ரவிசங்கர் ராஜா, ஆரணி
3K views 2 months ago AI indicator
*ஸ்ரீபாத ஸப்ததி* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:14* த்ருஷ்ட்வா ராத்ரிஷு சந்திரபாதஜனிதாம் பாதோருஹாணாம் வ்யதாம் தேவி த்வம் கருணாகுலேவ குருஷே தத்வைர நிர்யாதனம் மானாநம்ரமகேச மெளலிவலபீவாஸஸ்ய சீதத்விஷோ நித்யம் பங்கஜ பாதகாத ஜனிதா பாதா யதாதீயதே தேவியே! ராத்திரி வேளையில் சந்திரனுடைய (பாதங்களினால்) கிரணங்களினால் தாமரை மலர்களுக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படுவதைப் பார்த்து நீ கருணையினால் சந்திரனைப் பழி வாங்க நினைக்கிறாய். அதனால் பிரணய கலகத்தின் போது தலை வணங்கும் ஸ்ரீபரமேஸ்வரனுடைய சிரஸின் மீது வசிக்கும் சந்திரனை உன் கமலம் போன்ற ஸ்ரீபாதத்தினால் அடித்து அந்த சந்திரனுக்கு துன்பத்தைக் கொடுக்கிறாய். மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம் 14ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
13 shares

More like this