காலை சிவ சிந்தனை
==============================
சைவத்தின் சிறப்பு
================
சைவம் அனாதியானது
====================
சிவனே சைவம் சைவமே சிவன்
மானுடப் பிறவியெடுத்திருக்கும் நாம் முன் செய்த தவப்பயனால் சைவ மரபில் தோன்றும் பேறு பெற்றிருக்கிறோம்.
சைவத்தின் பெருமையானது காரணாகமத்தில்,
“சிவேன ஸ்தாபிதம் சைவம் சைவேன ஸ்தாபிதம் சிவம்”
பொருள்: சிவபெருமானால் ஸ்தாபிக்கப்பட்டது சைவ சமயம்.எப்பொழுது என்று யாருக்கும் தெரியாது.
சைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூஜிக்கப்படுபவர் சிவபெருமான். ஆகையினால் சிவத்திற்கும் சைவத்திற்கும் பேதமில்லை என்று கூறியிருக்கிறது. மேலும் "சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லை" என்ற ஆன்றோர் வாக்கினாலும் சைவசமயத்தைக் காட்டிலும் உயர்ந்த சமயம் வேறொன்றும் இல்லை என்பதை உணரலாம்.
இப்படிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய சமயத்தில் பிறந்து நான் சைவன் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் சான்றோர்களால் வகுக்கப்பட்ட தர்மங்களை கடமைகளை அனுஷ்டானங்களைக் கட்டாயம் செய்தல் வேண்டும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்



