#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் மிளகாய் குப்பம் ANM. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.ஹெலன், சின்ன மிட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஏ. லலிதா,K.N. பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.எஸ். ஜனார்த்தனன், பாலமுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ். சுதாகரன்,தெங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே. சம்பத், தீயார் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை வி.சி. செல்வகுமாரி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் எம் .ரேவதி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர் இலா.தியோர் ராபின்சன் நினைவு பரிசு வழங்கினார் . ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொறுப்பாளரும் மற்றும் இராணிப்பேட்டை செயலாளருமான பொ.யோசுவா சிறப்புரையாற்றினார். முடிவில் பொருளாளர் ஆர்.சோகாராமன் நன்றி கூறினார்.


