#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵
*ஸ்ரீ:*
*ஸ்ரீமதே ராமாநுஜாய நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛
*ஸ்ரீமத் வரவரமுநயே நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*பெரியாழ்வார் திருமொழி...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
*பாசுரம்:148...!*
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.
*விளக்க உரை:*
***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம். தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க. காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.
*🌹பாடல் என் : 149 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹*
*🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏*
*🙏ஓம் நமோ🙏*
*🙏நாராயணா🙏*
*தொடரும்...*
🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨


