ShareChat
click to see wallet page
search
ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை சுந்தரகாண்டம் முழுவதும் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் மஹிமையை வர்ணிப்பது தான். முதல் ஸர்கத்தில் மஹேந்திரமலை மேல் ஏறி மிகப்பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டும், கர்ஜனை செய்துகொண்டும், மலைகளைக் கால்களால் மிதித்ததில் மலைப்பாறைகள் நொறுங்கி நாலா பக்கங்களும் சிதறிற்று. ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைக் காட்டுகிறது. 5ராமபாணம் போல் ஆஞ்ஜநேயர் சமுத்திரத்தின் மேல் போகிறார் என்று வால்மீகி முனிவர் சொல்வதிலிருந்து ராமபாணம் எப்படிக் குறி தப்பாதோ அப்படிச் சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டி அக்கரை போய்ச்சேர்வார். பாணத்தை ஒருவர் குறிவைத்து நாண்கயிறு ஏற்றினால் தானே போகும்! அதேபோல் தானாகப் போகவில்லை; ஸ்ரீராமரின் க்ருபையால் தான் இந்த அகண்ட சமுத்திரத்தை என்னால் தாண்ட முடியும் என்று ஆஞ்ஜநேயர் எண்ணினார். தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், ஸ்ரீராமருடைய காரியமாய் வரும் ஹனுமாருக்கு உதவி புரிய நினைத்து கடலில் மூழ்கியிருக்கும், மைனாக மலையைத் தூண்டிவிட்டு, மேலே எழும்பி வரும்படிச் செய்து, ஆஞ்ஜநேயரை மலைமேல் உட்கார்ந்து இளைப்பாறச் செய்து, கிழங்குகள் பழங்கள் முதலியன அவருக்குக் கொடுத்து ஸத்கரிக்கும்படி சொன்னார். மைனாக மலையும் மேலே எழும்பிவந்து, ஹனுமாரை இளைப்பாறி விட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. வாயு பகவானால், மைனாக மலை இந்திரனிடமிருந்து காப்பாற்றப் பட்டதால், வாயு குமாரருக்கு உதவி செய்ய தானும் கடமைப்பட்டிருப்பதாக மைனாக மலையும் நினைத்தது. ஆனாலும் ஸ்ரீ ஹனுமார் என்ன நினைத்தார் தெரியுமா? ராம பாணத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற காரணத்தினால் மைனாக மலை மேல் தான் இளைப்பாறக்கூடாது. ராம பாணம் குறி தப்பாது. அதன் வேகத்தை மைனாக மலை தடுக்க முயற்சி செய்கிற மாதிரி ஆகிவிடும். ராமபாணத்தின் மதிப்பையும் குறைப்பதாக ஆகி விடும். உப்புக்கடலின் நடுவே பலவிதமான கிழங்குகளும் பழங்களும் கிடைப்பது ஒரு பெரிய ஆச்சர்யம் தான். நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள். ராம பக்தனுக்கு, சமுத்திர ராஜன் தூண்டுதலில், மைனாகமலை ஸ்ரீ ஹனுமனைத் தன்னிடம் ஸத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கே, இந்திரன் தன் சாபத்தை விலக்கிக்கொண்டு, தன்னிடம் இனிமேல் பயம் இல்லாமல் சுதந்திரமாக எங்கும் சஞ்சரிக்கலாம் என்று மைனாக மலைக்கு வரம் கொடுத்து விட்டார். இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது: ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும். அனந்தனுக்கு 1000 நாமங்கள்! அனந்தஜிதே நமஹ (Ananthajithe namaha) ஊழிக் காலத்தில் உண்டாகும் ஊழிக் கடல் வெள்ளத்தில் இருந்து உலகங்களையும் உயிர்களையும் காக்க வேண்டி ஆலிலைக் கண்ணனாக வந்த திருமால், உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காத்தார். இந்த அவதாரக் காட்சியை மார்க்கண்டேய முனிவருக்குக் காட்டினார் திருமால்.ஆலிலைக் கண்ணனின் அவதாரத்தையும் செயல்களையும் கண்ட மார்க்கண்டேயர், “முள்ளை முள்ளால் எடுப்பது போல், கடலில் இருந்து காப்பதற்காக நீயே கடல் போல் வந்துள்ளாயே!” என்று ஆலிலைக் கண்ணனைத் துதித்தார். ஆலிலைக் கண்ணன் மார்க்கண்டேயரைப் பார்த்து, “சிறிய வடிவத்துடன் வந்திருக்கும் என்னை ஏன் கடலோடு ஒப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு மார்க்கண்டேயர், “கண்ணா! கடலை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடற்கரைக்கு அருகில் வாழ்பவர்கள் தினந்தோறும் கடற்கரைக்குச் சென்று ஆனந்தமாக அந்தக் கடலைக் கண்டு ரசித்து விட்டு வருவார்கள். அதுபோலத் தான் உன்னையும் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் அலுப்பு ஏற்படாது. அப்போதைக்கு அப்போது நீ ஆராவமுதமாக இருக்கிறாய். மழை பொழிந்து தான் கடலுக்குத் தண்ணீர் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. அது எப்போதுமே தன்னிறைவோடு இருக்கும். அதுபோலத் தான் நாங்கள் தொண்டு செய்வதால் தான் உனக்குப் புதிதாகப் பெருமை வரவேண்டும் என்பதில்லை. நீ எப்போதுமே ஆனந்தமே வடிவெடுத்தவனாய் இருக்கிறாய்.கடல் தேவர்களுக்கு அமுதத்தைக்கொடுத்தது. நீயோ உன் அடியார்களுக்கு உன்னையே ஆராவமுதமாகத் தந்து விடுகிறாய். மதியைக் (சந்திரனை) கண்டால் கடல் பொங்குகிறது. நீ மதி (ஞானம்) மிக்க ஞானியர்களைக் கண்டால் மகிழ்ச்சியால் பொங்குகிறாய்.கடலை எத்தனை பேர் வேண்டுமானாலும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் எல்லோராலும் கடலுக்குள் மூழ்கி முத்தெடுத்து வர இயலாது. அது போலத் தான் உன்னைத் தூரத்தில் இருந்து எத்தனையோ பேர் காண்கிறார்கள். ஆனால் உனது பெருமைகளின் ஆழத்தையும், நீ யார் என்பதையும் யாராலும் முழுமையாக அறிய முடியாது. முக்கியமாக, கண்ணா! கடலுக்கும் எல்லை இல்லை! உனக்கும் எல்லை இல்லை. தூரத்தில் இருந்து நாம் பார்க்கையில், ஏதோ கடலுக்கு எல்லை இருப்பது போல் கூடச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் கடலில் இறங்கிப் பயணிக்கப் பயணிக்க, அதன் எல்லையைக் காணவே முடியாது என்பதை உணர்வார்கள். அதுபோலத் தான் நீ பார்ப்பதற்குச் சிறு குழந்தை போலத் தெரிகிறாய். ஆனால் நானும் உனது வாய்க்குள்ளே நுழைந்து உனது திருமேனி முழுவதும் நூறு ஆண்டுகளுக்கு மேல் தேடிப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும் போது குழந்தையாகத் தோன்றும் உனது திருமேனிக்கு உண்மையில் உள்ளே எல்லை என்பதே இல்லை என அறிந்து கொண்டேன். அந்த: சரீரே தஸ்யாஹம் வர்ஷணாம் அதிகம் சதம் ந ஹி பச்யாமி தஸ்யாஹம் அந்தம் தேவஸ்ய கர்ஹிசித் ஆஸாதயாமி நைவாந்தம் தஸ்ய ராஜன் மஹாத்மன:” என்று விடையளித்தார் மார்க்கண்டேயர். ஆல மர விதை சிறியதாக இருந்தாலும், அந்தச் சிறிய விதைக்குள் பெரிய ஆல மரமே அடங்கி இருக்கும் அல்லவா? அதுபோல ஆலிலைக் கண்ணனின் தோற்றம் சிறு குழந்தை போலத் தெரிந்தாலும், அத்தனை உலகங்களும் அந்தச் சிறு வடிவத்துக்குள் அடங்கி இருக்கிறது. உண்மையில் அவரது மகிமைக்கு எல்லை என்பதே இல்லை. ‘அந்தம்’ என்றால் எல்லை என்று பொருள். ‘அனந்தம்’ என்றால் எல்லையற்றது என்று பொருள். யாராலும் எல்லை காண முடியாத படியான உயர்ந்த மகிமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால், ‘அனந்தஜித்’ என்று அவர் போற்றப்படுகிறார். ‘அனந்தஜித்’ என்றால் எல்லையில்லாத மகிமை பெற்றவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 308-வது திருநாமம். “அனந்தஜிதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் சிறந்த மகிமைகளும் திறமைகளும் பெருமைகளும் கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார். ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 ஸ்ரீராமானுஜர் நூற்றந்தாதி🙏 ஸ்ரீராமானுஜர்🙏 💥 மோட்சம் தரும் "ஓம் நமோ நாராயணாய" மந்திரத்தை உலகுக்கு சொன்ன ஸ்ரீ ராமானுஜர் 💥 🍁🌺திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில், கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. இவரிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யரான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு நடந்தே இங்கு வந்தார். 🍁🌺நம்பியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அழைத்தார் ராமானுஜர். 🍁🌺திருக்கோஷ்டியூர் நம்பி, ‘யார்?’ என்று கேட்டார். 🍁🌺‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்றார். 🍁🌺நம்பி வீட்டிற்குள்ளிருந்தபடியே, நான் செத்து வா! என்றார். 🍁🌺இதைப் புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். 🍁🌺இப்படியாக, தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைச் சொன்னார். பார்க்கக்கூட இல்லாமல் திருப்பி அனுப்பினார். 🍁🌺அடுத்த முறை சென்ற ராமானுஜர் அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அப்போதுதான் அவரை உள்ளே அழைத்தார் நம்பி. 🍁🌺 ஓம் நமோ நாராயணாய என்ற மந்திர உபதேசத்தை ராமானுஜருக்கு அருளினார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டார். மீறி எவருக்கேனும் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும் என்றும் எச்சரித்தார். 🍁🌺ஆனால், ராமானுஜரோ *நாராயண மந்திரத்தை எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். அதன் வாயிலாக பெருமாளின் திருவடியைச் சரணடைய வேண்டும். எல்லோருக்கும் பரமபதம் கிடைக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். 🍁🌺நம்பியின் வீட்டில் இருந்து கிளம்பியவர், விறுவிறுவென கோயிலுக்குள் வந்தார். கோயிலின் விமானத்திற்குள் சென்றார். கோயிலின் உச்சியில் நின்றுகொண்டார். மக்கள் அனைவரையும் குரல் கொடுத்து அழைத்தார். 🍁🌺 இதோ... நம்மை உய்விக்கும் மந்திரம்... நாராயண மந்திரத்தை எல்லோரும் கேளுங்கள். சொல்லுங்கள். உங்களுக்கு பரமபதம் நிச்சயம். வைகுண்டம் கிடைப்பது உறுதி. 🍁🌺மோட்சத்துக்குச் செல்வீர்கள் என்று மந்திரத்தை பெரும் குரலெடுத்து சொன்னார். மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்து அருளினார். 🍁🌺அவ்வளவுதான். கடும் கோபம் கொண்டார் நம்பி. ராமானுஜரைக் கடிந்து கொண்டார். 🍁🌺 அவரிடம் ராமானுஜர் பணிவுடன் சொன்னார்... ‘எனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்’ என்றார். 🍁🌺இதைக் கேட்டு நெகிழ்ந்த நம்பி, ‘நீ என்னிலும் பெரியவன், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித் தழுவிக்கொண்டார். 🍁🌺 அத்தகைய புண்ணிய பூமி திருக்கோஷ்டியூர் என்கிறது ஸ்தல புராணம். 🍁🌺 கோயிலில், திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🍁🌺ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகளே சரணம்🍁🌺. ஓம் நமோ நாராயணாய. ,🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
🙏பெருமாள் - ShareChat