ShareChat
click to see wallet page
search
மக்கள் நலன் மட்டுமே நோக்கமேத் தவிர, எவ்வித ஈகோவும் பாமகவிற்கோ தலைவர் அன்புமணி அவர்களுக்கோ இல்லை! மூன்று படமுமே முதல்வராக இருந்தவர்களிடம் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கிய போது! முதலாமவர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆணையம் அமைத்தார், சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டார். இரண்டாமவர் அமைத்த ஆணையத்தையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வேடிக்கைப் பார்த்தார். மூன்றாமவர் தேர்தலுக்கு முன்னரே பாமக சொன்னதையே வாக்குறுதியாக சொன்னார். ஆட்சிக்கு வந்த பின்னரும் செய்வேன் என உத்திரவாதம் அளித்திருக்கிறார். தேர்தலில் தோல்வியடைந்தோம் என்பதற்காக முடங்கிப் போகும் கட்சியல்ல, பாட்டாளி மக்கள் கட்சி. மக்கள் நலன் மட்டுமே முதன்மையானது, அதிகாரத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும், மக்களுக்கானதை கேட்டுப் பெறுபவரே மக்கள் தலைவன்! மனு கொடுக்கும் தலைவராக இல்லாமல், மனுவைப் பெறும் தலைவராக மக்கள் அன்புமணி அவர்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மனு அளிக்கும் நிலையே இல்லாமல் அனைத்தையும் செவ்வனே செய்து முடித்திருப்பார். ஆனாலும் எவ்வித தனிமனித ஈகோவிற்கு இடம் அளிக்காமல், மக்களுக்காக நிற்கும் தலைவர் அன்புமணி அவர்களின் தொண்டனாக இருப்பதை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறேன்! #AnbumaniRamadoss #🤝பா.ம.க #👨‍🦰தளபதி விஜய் #தலைவர் விஜய் (TVK) ##TVK Vijay #📺வைரல் தகவல்🤩
🤝பா.ம.க - 2018 2022 தமிழ்நாடு அரசு COVDKNDIUNT OE u 2026 2018 2022 தமிழ்நாடு அரசு COVDKNDIUNT OE u 2026 - ShareChat