ShareChat
click to see wallet page
search
*🌳 கோயிலில் உள்ள மாமரத்தில் மாங்காயை திருடி சென்றதால் அந்த மாங்காய்கள் பாம்பாக மாறிய உண்மை சம்பவம்.* *📝 இது கதை அல்ல நிஜம்.* *✨ சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த உண்மை சம்பவம் வருடங்கள் பல ஆனாலும் இன்றும் அதே போன்று அற்புத உண்மை சம்பவங்கள் அந்த திருக்கோயிலில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.* *🪦 தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கிராமத்து தெய்வங்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலமாகும். பக்தர்கள் வேண்டிடும் வரங்களை தந்திடும் சக்தியின் சொரூபமாக அன்னை பாகம்பிரியாள் விளங்குகிறார் மருத்துவத்துறைக்கு சவாலாக உள்ள தீராத பலவிதமான நோய்களும் இன்றும் அம்மனின் தீர்த்ததின் திருவருளால் நீங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஸ்தலத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம்.* *இந்த ஸ்தலத்தில் அறந்தாங்கியை சேர்ந்த ஒரு குடும்பத்தார். பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது சுற்று பிரகாரத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்மணி அதை பறித்து ஒரு மாங்காயை சாப்பிட அந்த மாங்காய் மிகவும் சுவையாக இருந்துள்ளது. இரண்டு மாங்காய்களை சாப்பிட்ட அந்த பெண்மணிக்கு ஆசை அதிகமாகி ஏழெட்டு மாங்காய்களை பறித்து பையில் போட்டு ஊருக்கு கொண்டு செல்ல தயாரானார். தரிசனம் செய்து முடித்து ஊருக்கு கிளம்பி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது திருவாடானை பேருந்து நிலையத்தில் இறங்கி அறந்தாங்கி பஸ்க்கு காத்திருக்கும் போது மாங்காய்கள் வைத்திருந்த பையின் உள்ளே ஏதோ முன்டி நெளிந்து இருந்திருக்கிறது. என்னவென்று அந்தப் பையை பார்த்த குடும்ப தலைவர் அதிர்ந்து போனார். அந்த பையிலே ஒரு பெரிய பாம்பு ஒன்று சுற்றி படுத்தபடியே இருந்துள்ளது. பயந்த அந்த குடும்பத்தார் எப்படி பையில் பாம்பு வந்தது என்று தெரியவில்லையே... என திகைத்து நிற்க. அவரது மனைவி நடந்த சம்பவத்தை சொல்ல... கோயிலில் உள்ள மாமரத்தில் எழு எட்டு மாங்காய்களை பறித்து வந்தேன் ஆனால் தற்போது மாங்காய்களை காணவில்லை. ஆனால் பாம்பு உள்ளது என்று சொல்ல பயந்து பதறி அவர்கள் பையை மீண்டும் திறக்காமல் அப்படியே திருவெற்றியூர் கோயிலுக்கு வேறு பேருந்தில் திரும்பி வந்து கோவில் மாமரத்து கீழேயே அந்தப் பையை வைத்து விட்டார்கள்.* *நடந்த சம்பவத்தை கோயில் குருக்களிடம் கூறிய அந்த குடும்பத்தார் அந்த பையை ஐயர் திறந்து பார்த்தபொழுது அதில் ஏழெட்டு மாங்காய்கள் மட்டுமே தான் இருந்தது பாம்பு எதுவும் இல்லை அதிர்ச்சியுற்ற அந்த குடும்பத்தார் திருடிச் சென்ற மாங்காய்களே பாம்பாக மாறியதை புரிந்து கொண்டார்கள்.* *இந்த சம்பவம் காட்டுத் தீ போல் எங்கும் பரவியது இந்த உண்மை சம்பவம் பலருக்கும் தெரியும் இன்று வரை இந்த நிகழ்வை பல ஆயிரக்கணக்கான பக்தர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த மாமமரம் இன்றும் அதே கோயிலில் உள்ளது இந்த மாமரத்தில் உள்ள மாங்காயை திருடி சென்றதால் தான் மாங்காய் பாம்பாக மாறியது என்று தற்போது வரை ஆயிரக்கணக்கான பக்தர்களால் பேசப்பட்டு வருகிறது.* *அதே போன்று தற்போதும் ஒரு சுவையான சம்பவம் நடந்துள்ளது.