#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி ஏப்.28
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வஉசி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் இயந்திரங்களை பெறும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் (2026) 23.4.2026 ல் நடைபெற்று முடிந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தூத்துக்குடி அண்ணா பல்கலை கழக வளாகத்திலுள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக செயல்படுகிறது. இங்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் பெறும் இடம் மற்றும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் "பாதுகாப்பு அறை"(Strong Room) ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு தன்மை, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைபடி மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


