#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
அருப்புக்கோட்டை தாசில்தாரை மாற்றம் செய்ய கோரி அதிமுக வேட்பாளர் சோலை சேதுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம்.அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் முறைப்படி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 3 மாதமாக நாங்கள் தாசில்தாரிடம் பலமுறை தேர்தல் விதிமுறைகளை கேட்டோம். எந்தவித தகவலும் இல்லாமல் இருந்ததால் இன்று அதிமுக அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சோலை சேதுபதி தலைமையில் நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


