திருவேதிகுடி ஈஸ்வரி அம்மை ஆச்சியின் அருள் செல்வன் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவேதிகுடி
அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர்
மரம்: வில்வம் வைத தீர்த்தம்
பாடல் எண் : 6 பண் : சாதாரி
செய்ய திருமேனிமிசை வெண்பொடி அணிந்து
கரு மான் உரிவை போர்த்து
தையமிடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம் வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்க அழிவிலாத வகையார்
வெய்யமொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே.
பொழிப்புரை:
சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப் போர்த்தவர். பிச்சையிடுங்கள் என்று இளமைவாய்ந்த உமாதேவி யாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும், மிகுந்த புகழும், குறையாத பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக் கொடை அளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும். #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்


