#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
சத்குரு சாரிட்டபில் டிரஸ்ட் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சத்குரு சாரி ட்டபில் டிரஸ்ட் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சாரி ட்டபில் டிரஸ்ட் பொறுப்பாளர் தவத்திரு திருப்பாத சுவாமிகள் தலைமையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்ட சாதுக்களும் ஏழை மக்களுக்கும் கிரிவலம் பக்தர்களுக்கும் கலந்து கொண்டனர் இந்த முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இலவச முகாமில் கண்ணீர் அழுத்த நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் பரிசோதனை செய்யப்பட்டது கிட்டப் பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்துப் போன்ற பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தகுந்த பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் 52 நபர்களை பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது


