ShareChat
click to see wallet page
search
#கருப்பு - #Karuppu - திரை விமர்சனம் - 4/5 சென்னை ஏழு கிணறு பகுதியில் இருக்கும் குற்றவியல் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் ஒரு வக்கீல். அவர் தான் பேபி கண்ணன்(ஆர்.ஜே. பாலாஜி). காசுக்காக நீதி கிடைப்பதில் தாமதம் செய்கிறார். அவருக்கு பணம் தான் முக்கியம், நீதி இல்லை. அதனால் பேபி கண்ணன் என்றால் நீதிமன்றத்தில் ஒரு பயம் இருக்கிறது. இந்நிலையில் தொலைந்து போய் திருப்பிக் கிடைத்த நகைகளை நீதிமன்றம் மூலம் பெற வருகிறார்கள் தந்தையும், மகளும். அவர்கள் பேபி கண்ணனை அணுக அவரோ நகைகளை திருப்பி வாங்கிக் கொடுக்காமல் வேலையை காட்டுகிறார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அப்பாவோ நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கருப்புசாமியிடம் கண்ணீர் விடுகிறார். இதையடுத்து கருப்புசாமியே மனிதர் வடிவில் நீதிமன்றத்திற்கு வருகிறார். அந்த கருப்பு தான் சூர்யா. கடவுளே வந்தாலும் அங்கு தான் ஒரு பெரிய திருப்பம் இருக்கிறது. கடவுள் கான்செப்ட் என்றாலும் சூர்யா ரசிகர்களுக்காக மாஸ் காட்சிகளை சேர்த்துக் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. அது கை கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். படம் துவங்கி இப்போ வருவார், அப்போ வருவார், எந்த நேரத்திலும் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் முதல் 30 நிமிடங்கள் வரை சூர்யா வரவே இல்லை. ஆர்.ஜே. பாலாஜி, ஹீரோ சூர்யாவ எங்கய்யா காணோம் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பிக்கும்போது தான் என்ட்ரி கொடுக்கிறார் நடிப்பின் நாயகன். அவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. இடைவேளை காட்சியில் அசர வைத்துவிட்டார் இயக்குநர். இரண்டாம் பாதி சற்று மெதுவாக சென்றாலும் மைனஸாக அமையவில்லை. சூர்யாவுக்கு இன்னும் கொஞ்சம் சீன் கொடுத்திருக்கலாம் மிஸ்டர் பாலாஜி என்று சொல்ல வைத்திருக்கிறார். படத்தில் மிரட்டியிருக்கிறார் சூர்யா. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார் த்ரிஷா கிருஷ்ணன். ஆர்.ஜே. பாலாஜியின் வில்லத்தனம் ஓ.கே. தான். ஆனால் மீண்டும் இதையே தொடர வேண்டாம். சூர்யாவுக்கு ஏற்ற வெயிட்டான வில்லனாக ஆர்.ஜே . பாலாஜியை பார்க்க முடியவில்லை. இந்திரன்ஸ், அனகா மாயா, நட்டி நட்ராஜின் நடிப்பு பாராட்டுக்குரியது. சாமி படத்திற்கு சாய் அப்யங்கர் இசையா என்று சந்தேகத்தில் இருந்தவர்களிடம் பாராட்டு பெற்றுவிட்டார். சாயை நம்பி மாஸ் படங்களும் கொடுக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார். ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு அருமை. கருப்பு- சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கருப்பு படக்காட்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டதும் சூர்யா ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். இந்நிலையில் இன்று படம் பார்த்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தீர்கள் ஆர்.ஜே. பாலாஜி?. அண்ணனுக்கு சூப்பரான படம் கொடுத்ததற்கு நன்றி என்று கூறியிருக்கிறார்கள். நிதி பிரச்சனையால் நேற்று வர வேண்டிய கருப்பு ஒரு நாள் தாமதமாக வந்தபோதிலும் அன்பான ரசிகர்களை பரமதிருப்தி அடைய வைத்திருக்கிறது. ஃபுல் மீல்ஸ் சாப்பிடது மாதிரி நிறைவாக உள்ளது என்கிறார்கள். படத்தை துவங்கும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறப்பு நன்றி தெரிவித்து கார்டு வைக்கவே தளபதி ரசிகர்கள் இம்பிரஸ்ஸாகிவிட்டார்கள். கருப்புசாமியின் அருள் இந்த கருப்பு படத்திற்கு கிடைக்கும் என்று விஜய் ரசிகர்கள் வாழ்த்தியதை சினிமா ரசிகர்கள் அனைவரும் கவனித்துவிட்டார்கள். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat