Varahi
1K views 1 months ago
#கிருத்திகை முருகனுக்கு அரோகரா.! 1 படம்:பராசக்தி பாடல்:ஓ..ரசிக்கும் சீமானேவா.எ.மெட்டு. 🦚 ஓம்எனும் பொருளேவா தினமும்உனை நினைந்து உள்ளத்தில்உருவம் அமைப்போம்-திரு முருகன்எனும் பொழுது உருகும் விதத்தில்நெஞ்சம் ஆறுபடை வீடு அறிவோம்.! (ஓம் எனும்..) வடிவேலும் துள்ளிவரக்கண்டு- அழகன்ஆடிவரப் புள்ளிமயில்உண்டு- கந்தன் ஈடில்லாமயிலழகில் களித்து மனம்மகிழ்ந்து ஆனந்தம் கொள்ளுவீர் தினமே.! (திருமுருகன்..) தேவாரம் திருப்புகழைப் பாடி- இன்ப வாழ்வில் மிதந்தவர்கள் கோடி- பக்திப் பாடல்களினாலே பெறும் சக்தியைத் தினம் நினைந்து முக்தியைநீ நாடு மனமே.! (திருமுருகன்..) 2 படம்:தங்கமலை ரகசியம். பாடல்: அமுதைப்பொழியும் நிலவே.எ.மெட்டு. 🦚 வடிவேல்தாங்கிய முருகா-நீ அடியன்முன் வராததேனோ.! அடியன்முன் வராததேனோ.? (வடிவேல்..) ஓங்கிடும்திருப்புகழ் ஆசையினாலே ஏங்கிடும்மைந்தனைப் பாராய்.! குறைதனைநீக்க நிறைமுகம்ஆறும் விரைந்தெனைக்காக்க வேலுடன்இன்று.! (அடியன்முன்..) திருவடி நானும் தீண்டிய பின்னே சிறியனை வெறுத்திடலாமா.? அருள்வாய்செந்தமிழ் அழகுடன்மயிலில் இருபால்தேவியர் இருந்தெனைவாழ்த்த.! (அடியேன்முன்.) 3 படம்:பாதகாணிக்கை பாடல்:எட்டடுக்கு மாளிகையில்.! 🦚 குன்றுகளில் ஆடிவரும் குறைதீர்க்கும் என் குமரன் குன்றை விட்டு வருவானடி-இன்று குரல் கேட்டு வந்தானடி.! (குன்றுகளில்..) துயரோடும் வாழ்வில் என்று உயர்வோடு வந்த என்னை உளமார வைத்தானடி- கண்ணில் ஒளியேற விட்டானடி.! (குன்றுகளில்..) மனதில் உண்மை வைத்து மலைபோல் அன்பைவைத்து இதயத்தில் நின்றானடி-வேலன் விளையாடி வந்தானடி.! (குன்றுகளில்..) வேல் மயில் உள்ளவரை வினைதீர்க்க யார்க்கும்எந்த நேரத்திலும் வருவானடி-கந்தன் காத்தணைத்து மகிழ்வானடி.! (குன்றுகளில்..) 🦚🙏🦚 🦚 முருகா முருகா 🦚🙏🦚
49 likes
27 shares

More like this