#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ
அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ
தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ
சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ
.
விளக்கம்
==========
மகர இலட்சுமியின் வயிற்றில் குழந்தையாக உருவாகி வளர்ந்து வைகுண்ட மாமணியாக மாறப் போகிறவர் இவர்தாம். அகரமாகிய சிவகோபுர அழகுபதியாகிய அதிக பதிகள் கண்டு வந்தவர் இந்த வைகுண்டர் ஆவார். தங்கக் கோபுரமும் தளிர் மரமும் சதா மேடைகளும் கண்டு சங்கக் கூட்டம் மகிழ சகல கலைத் தமிழும் ஆயந்தவராய் வந்த வைகுண்டர் இவர்.
.
.
அகிலம்
========
உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காள வந்தவரோ
இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ
வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ
அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும்
.
விளக்கம்
==========
உலகம் பதினாலும் ஒரு குடைக்குள் ஒரு சொல்லுக்குளக் கீழ் ஆள வந்த வைகுணடர் இவரே. பிரகாசமாகத் தோன்றி எல்லாம் அமையப் பெற்று விளங்கும் தருமபதி ஆளப் பிறந்த இவர் வம்பான கலியுகக் குலத்தை அம்பு கணை ஒன்றும் இல்லாமல் அழித்துத் தருமபதி ஆள வந்தவர் இவர் ஆவார்.
.
.
அகிலம்
========
கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ
சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை
வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக்
கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ
.
விளக்கம்
==========
இந்த வைகுண்டர் எந்தவிதப் படையும் இல்லாது கலியின் குறும்புத் தன்மையை அடக்க வந்தவர். இவர் தம்மோடு போரிடத் தலையாரி முதலிய எந்தவித ஆயுதமும் இல்லாமல் கலியுகத்தை அழிக்க வந்தவர். இவர் கோள் மூட்டும் பேய்களையும் கிரகங்களின் சக்தியையும் அழிக்க வரம் பெற்று வந்தவர்.
.
.
அகிலம்
========
சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ
காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ
நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ
தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ
.
விளக்கம்
==========
சாணார் இனத்தின் குரு நாதனாகியவர் இந்த வைகுண்டர். இவர் சாணார்ச் சாதிக்குத் தற்காப்புச் செய்யும் சக்தியை அளித்த ஒப்பில்லாத தலைவர். சாணார்களுக்குக் கருவானக் குருமூலம். கர்த்தன், கர்த்தாதி கர்த்தனாகிய கடவுள் நீசக் குலங்களைக் கருவறுக்க வேண்டி நெடிய நாரணர் பெற்றெடுத்த குழந்தை இந்த வைகுண்டர். தோசம் பொருந்திய புழுச் சாதிகளாகிய கலிச் சாதியைக் கூண்டோடு அழிக்கத் திருமால் பெற்றெடுத்த குழந்தை இந்த வைகுண்டர்.
.
.
அகிலம்
========
சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ
தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ
மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து
.
விளக்கம்
==========
இந்த வைகுண்டர் ஐம்பத்தாறு தேசங்கள் எல்லாம் தமது சொல் ஒன்றின் கீழ் ஆள வந்தவர். வைகுண்டரின் நாமம் உயர்வு பொருந்திய சிறந்த நாமம். இவர் அதைப் பெற்று மக்களுக்கு உயர்வு செய்ய வந்தவர். தெய்வப் பாலர்களாகிய சான்றோர்கள் சிறப்பாகப் போற்றத் தருமபூமியை அரசாள வந்தவர். இவர் உண்மையான கட்டுப்பாடுகளை முறையாக நடத்தி மேன்மை பொருந்திய செங்கோல் முடி தரித்துத் தருமயுகம் ஆள வந்தவர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


