MUTHUPANDIAN RAMKUMAR
1K views • 1 months ago
#💪😄💐🙏 ஆடிப்பெருக்கு விழா 🙏💐😄💪 #💮ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்🙏 #ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🙏 #ஆடிப்பெருக்கு #தமிழ் ஆடிப்பெருக்கு 3.8.2026 ஆடிப்பெருக்கு..!!
ஆடிப்பெருக்கு திருநாள்.. ஏன் கொண்டாடுகிறோம்? புராணம் அறிவோம்..!!
💫 நாளை 3.8.2026 ஆடிப்பெருக்கு. இதனை ஆடி 18ஆம் பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவர்...
💫 மழைக்காலத்தின் துவக்கமான ஆடி மாதத்தில், காவிரி அன்னை புதுப்பொலிவுடன் ஆற்றில் ஓடி வருவாள். இவ்வாறு காவிரியில் நீர் பெருகி வரும் நாளையே ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம்.
💫 இந்நாளில் விவசாயிகள் புதிய விதை விதைத்து உழவுப் பணிகளை துவங்குவார்கள்.
💫 மக்கள் யாவரும் காவிரி அன்னையை வேண்டி, ஆற்றங்கரையிலும், குளக்கரைகளிலும் சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
💫 நீர்நிலைகளுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
💫 இவ்வாறு நாம் வழிபடும் ஆடிப்பெருக்கு நாளை ஏன் ஆடி 18ஆம் தேதி கொண்டாடுகிறோம்?.. குறிப்பாக இந்த தேதியில் கொண்டாடுவதற்கான புராணக் கதை என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க..!!
புராணக் கதை:
💫 பொதுவாகவே ஆடி 1ஆம் தேதி முதல் ஆடி 18ஆம் தேதி வரை போர்க்காலம் என நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம்.
💫 இதற்கு காரணம் மகாபாரதத்தில் நடைபெற்ற குருஷேத்திரப் போராகும்.குருஷேத்திரப் போரானது பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஆடி 1ஆம் தேதி முதல் ஆடி 18ஆம் தேதி வரை ஏற்பட்டது.
💫 குருச்ஷேத்திரப் போரின் முதல் நாளில், அபிமன்யுவால் காக்கப்பட்டாலும், பாண்டவர்கள் படையினரில் பலர் உத்தரனாலும், சுவேதனாலும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டனர்.
💫 பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிசெய்ய, பீஷ்மரை வெல்ல சிகண்டியைப் போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார்.
💫 அவரின் ஆலோசனைபடியே சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.
💫 இதை பயன்படுத்திய அர்ஜூனன் சிகண்டியின் பின் இருந்து, தனது அம்புகளால் பீஷ்மரின் உடலை அம்புப்படுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.
💫 16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக நியமிக்கப்பட்ட கர்ணன், போரில் இலட்சக்கணக்கான பாண்டவப் படைகளைக் கொன்றான். அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.
💫 ஆயிரக்கணக்கான பாண்டவப் படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.
💫 ஒரே நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
💫 குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகளை ஏவச் சொன்னார். இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.
💫 அதன்பின் துரியோதனனும் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்நாளே ஆடி 18ஆம் நாளாகும்...💐
14 shares