சிறந்த வீரனாகவும், மல்யுத்தத்தில் வல்லவனாகவும், சிறந்த தந்திரம் உ்ளவனாகவும் பெண்டிர்களுக்கு ஏற்றபடி நடப்பவனாகவும், மிகுந்த காம இச்சை உடையவனாகவும் இருந்து எல்லாரும் தமது பெயரைக் கேட்க வைத்திடுவான். இவன் புகழோடும், உயர்ந்த மன நிலையோடும், பல்லக்கு ஏறி இந்த உலகம் முழுவதிலும் ஆட்சி புரிந்திடுவான். எல்லாருக்கும் நல்லவனாக இவன் அமைவான் என்று சொல்லி எல்லாரும் கூடி இன்பத்துடன் வளர்த்து வந்தனர். . . அகிலம் ======== அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே பத்து வயது பண்போ டிருபதிலே மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார் எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப் பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல் கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார் ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார் . விளக்கம் ========= இவ்வாறு எல்லாரும் மகிழ்வோடு அவரை வளர்த்து வருகின்ற தருணத்தில் பத்து வயதில் இருபது வயது மதிக்கத்தக்க பண்போடு தமக்கு நிகர் தாமே என்று சொல்லும் வகையில் தலைவனைப் போன்று வளர்ந்து வந்தார். எல்லாத் தொழிலையும் எளிதாகக் கற்று முடிநத்தார். கல்வி திமிர் பிடித்த பொல்லாதவரோடு பெரும் பகை கொண்டவரைப் போன்று கோபம் கொள்வார். கல்லாதவர்களையும் தமது மனத்தின்கண் நிறுத்தி அவர்களை என்றும் மறவாவண்ணம் நினைத்து, அவர்களை மகிழ்ச்சி கொண்டு நேசித்தார். செல்வமின்றி வாடும் எளியோரைக் கண்டு தருமம் கொடுப்பதில் தருமர் எனப் பெயர் பெற்றார். தத்துவ ஆராய்ச்சி செய்வதற்கும் சிறந்தவர் என்னும் பெயரோடும் வளர்ந்து வந்தார். . . தொடரும்… அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணநீ முன்னடநீ தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே ! அய்யா  10.04.2021 Mthn .rakash ுருங்கோ ! போல் வீரத்தனமாய் விளக்கின ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணநீ முன்னடநீ தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே ! அய்யா  10.04.2021 Mthn .rakash ுருங்கோ ! போல் வீரத்தனமாய் விளக்கின ஒளி - ShareChat