Devarajan Rajagopalan
2K views 25 days ago
💥 கொல்லூர் முகாம்பிகை 💥 கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், சௌபர்ணிகா நதிக்கரையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. இது சக்திவாய்ந்த 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். பார்வதி (காளி) மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய முப்பெரும் சக்திகளும் ஒருங்கிணைந்த சக்தியாக இங்கு மூகாம்பிகை அருள்புரிகிறார். கோல மகரிஷி இங்கு தவம் புரிந்தபொழுது அவரது தவத்துக்கு இடையூறாக இருந்த மூகாசுரன் என்ற அரக்கனை மூகாம்பிகை வென்றதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் எதிர்ப்புகளை அகற்றும் சக்திவாய்ந்த ஆலயங்களில் இது ஒன்றாக விளங்குகிறது. மேலும் ஆதிசங்கரர் இந்த ஸ்தலத்தில் ஸ்ரீ சக்ரத்தை நிறுவியுள்ளார். மேற்படி ஸ்ரீ சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் அருள்பாலிப்பதாக ஆதிசங்கரர் அருளியுள்ளார். ஆதிசங்கரர் வகுத்த வழிகாட்டுதலின் படி இன்றும் இவ்வாலயத்தில் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . 💥சண்டி ஹோமம்: எதிரி பாதிப்பு நீங்க திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாஹம் நடைபெறுவது போல் இவ்வாலயத்தில் சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. எதிரிகள் செய்யும் பில்லி சூனிய பாதிப்பில் இருந்து விடுபடவும், தடைகள் நீங்கவும், செல்வ வளம் பெறவும் முப்பெரும் தேவிகளின் அருளை ஒருங்கே பெற சண்டி யாகம் மேற்கொள்ளப்படுகிறது. எதிரிகளின் மறைமுக பாதிப்பு அகல முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்து உள்ளார்கள். தற்சமயம் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் இவ்வாலயத்தில் தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது. மேலும் இசைஞானி இளையராஜா அவர்கள் இவ்வாலயத்தில் தான் வழிபட்ட பிறகே தனக்கு முன்னேற்றம் கிடைத்ததாக பல பேட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார். தற்கால பிரபலங்கள் மட்டும் இன்றி முற்காலத்திலும் போருக்கு செல்லும் முன்பு மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. அன்னை மூகாம்பிகையை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள், 🌹எதிரிகளின் சூழ்ச்சி அகலும் 🌹தடைகள் அகலும் 🌹புத்தி கூர்மை அதிகரிக்கும் 🌹செல்வ வளம் பெருகும் #🛕பராசக்தி #🙏🪔🔱 ஓம் சக்தி பராசக்தி அம்மன் அவதாரங்கள் தாயே போற்றி 🔱🪔🙏 #🙏ஓம் சக்தி 🙇 ஆதி பராசக்தி🙏அம்மன்🙏 #அம்மன் #💵மகாலக்ஷ்மி
34 likes
16 shares

More like this