MUTHUPANDIAN RAMKUMAR
549 views 6 days ago
#மாரியம்மன் அம்பாள் மகமாயி அம்மன் துணை தஞ்சாவூர் #அம்பாள் #அம்பாள் மந்திரம் 64 வகை உபசாரங்கள்..!! 1.பாத்யம் - - திருவடிகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல். 2.ஆவராணாவரோபணம் --- -நகைகளை கழற்றுதல். 3.ஸுகந்திதைலாப்யங்கம் -- வாஸனை எண்ணை தேய்த்தல். 4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல். 5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல் 6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில் தேய்த்தல். 7. உஷ்ணோதகஸ்நானம் - வென்னீரில் குளித்தல். 8. கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்- தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல். 9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல் 10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல். 11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல். 12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல். 13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல். 14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல். 15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல் 16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா: - மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள். 17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல் 18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல். 19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல். 20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை. 21.ஸீமந்தஸிந்தூரம் -வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல் 22. திலகரத்னம் - நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம். 23. காலாஞ்ஜனம் - கறுப்பு மை. 24. வாளீயுகளம் - காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது) 25. மணிகுண்டலயுகளம் - ரத்ன குண்டலங்கள். 26. நாஸாபரணம் - மூக்குத்தி - புல்லாக்கு. 27. அதரயாவகம் - உதட்டின் சிவப்புசாயம் 28. ப்ரதமபூஷணம் - மாங்கல்யம். 29. கனகசிந்தாகம் - தங்கமயமான புளியிலை போன்ற நகை. 30. பதகம் - பதக்கம் 31. மஹாபதகம் - நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று) 32. முக்தாவலி - முத்துமாலை. 33. ஏகாவளி - ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை) 34. ச்சன்னவீரம் - ஒரு ஆபரண விசேஷம். 35. கேயூரயுகளசதுஷ்டயம் - ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள். 36. வலயாவளி - வளைகள். 37. ஊர்மிகாவளி - மோதிரங்கள். 38. காஞ்சீதாம -ஒட்டியாணம். 39. கடிஸூத்ரம் - அரைஞாண்கயிறு. 40. ஸௌபாக்யாபரணம் -அரை மூடி(அரசிலை). 41. பாதகடகம் -கால்காப்பு. 42. ரத்னநூபுரம் - ரத்னமயமான கொலுசு 43. பாதாங்குளீயகம் - கால்மெட்டி. 44. ஏககரேபாசம் - ஓர்கையில் பாசக்கயிறு. 45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி 46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் - வேறொருகையில் நாமக்கரும்பு. 47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள். 48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள். 49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல். 50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் - காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல். 51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம். 52. ஆசமனீயம் - ஆசமனம். 53. கற்பூர வீடிகா -பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.) 54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் - ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு 55. மங்களாரார்த்திகம் - தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம். 56. சத்ரம் - குடை. 57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள். 58. தர்பணம் - கண்ணாடி. 59. தாளவ்ருந்தம் -விசிறி. 60. கந்தம் - சந்தணம். 61. புஷ்பம் - பூ 62. தூபம் -சாம்பிராணிதூபம் 63. தீபம் - நெய்தீபம். 64. நைவேத்யம் - நிவேதனம்.
12 likes
13 shares

More like this