ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY சிந்தனை.*.( 18.04.2026.) .................................................................. *" வெறுப்புணர்ச்சி வேண்டாம்''..* ........................................................ உலகில் உங்கள் எதிர்ப்படும் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா?.. ஏன் முடியாது? . குழந்தைகளாக இருக்கும் போது அந்த நமக்கு உணர்வு இல்லையே.பெரிய ஆளாக வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர் விட்டு படர்ந்து விருட்சமாக இன்று வளர்ந்து இருக்கிறது.. வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள். உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள். குழந்தைகளாக இருக்கும் போது மனதில் துளிர் விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும் வளர்ப்பாலும் நம் மனதில் மெல்லக் குடி புகுகிறது. விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்டுகின்றோம். இந்த வெறுப்பு உணர்வால் நமக்குக் கிடைப்பது ஒன்றும் இல்லை. நண்பர்களின் வழி காட்டல், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பது தான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியது தான். உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்து விட்டால் அவ்வளவு தான். அனைவருமே உங்களுக்கு எதிரியாகத் தோன்றுவார்கள். சரி.இந்த வெறுப்புணர்ச்சியை ஒழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்..? உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் காட்ட வேண்டும். இனம், நிறம், சாதி, மதம், பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.- அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது. வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் குறுகிய மனப்பான்மையுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும். வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். *ஆம்.,நண்பர்களே..,* முதலில் நாம் நம்மை சோதித்துக் கொள்வோம்.. தவறான, முழு விவரம் தெரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் மீது வரும் எண்ணங்களே வெறுப்பு உணர்வுக்கு அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலை நிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்பு உணர்வு ஒழிந்து அன்பு மலரும்... (உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐
innraya SINTHANAY - நமக்கு அடுத்த நிமிடம்கூட நிச்சயம் இல்லை. இதில் கோபம்திமிர்வெறுப்பு ஆணவம் போன்றவற்றை விட்டு மனிதர்களிடம் அன்பு 88 செலுத்துங்கள். நமக்கு அடுத்த நிமிடம்கூட நிச்சயம் இல்லை. இதில் கோபம்திமிர்வெறுப்பு ஆணவம் போன்றவற்றை விட்டு மனிதர்களிடம் அன்பு 88 செலுத்துங்கள். - ShareChat