#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமசிவாய ஓம்✨ #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
ஐக்கியப் பெருவிழா
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் பரிபாலனத்தில் விளங்கிடும் திருப்புகலூர்
ஸ்ரீ_கருந்தார்குழலி சமேத
ஶ்ரீ_அக்னீஸ்வர_சுவாமி தேவஸ்தானம்
ஸ்ரீ அப்பர்_சுவாமிகள்
சித்திரை_சதயப்_பெருவிழா
01.05.26 முதல் 10.05.26 வரை
பாண்டி நாட்டிலுள்ள பல தலங்களை தரிசித்து விட்டார் திருநாவுக்கரச சுவாமிகள்.
பக்தியினாலும், வயதாலும் பழுத்த பழமான அப்பிரான், தாம் பரமனடி சேரும் நேரம் சமீபித்து விட்டதையும், இறையின் திருவுளக்குறிப்பால் உணர்கிறார். பின்னர் எல்லாம் வல்ல அப்பரம்பொருளின் சூட்சுமமான வழிகாட்டுதலின் படி அப்பர் சுவாமிகள் வந்து அடைந்த புண்ணிய தலம்
'சரண்யபுரி' எனும் திருப்புகலூர்.
"......தில்லை நீர்ப் புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்
குறுகா கொடுவினையே.."
- என்று துதித்த வண்ணம் உழவாரப்பணியினாலும், வாக்கினாலும் தொண்டு செய்கிறார் சுவாமிகள்.
அப்போது, பொன்னையும்; மணியையும் இறைவன் கிடக்கச் செய்த போதும், அவற்றைக் கல்லாகவும்; மண்ணாகவும் கருதி புறத்தே தள்ளியதைக் கண்ட மக்கள் சுவாமிகளைப் போற்றினார்கள்.
நல்லதொரு சித்திரையும் வந்தது. சுவாமிகள் இறைவனை நினைந்து உருகியவண்ணராய், பாடல்களைப் பாடினார்கள்.
"ஐயனே, உன்னடிகளைச் சேரும் காலம் குறுகுகின்றது. இக்கூட்டை விட்டு உயிர் பிரியும்போது, என்ன வேதனை உண்டாகுமோ? ...யான் அறியேன்! அந்த அனுபவம் இன்னதென்று உணர மாட்டேன். உன்னுடைய திருவடிக்கே போதுகின்றேன்" என்றவாறு உருகுகிறார் அப்பர் பெருமான்.
"எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்;
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்;
ஒக்க அடைக்கும் போதுணர மாட்டேன்;
புண்ணியா உண்ணடிக்கே போது கின்றேன்;
பூம்புகலூர் மேவிய புண்ணியனே!"
இப்படிப்பட்ட பத்து பாடல்கள், கேட்போரை உருக்கும்படி, சுவாமிகள் அருளிச் செய்கிறார்.
கோணப்பிரானாகிய அக்னீசுவரின் திருவருளால், சதய நட்சத்திர நாளன்று இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறும் திருப்பேற்றினை அடைகிறார்!
அப்பர் சுவாமிகளின் அருள்வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தலங்கள் ஏராளம்..! அவற்றுள் முத்தித் தலமாகப் போற்றப்படுவது திருப்புகலூர்.
அன்றைய தினம், திருப்புகலூருக்கு செல்ல இயலாவிடினும் சிறு அளவேனும் அருகிலுள்ள ஆலயங்களில்,
உழவாரத் தொண்டு செய்தலே அப்பர் அடிகளுக்கு நாம் செய்யும் உண்மையான வழிபாடு ஆகும்.
Sujatha Mali
குருவே சரணம்
முக்கிய நிகழ்வுகள்
04.05.26 - தெப்போற்சவம்
07.05.26 -
அப்பூதியடிகள்_சமாராதனை
09.05.26 - கயிலாயக்காட்சி
10.05.26 - அப்பர்_ஐக்கிய_உற்சவம்
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.