* *ஒரு மாதத்திற்கு முன்னால் பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த ஒரு குடும்பத்தார் மாவிளக்கு இடிக்கும் பொழுது அந்த இடத்தில் தங்களது செல்போனை மறந்து அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பி விட்டார்கள்‌. பத்து நிமிடத்திற்கு பின்னால் வந்த இடத்திற்கு ஒரு தம்பதியினர் அதை போனை எடுத்து எடுத்துச் சென்றுள்ளார்கள். ஒரு மணி நேரத்திற்கு பின்பு போனை பறிகொடுத்தவர்கள் தேடி கிடைக்காத காரணத்தினால் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பார்த்த பொழுது இவர்கள் மாவிளக்கு வைக்கும் இடத்தில் போனை மறந்து விட்டு சென்றதும் அதை பின்னால் வந்த ஒரு தம்பதியினர் எடுத்துச் செல்வதும் நன்றாகவே கேமராவில் தெரிந்தது இருந்தும் என்ன பயன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலில் யாரை கண்டுபிடிப்பது. இருப்பினும் கோவில் ஊழியர்கள் அவர்களை தேடிய பொழுது அவர்கள் கோயிலில் எங்குமே இல்லை அவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்பாக பேருந்தில் செல்வது தெரிகிறது. அவர்கள் யாரோ எவரோ தெரியவில்லை. போனை பறிகொடுத்தவர்கள் கோயில் அலுவலகத்தில் தங்களது விலாசம் போன் நம்பரை கொடுத்து விட்டு சென்றார்கள். இருப்பினும் இந்த கோவிலில் எந்த பொருள்களும் காணாமல் போகாது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் தங்களது போன் மீண்டும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வீடு சென்றார்கள்.* *போன் காணாமல் போன அந்த நாளின் இரவு நடந்தது தான் ஒரு அற்புதம்.* *மூன்று நாள் கழித்து அதே கோயிலுக்கு வந்த ஒரு அன்பர் அர்ச்சனை சீட்டு விற்பனை செய்யும் மையத்தில் ஒரு போனை கொடுத்து மூன்று நாட்களுக்கு முன்னால் தாங்கள் இந்த கோவிலுக்கு வந்ததாகவும் தங்களது குழந்தைகள் தெரியாமல். யாரோ ஒருவர் மறந்து விட்டு சென்ற போனை தெரியாமல் எடுத்து வந்ததாகவும் கூறி போனை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கொடுத்தார்.‌ஆனால் நடந்த சம்பவம் தான் அவர்களுக்கு தெரியுமே போனை எடுத்ததே இந்த அன்பர் தான் என்று..* *அவரிடம் ஐயா நீங்கள் தான் போனை எடுத்தீர்கள் நாங்கள் சிசிடிவி கேமராவில் பார்த்து விட்டோம் இருந்தாலும் பரவாயில்லை திரும்ப கொண்டு வந்து ஒப்படைத்து உள்ளீர்கள். எடுத்து நீங்களே கொண்டு வந்து ஒப்படைத்துள்ளீர்களே என்ன நடந்தது என்று அவரிடம் கேட்க அவர் சொன்ன விஷயமோ நம்மையே புல்லரிக்க செய்தது,* *இந்த போனை எடுத்துச் சென்ற அன்று இரவே அவர் வீட்டில் திருடிய அந்த போன் இருந்த இடத்தில் ஒரு பாம்பு வந்து அந்த போனை சுற்றி இருந்ததாகவும் அவர்கள் பயந்து அந்த பாம்பை அடிக்க ஆட்களை அழைத்த பொழுது அந்த பாம்பு காணாமல் போனதாகவும் இதுபோன்று தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பாம்பு தங்கள் வீட்டில் வருவதாகவும் போன் அருகே சுற்றி இருப்பதாகவும் கூறினார். நாங்கள் கோயிலில் திருடி வந்ததால் தான் இது போன்று நடக்கிறது என்பது புரிந்து கொண்டோம். அதனால் இந்த போனை உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் செய்தது ரொம்ப பெரிய தவறு. எங்களை அந்த தாய் தான் மன்னிக்க வேண்டும் என்று கூறி... பின்பு அர்ச்சனை செய்துவிட்டு அம்மனிடம் மன்னிப்பு கேட்டு சென்றார். பின்பு அந்த போனை உரிய நபருக்கு தகவல் தெரிவித்து போனை ஒப்படைத்தார்கள்.* *இன்றும் இந்த திருக்கோவிலில் தாய் பாகம்பிரியாள் அம்மன் பாம்பு வடிவிலே பக்தர்களின் பொருட்களை பாதுகாக்கிறார். தற்போது இந்த கோவிலில் பல பொருள்களை பக்தர்கள் மறந்து தவறவிட்டாலும், ( திருடு போவது இல்லை ) தொலைத்தாலும் கோவில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுத்தவுடன் தவறவிட்ட அந்த பொருள் உடனே மற்ற பக்தர்களின் மூலமாக கிடைத்து விடும் அது பர்ஸ் தங்கப்பொருட்கள், செல்போன்கள் என பல வகை.* *இந்த வருடத்தில் மட்டும் பக்தர்கள் தவற விட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் மீண்டும் தேவஸ்தான அலுவலகத்தில் ஒப்படைக்க பட்டு பக்தர்களிடம் அந்த பொருட்கள் திரும்ப கொடுக்க பட்டுள்ளது.* #🙏கோவில் #🙏நமசிவாய ஓம்✨ #🙏ஆன்மீகம்
🙏கோவில் - 58% 12:44 ll 58% 12:44 ll - ShareChat