ShareChat
click to see wallet page
search
“அழகுக்கு மறுபெயர் பெண்ணா” தேயிலைத் தோட்டத்தில் ஓடிவரும் மக்கள் திலகம் மறுபுறத்தில் இருந்து தன்னை நோக்கி ஓடிவரும் தன் காதலி ஜெயலலிதாவை பார்த்தவுடன் இன்பமாக தன் விரல்களால் அவருடைய ட்ரேட் மார்க் சொடக்கை போடுவார். “அழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா” ‘கண்ணா’ என்று இடத்தில், செல்லமாக காதலியின் விழியை சுற்றி விரல்களால் இவர் வருட, பதிலுக்கு “தமிழுக்கு மறுபெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா” என்று எம்.ஜி.ஆரின் உதடுகளை குறும்பாக ஜெயலலிதா கிள்ள இளமைத் துள்ளும் பாடல். “நூறு கோடி பாடல் நெஞ்சில் ஊறுகின்ற வேளையிது ஏடு போன்ற கன்னம் கண்டு இதழ்களாலே எழுதுவது” வாலியின் கற்பனையில் கண்ணங்கள் ஏடாகவும் இதழ்கள் தூரிகையாகவும் மாறுகின்றன. டி.எம்.எஸ் தன் குரலிலேயே எம்ஜி.ஆரின் குறும்பு சேட்டைகளை தந்துவிடுவார். ஜெயலலிதாவுக்கு எஸ்.ஜானகியைப் பின்னணி பாடவைத்திருப்பார் கே.வி.மகாதேவன். தன் குரலாலும் பாடும் திறனாலும் டி.எம.எஸ்ஸுக்கு சவால் விடுவார் ஜானகி. வயலின் இசையை இளமைத் துள்ளலோடு ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தி இருப்பார் கே.வி.எம். அதிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முத்தமிட, (காண்பவர்களுக்கு ஜெயலலிதாவின் முதுகுபுறம் மட்டுமே தெரியும்) அந்த சமயத்தில் அவரை ஒருதலை பட்சமாக காதலிக்கும் பாரதி அந்த காட்சியை காண, வயலின் சற்று படபடப்போடு இசைப்பது, காட்சியின் காதல் ரசத்தை மட்டுப் படுத்த இசையமைப்பாளர் கையாண்ட உத்தியோ என்று எண்ணத் தோன்றும். கூடவே குழையும் குழல் இசையும், பாறைகளில் மோதும் அருவியின் தாளத்தைப்போல கம்பீரமாக ஒலிக்கும் தபலாவின் தாளமும் எக்ஸ்ட்ரா இனிமை… மாமாவின் இசையில் என்றும் நினைவில் நிற்கும் மற்றுமொரு இனிய டூயட் பாடல். #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #📷நினைவுகள்
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
00:59