Bk.Shiva Kumar-7871330866
#🇲🇰 பிரம்மா குமாரிகள் - 12. #brahma kumaris - tamil ஸ்தம்பம் உருவான விதம்*
ராஜ யோகினி தாதி இருதயபுஷ்பா அவர்களின் வாழ்க்கை சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் சொன்னது....
சாந்தி ஸ்தம்பம் பாண்டபவனில் இருக்கிறது. நான்கு தாமங்களில் இந்த தாமம் ஆத்மாவில் சக்தியை வாங்கும் இடம்.
தாதி இருதயபுஷ்பா பெங்களூரில் நேரு நகரில் முரளி படித்துக் கொண்டிருந்தபோது ஒரு வயதான தீவிர பக்தர் ஒருவர் வந்தார். அவர் பெயர் மஞ்சுநாத ஐயர். மாதாஜி மாதாஜி என்று கூப்பிட்டபடியே வந்து பிரம்மாபாபாவிற்கு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும், சிவன் என் கனவில் தோன்றி கூறினார் என்று சொன்னார்.
தாதிஜி இருதயபுஷ்பா அவர்கள் உடனே யோகத்தில் போய் பாபாவிடம்
கேட்டார். சிவபாபா ஆமாம் அவர் சொல்வது உண்மை என்று சொன்னார். பிறகு பூ கொடுத்து அவரை வரவேற்றார்கள்.
பிறகு மவுண்ட் அபு தலைமை பொறுப்பில் இருந்த குமாரக்கா பிரகாஷ்மணி தாதி அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு, மீரா பெகன், லெட்சுமி பெகன், சரோஜா பெகன், ரமா பெகன், மஞ்சுநாத ஐயர் ஆகியோருடன் சேர்ந்து தாதி இருதயபுஷ்பா Tower of Peace செய்து எடுத்துக் கொண்டு ரயிலில் மதுபன் சென்றார். இந்த விஷயத்தை கேட்டு குமாரக்கா ரொம்ப ஆச்சிரியப்பட்டார். *பக்த ஆத்மாவை பயன்படுத்தி சாந்தி ஸ்தம்பத்தை உருவாக்கி இருக்கிறார் பாபா*.
சாந்தி ஸ்தம்பம் உருவான விதம்
மதுபனில் மஞ்சுநாத ஐயருக்கு பிரம்மாபாபா சாட்சாத்காரம் காட்டினார். இரு கைகளையும் நீட்டி வா குழந்தை என்று அழைத்தார். பிறகு குமாரக்கா, மஞ்சுநாத ஐயருக்கு கோல்டன் வளையம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.
மஞ்சுநாத ஐயர் மைசூர் சென்றார், அங்கு சிறிது காலத்தில் சரீரத்தையும் விட்டார். அடுத்த பிறவியில் பாபா, மஞ்சுநாத ஐயரை
சேவைக்குப் பயன்படுத்தி இருப்பார்.
அதிசயமான பாபா, அதிசயமான Drama, அதிசயமான பரிவாரம்!
🧘🏻♀️ஓம் சாந்தி.🧘🏻
🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰 🇲🇰