தமிழ்சீயான்43
1K views • 5 hours ago
இன்றைய திருவிழா
(ஜூலை 16)
✠ தூய கார்மேல் அன்னை ✠
(Our Lady of Mount Carmel)
திருநாள் : ஜூலை 16
பாதுகாவல் :
கார்மேல் சபையினர் (Carmelites), சிலி (Chile), பொலிவியா (Bolivia), குயியபோ (Quiapo), மணிலா (Manila), புதிய மணிலா (New Manila), குயிஸான் நகர் (Quezon City), மலோலாஸ் நகர் (Malolos City), புலாகன் (Bulacan), கெடமேகோ (Catemaco), ஐலேஸ்ஃபோர்ட் (Aylesford), ரோரைமா (Roraima), பிகிர்கரா (Birkirkara), ஜபோடிகபல் (Jaboticabal), வல்லெட்டா (Valletta), பெர்னம்புக்கோ (Pernambuco), ஹிகுவேரோட் (Higuerote), தீங்கிலிருந்து பாதுகாப்பு (Protection from harm, ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பு (Protection from dangerous situations), உத்தரியத்திலிருந்து விடுவிப்பு (Deliverance from Purgatory)
"தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களாகும்.
கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னை மரியாளின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னை மரியாளுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.
15ம் நூற்றாண்டில், அன்னை மரியாளின் உத்தரியம் (Brown Scapular) என்னும் அருளிக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. அன்னை மரியாளே உத்தரியத்தை புனிதர் “சைமன் ஸ்டாக்” (Saint Simon Stock) என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக விசுவசிக்கப்படுகின்றது. ஜூலை மாதம் 16ம் நாள், கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் மற்றும் கார்மேல் உத்தரிய திருவிழாவாகும்.
தூய கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார். இவ்விழாவானது, கார்மேல் சபையினரின் அதிமுக்கியமான விழாவாகும். கார்மேல் சபையினர் இந்த பெயரைத் தெரிந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் உண்டு. கார்மேல் மலையிலே அன்னை புனித கன்னி மரியாளுக்கு ஸ்தோத்திரமாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கபட்டது. அன்னை பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.
எபிரேய மொழியில் "கார்மேல்" என்ற சொல்லுக்கு "தோட்டம்" என்பது பொருள். பாலஸ்தீன நாட்டில் ஹைபா வளைகுடாவில், 1800 அடி உயரத்திலிருக்கும் தோட்டத்தில்தான் பழைய ஆகமத்தில் இறைவாக்கினர் எலியா தங்கி தன் செபத்தில் நாட்களை கழித்தார். 12ம் நூற்றாண்டில் வனத்துறவியர் சிலர் இதே மலைக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தனர். பின்பு இவர்கள் ஒரு சபையை நிறுவினர்.
1251ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாளன்று, கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித “சைமன் ஸ்டாக்” (Saint Simon Stock) என்பவருக்கு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் தேவதாய் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இவருக்கு, அன்னை மரியாள் உத்தரியம் அணிந்து கொண்டு வந்து காட்சி கொடுத்து, உத்தரிய பக்தியை இவ்வுலகில் பரப்பும்படியாக கேட்டுக் கொண்டதன் பேரில், இன்றும் அப்பக்தி பரப்பப்பட்டு பலன் அடையப்படுகின்றது.
நம் பரலோக அன்னை உத்தரியத்தைக் கண்பித்தார்.
அந்த உத்தரியத்தைத் தரித்திருக்கும் அனைவருக்கும் பரலோக கொடைகளையும் தனது பாதுகாவலையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினார். வெறுமனே உத்தரியத்தைத் தரித்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க அதிகாரம் பெற்ற ஒரு குரு, உத்தரியத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
கார்மேல் அன்னையை நோக்கி செபம்:
ஓ கார்மேல் மலையின் மிக அழகிய மலரே, கனிவான திராட்சையே, பரலோகத்தின் மகிமையே, கடவுளுடைய குமாரனின் ஆசிர்வதிக்கப்பட்ட தாயே, பரிசுத்த கன்னியே, என் தேவைகளில் எனக்கு உதவுமம்மா. ஓ ஆழ்கடலின் வழிகாட்டும் நட்சத்திரமே, எனக்கு உதவி செய்யும். நீர் எமது தாய் என்று காட்டுமம்மா. ஓ தூய மரியாயே, கடவுளின் கன்னித் தாயே, பரலோகம் மற்றும் பூவுலக அரசியே, என் தேவையில் (தேவையை கூறவும்) உதவுமாறு என் இருதயத்தின் அடியிலிருந்து உம்மை மன்றாடுகிறேன் அம்மா. உமது சக்தியை எதிர்த்து நிற்க எவராலும் இயலாது தாயே. ஜென்மப்பாவமின்றி கருத்தரித்த மரியாயே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக உமது திருவயிற்றின் கனியும், எமது மீட்பருமாகிய இறை இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுமம்மா. எங்கள் இனிய அம்மா, நான் எனது தேவைகளை உமது திருக்கரங்களில் வைக்கிறேன் தாயே, ஆமென் †
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
30 likes
25 shares