ShareChat
click to see wallet page
search
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜
🤔புதிய சிந்தனைகள் - இன்றைய நிலையை உணர்த்தும் சிறு கதை இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள் . அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் . பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உவர்த்திக் கொண்டிருந்தாள் . பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள் , அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது . துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள் கணவனும் பார்த்தான் , ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை . தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும் , பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள் . திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள் , அப்பாடா , இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா .. ? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை ... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன .. கணவன் அமைதியாகச் சொன்னான் , இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன் இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன . நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன . ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை . ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன . அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட கம்மாக் யோசிச்ச அங்கமித்தை TidyNotes - ShareChat