ShareChat
click to see wallet page
search
கண்ணுக்கு வந்த ஆபத்து கணத்தில் மறைந்தது ----------------------------------- சீடர் வக்கீல் தேவராஜ முதலியார் இது பற்றி விவரிக்கிறார் :-- 1939 ல் வக்கீல் தொழிலை விட்டு விட்டு ரமணாசிரமத்தில் வசிக்க விரும்பினேன். ஒரு அறை உள்ள குடிசை ஒன்றை கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி அனுமதி அளிப்பது ரொம்ப அபூர்வமானது. இதற்கு முன்பு மேஜர் சாட்விக் மற்றும் யோகி ராமையாவுக்கு மட்டுமே இது போல் அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நாள் என்னுடைய கண்ணில் சரளைக்கல் துண்டு ஒன்று விழுந்து விட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் G.S. மேல்கோட் என்னுடைய கண்ணை பரிசோதித்துப் பார்த்தார். சரளைக்கல் துண்டு கண்ணில் பதிந்திருக்கிறது. திருவண்ணாமலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பார்க்க வேண்டும். அங்கு முடியாவிட்டால் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கண் நிரந்தரமாக பாதிக்கப்பட்டு விடும் என்று கூறினார். நான் மனம் உடைந்து போனேன். பகவானிடம் மானசீகமாகப் பேசினேன். உங்களோடு இருந்து அமைதியையும், சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்தேன். இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா ? " என்று வருத்தப்பட்டேன். ஒரு சொட்டு விளக்கெண்ணெயை கண்ணில் விடுகிறேன். சரளைக்கல் துண்டு நெகிழ்ந்து வெளியே வருகிறதா என பார்ப்போம் என்று டாக்டர் மேல்கோட்டிடம் கூறினேன். அவர் சம்மதித்தார். பகவானுடைய ஹாலுக்குச் சென்றோம். அவரை நமஸ்கரித்தேன். அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. பகவானின் உதவியாளரிடம் இருந்து விளக்கெண்ணெய் வாங்கி கண்ணில் ஒரு சொட்டு விட்டுக் கொண்டேன். பின் டாக்டருடன் என்னுடைய அறைக்கு புறப்பட்டேன். சிறிது நேரத்திலேயே எனக்கு நிவாரணம் தெரிந்தது. உணர முடிந்தது. அறைக்கு சென்ற உடனேயே டாக்டர் மீண்டும் கண்ணை பரிசோதித்துப் பார்த்தார். சரளைக்கல் துண்டு இல்லை. மறைந்தே போனது. " அது எப்படி மறைந்தே போனது என்பதை என்னால் விளக்கிச் சொல்ல முடியாது. இது பகவானின் செயல்தான். " என்று டாக்டர் மேல்கோட் கூறினார். நமோ ரமணா 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
பகவான் ரமணர் - விழியாலே விழுங்கியருட் குரு பகவதே ஸ்ரீ ரமணாய நமோ ஓம் விழியாலே விழுங்கியருட் குரு பகவதே ஸ்ரீ ரமணாய நமோ ஓம் - ShareChat