ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் ஸ்ரீ பரீக்ஷித் மகாராஜன். தருமருக்கு பின்னால் அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்தவர் இவர். மிகச்சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தர். தனது நாட்டில் கலிபுருஷன் பிரவேசிக்க கூடாது என்பதற்காக நாட்டு மக்களை தர்ம நெறி தவறாமல் காத்து வந்தார். ஒரு முறை இவரை வந்து வணங்கிய கலிபுருஷன், தான் வசிக்க சில இடங்களைக் காட்டுமாறு கூறினான். 'சூது (பொய், களவு), போதை, விபச்சாரம், மாமிசம் (உயிர் கொலை), தங்கம் (பொருளாசை) ஆகிய பஞ்ச மாபாதகங்கள் இருக்கும் இடங்களில் நீ வசிக்கலாம்' என்று, கலிபுருஷனுக்கு, ஸ்ரீ பரீக்ஷீத் மகாராஜன் அனுமதி வழங்கினார். இந்த பஞ்ச மாபாதகங்கள் அதிகமாகும் போது, கேடுகள் நிறைந்த கலிபுருஷனின் ஆட்சி உலகில் விரிவடைகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரங்களையும், அவதார லீலைகளையும், அவரது உபதேச மொழிகளையும் கேட்டு நடப்பவர்கள், கலியின் கொடுமையில் இருந்து விடுபடுகிறார்கள். ஆதாரம் : ஸ்ரீ கிருஷ்ண தாச திவ்ய சரிதம் நூலில் இருந்து. இனிய காலை வணக்கம்.
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - இனியகாலை வணக்கம் இனியகாலை வணக்கம் - ShareChat