#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 உலகத்தை மீன் தொட்டிக்கு ஒப்பிடலாம்.
அதற்குள் மிதக்கும் மீன்கள் தான் உலகில் வசிக்கும் மனிதர்கள். மீன் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீர் அவ்வப்போது நாற்றம் எடுக்கிறது.
அந்த நாற்றம் தான் உலகில் உள்ள பாடுகள்... அதாவது கஷ்டங்கள்.
மீன் தொட்டி தண்ணீர் நாற்றம் எடுத்தால் அதை மாற்றி விடுவார், அந்த வீட்டின் எஜமானர். இதே போல உலகில் உள்ள கஷ்டங்களை மாற்றும் வல்லமை படைத்தவர், ஆண்டவர்.
எனவே அவரை முழுமையாக நம்ப வேண்டும் .
மீன் தொட்டியில் நாற்றம் பிடித்த தண்ணீரில் தத்தளிக்கும் மீன்களை காப்பாற்றும் வீட்டு எஜமான் போல, உலகத் துயரங்களில் மூழ்கி தத்தளிக்கும் மக்களை காப்பாற்றுவது ஆண்டவரின் கடமை .
எனவே நமது துயரங்களை ஆண்டவரிடம் ஒப்புவித்துவிட்டு, அவர் கருணை செய்யும் நாளுக்காக காத்திருக்க வேண்டும்.


