#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
மே 4 ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி,ஏப்.29-
தூத்துக்குடியில் வரும் மே 4 ல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் (2026) வாக்கு எண்ணிக்கை 04.05.26 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களின் பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தலைமை வகித்தார்.
.
நிகழ்வில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதன் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அலுவலர்களின் கடமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக் கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையில் எவ்வித தடங்களும் இன்றி நேர்மையான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.


