ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகி்ய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும்குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %at நமசிவாய [0 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமாறறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப் பூமா ணலங்க லிலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையும் தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. %at நமசிவாய [0 சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமாறறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப் பூமா ணலங்க லிலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையும் தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. - ShareChat