ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY சிந்தனை* 🌷16.05.2026🌷 வாழ்க்கை என்பது ஒரு வித்தியாசமான தேர்வு...!!! அதில் ஓவ்வொருவருக்கும் தனித்தனிக் கேள்வித்தாள்!!! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், அடுத்தவர்களைப் பார்த்து காப்பியடித்து தங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள்..!!! மனக்கசப்புகளின் போது மனம் விட்டுப் பேச மட்டும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் உண்மையான உறவுகள் பல பிரிய வாய்ப்பு இருந்திருக்காது. ரத்தத்தினால் பிணைக்கப்பட்ட உறவுகளைக் கூட பிரித்தெடுக்கும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் பணம்... அத்தகையப் பணத்துக்கு பணியாமல் உங்கள் மனதுக்குப் பலம் சேர்க்கும் உறவுகளை சம்பாதியுங்கள்... அதுவே உங்களின் உண்மையான சொத்தாகும்.. புரிதல் இல்லாத வாழ்வும்… புரிதல் இல்லாத நட்பும்… புரிதல் இல்லாத உறவும்… புரிதல் இல்லாத அறிவும்… நிலை பெறுவதில்லை..!புரிதல் நன்று அறிவை செயல்படுத்தினாலே புரிதலைப் பெற முடியும்..! கடந்து போன நாட்கள் எப்படியோ... இனி வரும் நாட்கள் நிச்சயம் அழகானவை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து பார்க்கலாமே.... ஒரு மகிழ்வான எதிர்பார்ப்போடு கடக்கும் போது எந்தப் பாதையும் முள்ளாகத் தைப்பதில்லை, பாரத்தைக் கொடுப்பதில்லை... இன்றோ நாளையோ மாற்றங்கள் வரலாம், சூழ்நிலைகள் மாறலாம். இன்றைய வேதனை அப்படியே நம்மோடு கடைசி வரை வந்து விடாது... அது சென்று விடும்... நிச்சயம் யாருக்குமே ஒருநாள் விடியும்... அதனை ஆவலோடு எதிர்கொண்டு அறிந்து கொண்டு அழகாக வாழலாமே.... சிந்தனைகளும், ஆலோசனைகளும் ஆயிரம் வாய்ப்புகளை உருவாக்கக் கூடும்... ஆனால், நம்பிக்கை ஒன்று தான் அந்த இலக்கு வரை அழைத்துச் செல்லும்... நமக்கு வாழ்வில் தோன்றும் பிரச்சனைகள் உண்மையில் பிரச்சினைகளே அல்ல... நாம் அவற்றை எதிர்கொள்ளும் விதம் தான் உண்மையில் பெரிய பிரச்சினையாகி விடுகிறது... சிந்தித்து செயலாற்றுங்கள்... வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்... 😊😊😊
innraya SINTHANAY - O.Oyidh O.Oyidh - ShareChat