Elangovan.
808 views • 12 hours ago
#காலை வணக்கம் ஓரம்
பாட்டி கைகள் பேசும்
பாசம் நனையும்.
காலைப் பனி
கல்லில் துவைக்கும் அன்பு
காலம் சிரிக்கும்.
நீரின் இசையில்
பாட்டி சொல்லும் பாடம்
மனம் மலரும்.
துணி துவைப்பில்
தலைமுறை இணைகிறது
அன்பின் நூலில்.
சிரிக்கும் பேத்தி
சுருங்கிய கை விரலில்
வாழ்க்கைப் பாடம்.
நெல்வயல் காற்று
வாய்க்கால் அலை தழுவ
நினைவுகள் பூக்கும்.
பொற்கதிர் காலை
பாட்டி சிரிப்பில் இன்று
வீடு வசந்தம்.
வாய்க்கால் நீரில்
அப்பாவின் மகிழ்ச்சி நீந்தும்
குடும்ப சொர்க்கம்.
கல்லின் மேலே
கழுவும் துணி அல்ல
நினைவுகள்தான்.
17 likes
26 shares