ShareChat
click to see wallet page
search
கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. சங்கீதம் 147:1 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார், துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். சங்கீதம் 147:2 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். சங்கீதம் 147:3 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். சங்கீதம் 147:4 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது. சங்கீதம் 147:5 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். சங்கீதம் 147:6 கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள், நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். சங்கீதம் 147:7 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். சங்கீதம் 147:8 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். சங்கீதம் 147:9 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார், வீரனுடைய கால்களில் பிரியப்படார். சங்கீதம் 147:10 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 147:11 எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி, சீயோனே, உன் தேவனைத் துதி. சங்கீதம் 147:12 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். சங்கீதம் 147:14 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார், அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. சங்கீதம் 147:15 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார், சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். சங்கீதம் 147:16 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? சங்கீதம் 147:17 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார், தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். சங்கீதம் 147:18 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். சங்கீதம் 147:19 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை, அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா. சங்கீதம் 147:20 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=147
✝️இயேசு - ShareChat
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users