ShareChat
click to see wallet page
search
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 17.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வேறு ====== சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ . விளக்கம் ========== குளுமையான சந்திரனுக்கும் அழகுக்கும், தந்திரங்களுக்கும், மந்திரங்களுக்கும் சுவாமியாகிய சிறப்பான வைகுண்ட குழந்தை இது. எல்லாவற்றுக்கும் தாயகமாகவும், மாயகமாகவும், நாயகமாகவும் இருக்கும் தாண்டவச் சங்கரன் என்பவர் இவ்வைகுண்ட குழந்தையே ஆவார். அழகாகவும், குளுமையாகவும், சுந்தரமாகவும், சந்திரனாகவும், மந்திர யந்திரமாகவும், பரிமாமித்திருக்கும் சூரியப் பிரகாசமான அழகு நாராயணருடைய பாலன் இந்த வைகுண்டர். இந்தக் குழந்தை சூரியன் போன்று பிரகாசிப்பவனாகவும், சாந்த முள்ளவனாகவும், பெரியவனாகவும், நீதியுள்ளவனாகவும் குலம் போன்ற ஆயுதக் கலைகளில் மகா வல்லவனாகவும் இருப்பவர் இந்த வைகுண்டர் ஆவார். . . அகிலம் ======== தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ . விளக்கம் ========== வைகுண்டர் தந்திரங்களும், மந்திரங்களும், இந்திர சாலங்களும் தெரிந்த சுந்தரமுள்ள திருமாலின் சந்ததிக்கும் சந்ததியாவார். அசுத்த வலிமிக்க கலியாகிய தீயோனையும் அவன் அநீதியையும் பலி செய்து அழிக்க வந்த புண்ணியம் பொருந்திய வீரனே இவ்வைகுண்டர். பூங்கொத்துக்களை அணிந்த நாராயணரின் சந்ததியான வைகுண்டர் மாயத் தந்திரங்களும், அழகும் பெற்ற கோசலை நாட்டை ஆட்சி புரிந்த இராமனே ஆவார். கொடுமையான கலியன் முழுதும் அழிய ஒரு கடுமையான முனை கொண்டு தாக்க அருள் பெற்று உலாவரும் வெங்கடாசல பதியாகிய வைகுண்டர் இவர். . . அகிலம் ======== சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ விரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ . விளக்கம் ========== சுத்தனாகவும், எல்லாம் கற்ற நித்தியனாகவும், எல்லாரிலுமிருந்து பேசுவோனாகவும், துலங்குகின்ற சங்கரனே இந்த வைகுண்டர். சூரனாகவும், வீரனாகவும், தீரனாகவும், நீதிமானாகவும், சூரியப்பிரகாசமுடைய சாந்த புருஷனாகவும், காரனாகவும், தாரனாகவும், இனிமை பொருந்தியவனாகவும் காட்சியளிக்கும் இவ்வைகுண்டர் எங்கு இடர் உருவாகுமோ அங்குத் தோன்றி அந்த இடரைப் போக்கிடுவார். தொந்தரவும், அநீதிகளும் அதிகமாகப் பொருந்திய பொல்லாங்குகளை எல்லாம் பலியிட்டு அருளிய புண்ணியன் இந்த வைகுண்டர். . . அகிலம் ======== தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ திகதிக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ . விளக்கம் ========== தீரனாகவும், பாதுகாவலனாகவும், பெருமை பொருந்தியவனாகவும், வீரனாகவும், செந்திலம்பதியில் வளர்கின்ற சந்திரனாகவும் இருப்பவர் இந்த வைகுண்டர். வைராக்கியம், கடுமையான வேகம் இவற்றுக்கு இருப்பிடமும் இருக்கையுமாக இருக்கும் வைகுண்டர் இந்த உலகத்தில் காட்சியளிக்கும் கலியுகத்தின் எல்லாத் திசைகளிலும் அமர்ந்து அருள் புரிவார். நீதிமானாகவும், உயரிய குணமுடையவனாகவும், சாந்தனாகவும், பெரியவனாகவும், நீதிக்குப் பெரியவனான கோகுல வாசனாகிய கண்ணன்தான் இவர். நெருப்புக் குண்டமான கலியின் வடிவை அழித்துக் கருமை பொருந்திய சுருட்டான உடலையுடைய கலியன் குலம் முழுவரும் அழித்து உருக வைக்கும் வீரத்திலகன் இவர். . . அகிலம் ======== இப்படி ஒளவை மாது இயல்புதா லாட்டக் கண்டு செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார் . விளக்கம் ========== இவ்வடியாக சரசுபதி இதமாகத் தாலாட்டு பாடியதைக் கண்டு, அடியார்கள் என்று சொல்லப்படும் முனிமார் எல்லாரும் வைகுண்டர் பாதத்தில் சென்று வணங்கினர். பாரம்பரிய முறைபோல் தொட்டிலில் வைகுண்டர் பள்ளி கொள்ள, தேவர்கள் எல்லாரும் இசை பாடலானார்கள். . . . அகிலம் ======== பள்ளி உணர்த்தல் =================== பல்லவி ========= பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் . விளக்கம் ========== சிவனின் மருமகனே, நீ அறிதுயில் விட்டு எழுவாயாக. அகிலம் ======== சரணம் ======= பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும் வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக் கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே கோவேங் கிரிவள ரீசர் மருகோனே வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில் வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் . விளக்கம் ========== வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக, பாற்கடல் மீது விரைவாகத் தோன்றி வந்தவனே, நீ தெளிவுடன் துயில் விட எழுவாயாக. வானத்தில் வெள்ளி உதித்ததும், துயில் கொள்ளுகின்ற வேத நாராயணர் சீதகோபாலர்க்குச் சந்தியாக வந்த வைகுண்டமாகிய தலைவனே, கோவேங்கிரியல் அமர்ந்திருக்கும் ஈசருடைய மருமகனே, வள்ளியின் மணவாளன் முருகன் வாழ்கின்ற திருச்செந்தூர்க் கடலில் வந்து பிறந்து நல்ல தெச்சணம் சென்றிட வரும் வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் விட்டு எழுவாயாக. . . அகிலம் ======== வேக முடனொரு சந்தத்து ளாடியே மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும் ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும் தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர் சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும் ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு எம்பி யெனவரும் தம்பிரா னானவா பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் . விளக்கம் ========== மிகவும் வேகமாக ஓம் என்னும் சத்தத்தினுள் ஆடிக் கொண்டே இவ்வுலகோர்க்கு உதவிகள் செய்யவும், ஆகாத தீய எதிரிகளை அக்கினியில் தள்ளவும், நல்லவர்களுக்கு நன்மை செய்யவும், தாகத்திற்குரிய தண்ணீரினால் மனச் சஞ்சலம் முதலிய நோய்களையும் வேறு பிணிகளையும் அச்சமின்றித் தீர்க்கவும் நாரண வேந்தர்க்கு இன்று ஒரே குழந்தை என வந்து பிறந்த வைகுண்ட மூர்த்தியே நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் விட்டு எழுவாயாக. . . அகிலம் ======== மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும் அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும் காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும் தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் . விளக்கம் ========== மூர்க்கனாகிய கலியுகக்க கலியரசனை அழித்தும் கொடுமை செய்யும் அரக்கர்களை வெட்டியும் ஆரவாரத்துடன் அன்பத்தாறு தேசங்களையும் அடக்கி ஒரு குடைக்குள் ஒரே சொல்லுக்குக் கீழ் அரசாளவும், கற்பைக் காத்தல் என்னும் மகாதருமத்தைச் செய்திடவும், தோன்றிய எல்லாவற்றுக்கும் கர்த்தனான அரிகிருஷ்ணருடைய புத்திரராகச் சக்தி பெற்ற உயர்வான வைகுண்டராசரே, தருமபதியில் வாழும் பொறுமைக் குலத்தின் தலைவனே வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் எழுவாயாக. . . அகிலம் ======== தம்பில மானகு றோணிகுண் டோமனைத் தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை வம்பு இரணிய ராவண சூரனை மகோதர னானது ரியோதனப் பாவியைக் கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர் கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே நம்பின அன்பருக் குபகார சாலியே நாரணா சீமைக் கரிவரி யானவா பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் . விளக்கம் ========== தமது பலத்துக்குச் சமபலமான குறோணி, குண்டோமசாலியன் மிகுந்த சக்தியுடைய தில்லைமல்லாலன், சூரன், வம்பு பிடித்த இரணியன், இராவணன் என்னும் அரக்கன் மகோதரன் என்னும் பாவி துரியோதனன் ஆகியயோரைக் கொம்பினாலும், ஆரவாரத்துடன் எழும்பியும், அம்பினாலும், கொன்று அழித்த கோபாலகிருஷ்ணருடைய குழந்தையாகிய வைகுண்டரே, உன்னை நம்பினவருக்கு உதவியாக நிற்பவரே, நாராயணா, இவ்வுலகுக்குத் திருமாலின் துன்ப விதியைத் தீர்ப்பவனாக இருக்கின்றவனே, வைகுண்டா, நீ துயில் விட்டு எழுவாயாக. சிவனின் மருமகனே, நீ துயில் எழுவாயாக. . அகிலம் ======== பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர் தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார் . விளக்கம் ========== இப்படியாகத் தேவர்கள் தம்மைத் துயில் எழச் செய்யப் பாடியதைக் கருணையுடன் கேட்டு வைகுண்டர் தம் மனதில் அவர்கள்பால் அன்பு கொண்டு துயில் விட்டு எழுந்து, அருகில் நின்ற தேவர்கள் எல்லார்க்கும் நல்ல பல ஆசிகளும் கொடுத்தார். பிறகு தமது தொட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தெழுந்து தமது தகப்பனாராகிய நாராயணரின் பாதங்களை வணங்கிச் சொல்லலுற்றார். . . தொடரும்... அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் - DMuthu Prakash 16May 2026 8:27 pm DMuthu Prakash 16May 2026 8:27 pm - ShareChat